செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

பாரத் ரத்னாவுக்கு தகுதியா சச்சின்?


சச்சின் ஒரு சாதனையாளர் என்பதிலோ கிரிக்கெட்டில் உலகில் ஜாம்பவான் என்பதிலோ யாருக்கும் மாற்றுக்கருத்திருக்க முடியாது.

தமது திறமையான ஆட்டத்தின் மூலம் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார், ரசிக்க வைத்தார்.

இதையெல்லாம் அங்கீகரிக்கும் நாம், அவர் இந்த 24 வருட காலமும் நாட்டிற்கே சேவை செய்தார் என்று புகழப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

கிரிக்கெட் விளையாடுவது மக்களை ரசிக்க வைப்பதற்கும், 
அதை வைத்து பல்வேறு நிறுவனங்களும் கோடிகள் பார்ப்பதற்கும்,
அதன் பிரதிபலனாய் சம்மந்தப்பட்டவர் நீச்சல் குளத்துடன் அரண்மனை கட்டுவதற்கும் தானே தவிர இதில் நாட்டிற்கான சேவை என்று எதுவுமில்லை.

நாட்டு கௌரவத்தை காத்தார், சேவை செய்தார் போன்ற புகழ்மாலைகளெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்கள் தானே தவிர, intellectuals எனப்படும் நுண்ணறிவாளர்கள் சபையில் இதற்கு அங்கீகாரம் கிட்டாது.

இன்னும் சொல்லப்போனால், குடி நீருக்கான வரி கட்டாமல் பாக்கி வைத்திருப்பதாய் சமீபத்தில் தான் மும்பை மாநகராட்சி இவரை குறித்து குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டிருந்தது.
இது நாட்டுக்கான சேவையல்ல, துரோகம் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதே சமயம், சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கலாமா? என்றால் அதில் நமக்கெந்த ஆட்சேபனையும் இல்லை.

சினிமாவில் கூத்தடித்து அந்த பணத்தை கொண்டு அரசியல் நடத்திய எம்ஜிஆருக்கு கொடுக்கலாம் என்றால்,

இசை, நாட்டியம் என மக்களின் மூளையை மழுங்கச் செய்த, நாட்டு முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத ரவிஷங்கருக்கும் லதா மங்கேஷ்கருக்கும் பிஸ்மில்லாஹ் கானுக்கும் கொடுக்கலாம் என்றால்,

அத்துறைகளை விடவும் சற்றே மேம்பட்ட துறையொன்றில் ஜொலித்த சச்சினுக்கு கொடுப்பதில் நமக்கு எதிர்கருத்தேதுமில்லை.

என்ன ஒன்று, இனி முதல்

""பாரத் ரத்னா விருது என்பது நாட்டுக்கு சேவை புரிந்தவர்களுக்காக வழங்கப்படுவது""

என்கிற அடிக்குறிப்பை மாற்றி விடுங்கள் .. என்பது மட்டுமே நமது கோரிக்கை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக