ஞாயிறு, 15 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : கொள்கை முரண்


நபி (ஸல்) அவர்கள் தொப்பி, தலைப்பாகை அணிந்தார்கள் என்று நமக்கு தெரிந்திருந்தும் கூட, அவ்வாறு அணிவது மார்க்கமில்லை என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். காரணம், அவர்கள் அணிந்தது உண்மை என்றாலும் கூட அணியுமாறு சொல்லவில்லை.

இதை செய்யுங்கள், இப்படி செய்யுங்கள் என்று அவர்கள் சொன்னால் தான் ஒரு காரியம் மார்க்க காரியம் என்று ஆகுமே தவிர, வெறுமனே அவர்கள் செய்தவை மார்க்கமாகாது, என்கிற நுணுக்கமான வேறுபாட்டை கூட துல்லியமாய் புரிந்து, பிறருக்கு விளக்கியும் வருகிறோம்.

இந்த நுணுக்கமான புரிதல் தான், இந்த சமூகத்தில் புரையோடிப் போன ஏராளமான நூதனங்களிலிருந்து மக்கள் விடுபடுவதற்கு முக்கிய காரணம்.

ஆனால், இந்த புரிதலில் தெளிவாக இருக்கும் சிலர், பிறை விஷயத்தில் விஞ்ஞான கணிப்பை ஏற்கலாம் என்கிற நிலைபாட்டில் இருப்பது கொள்கை முரண்பாடாகும்.

எப்படி தலைபாகை அணியுமாறு நபி அவர்கள் சொல்லாமல் வெறுமனே அணிய மட்டும் செய்தார்களோ அது போல் பிறை பார்த்து மாதங்களை தீர்மானிக்குமாறு அவர்கள் சொல்லாமல் வெறுமனே ஏதேனும் ஒரு முறையில் செயல்படுத்த மட்டும் செய்திருந்தால் அப்போது பிறையை கண்ணால் பார்க்கத்தான் வேண்டும் என்பது கட்டாயமில்லை எனவும், பார்க்கவும் செய்யலாம், பார்க்காமல் கணிக்கவும் செய்யலாம் என்கிற தொப்பி குறித்த நிலைபாட்டை போன்ற நிலைபாட்டை தான் எடுத்திருப்போம்.

ஆனால், பிறை பார்த்தலை அவர்கள் செயல்படுத்தியதோடு அல்லாமல் இவ்வாறு செயல்படுத்துங்கள் என்று சொல்லவும் செய்து விட்ட பிறகு, அவர்கள் எதை சொன்னார்களோ அது தான் மார்க்கம், எப்படி செய்ய சொன்னார்களோ அப்படி செய்வது தான் மார்க்கம் !!

மார்க்கத்தை பின்பற்றுவதில் இருக்கும் ஆர்வத்தை விட புரிய வேண்டிய முறையில் புரிந்து பின்பற்ற வேண்டும் என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக