திங்கள், 2 டிசம்பர், 2013

ரங்கனாத் மிஸ்ரா அறிக்கையின் பரிந்துரைகள்


ரங்கனாத் மிஸ்ரா அறிக்கையின் பரிந்துரைகளில் முக்கியமான‌ சில..


எல்லா வகையிலும் பிந்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனம் 16(4) விதி அனுமதிக்கிறது.

எனவே நாடு முழுவதும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எல்லா துறைகளிலும் நூற்றுக்கு பத்து என்கிற விகிதத்தில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

வேலை வாய்ப்பு மட்டுமின்றி சுய தொழில் துவங்க‌ கடன் கொடுப்பதிலும் முஸ்லிம்களுக்கு 10% தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மாண‌வர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்த போதும் அவர்களுக்கு வாய்ப்பளிப்பது போல் முஸ்லிம்களுக்கும் மதிப்பெண்ணை தளர்த்த வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் இஸ்லாமிய பல்கலைகழகம் அமைக்க வேண்டும்.

கல்வியில் பிந்தங்கியிருக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்க வேண்டும்.

நவோதயா போன்ற இலவச தரமான கல்வி முறை திட்டத்தை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் திறக்க வேண்டும்.

சொந்த வீடு இல்லாத ஏழை முஸ்லிம்களுக்கு இலவச வீடு கட்டித் தர வேண்டும்.


பொருளாதாரத்தில் பிந்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு சமையல் கேஸ் இணைப்பை மிகக் குறைந்த விலையில் வழங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக