செவ்வாய், 17 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : தோல்வியை ஒப்புக்கொண்ட காங்கிரஸ்


பாஜக பிரதமர் வேட்பாளர் பெரும்பான்மையான மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் என்பது நிதர்ஸனமான உண்மையாக இருப்பினும், அவருக்கென பிரத்தியேகமான ஆதரவலை வீசுவது போன்ற மாயை ஊடகங்களால் பொய்யாக பரப்பபடுகின்றன.

இது குறித்து ஊடகங்களை சாடுவது ஒரு புறமிருக்க, இது போன்ற மாயத் தோற்றம் உருவாவதற்கு, அதன் எதிரி கட்சியான காங்கிரஸ் கட்சியே முக்கிய காரணம்.

ஏற்கனவே திக்விஜய் சிங் மோடியை புகழ்ந்து பராட்டியது பற்றியும், மோடியை நாங்கள் கவனத்துடன் தான் எதிர்கொள்கிறோம் என மெத்தம் படித்த மன்மோகன் சிங் பேசியதும் முதிர்ச்சியற்ற பேச்சுக்கள் என்கிற குற்றசாட்டை நாம் வைத்திருந்தோம்.

அதன் தொடர்ச்சியாய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் நேற்று உதிர்த்த முத்து இதோ..

"வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது" !!??!@@!!#@#

அதாவது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாது என்று வெட்கமில்லாமல் இப்போதே ஒப்புக்கொண்ட புண்ணியவான் நம்ம சிதம்பரம் அய்யா !!

நாம் வெற்றி பெறுவதற்கு நமது திறமையும் மக்கள் ஆதரவும் ஒரு வகையான காரணம் என்றால், எதிரிகளின் பலகீனம் இன்னொரு காரணமாக அமையும்.

இதை கூட புரிந்து கொள்ளாத முதிர்ச்சியற்றவர்கள் எவ்வாறு இந்தியாவில் அரசியல் செய்கிறார்கள் என்பது தான் ஆச்சர்யம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக