வியாழன், 12 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : ஓரின சேர்க்கை


ஓரின சேர்க்கைக்கு தடை விதித்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தை எதிர்த்து இப்போது ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. இந்த கூட்டம் ஓரின சேர்க்கை தான் அறிவுப்பூர்வமானது எனவும், அதை தடுப்பது தனி மனித சுதந்திரத்தை தடுப்பதாகும் எனவும் குரல் கொடுத்து வருகிறது.

இந்த கூட்டம், யாருக்கும் தெரியாத சிறு சிறு குழுக்களா? இல்லை. 

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகள் தான் ஓரின சேர்க்கை எனும் அனாச்சாரத்தை ஆதரித்து குரல் கொடுக்கிறார்கள்.

தனி மனித ஒழுக்கத்தையும், அதன் வெளிப்பாடாய் சமுகம் பெறும் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகத்தான் தனி மனித சுதந்திரம் பேணப்பட வேண்டுமேயல்லாமல், ஒழுக்கத்தை மீறிய தனி மனித சுதந்திரம் என்பது சுத்த பேத்தல் என்பதை இவர்கள் புரிய மறுப்பது வியப்பாய் உள்ளது.

தனி மனித சுதந்திரம் என்கிற அளவுகோல் கொண்டு மட்டும் சிந்திப்பதாக இருந்தால் மது அருந்துவதிலிருந்து, விபச்சாரம் புரிவதிலிருந்து சமூகத்தில் நிலவும் அனேக குற்ற செயல்களுக்கும் இதே அளவுகோலை பொருத்தி இவர்கள் அனுமதிக்க வேண்டும்.

விபச்சாரம் புரிகிறவனை சட்டமியற்றி தடுப்பது என்பது அவனது சுதந்திரத்தை பறிப்பதாக ஆகாதா? என்பதற்கு மெத்தம் படித்த மேதாவிகள் விடை சொல்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக