வெள்ளி, 13 டிசம்பர், 2013

முகனூல் பதிவுகள் : மனோஇச்சை மார்க்கமாகாது


நாம் விரும்புகிற‌ விதத்தில் மார்க்கம் இருக்க வேண்டும் என்று எண்ணுவது ஒரு வகையான நோய்.

மார்க்கம் என்பது அல்லாஹ்வுக்குரியது. எது சரி, எது தவறு என்பதை அவன் நமக்கு சொல்லித் தர வேண்டும், நமக்கு விருப்பமில்லாமல் இருந்தாலும் சரியே.

இதை அடிப்படை செய்தியாய் மனதில் கொண்டோமேயானால், மார்க்கத்தின் சட்ட திட்டங்களை கேலி செய்யும் கூட்டம் உருவாகியிருக்காது.

தொடையை மறைக்கும் வகையில் ஆடை அணிவது என்பது நமது விருப்பமாய் இருந்தாலும் கூட, திறந்து வைக்கலாம், வெளிக்காட்டலாம் என்பது தான் அல்லாஹ்வின் அனுமதி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை, சத்தியம் !

இதை முஸ்லிம் 4414, புஹாரி 371, புஹாரி 3695,இப்னுமாஜா 793, புஹாரி 3661, புஹாரி 365 போன்ற ஏராளமான ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன.

மார்க்கம் என்பது நபியின் சொல், செயல் தானே தவிர, நமது சுய விருப்பமோ மனோ இச்சையோ இல்லை.

வழக்கம் போல், குர்ஆன், ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்பதில் உறுதியாய் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் அனைவருமே இவ்விஷயத்தில் தங்கள் மனோ இச்சையை தான் மார்க்கமாகுவார்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக