வியாழன், 17 ஏப்ரல், 2014

வேலிக்கு ஓணான் சாட்சியா?



ஆரத்தி தட்டை வைத்துக் கொண்டு நின்ற கிழவியிடம் ஆசி பெறுவதற்காக அவசர அவசரமாக ஓடோடி சென்ற மானமுள்ள கட்சியின் வேட்பாளரை தடுத்து நிறுத்தி காதர் மைதீனின் ஆறாவது கடமை குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க சொன்னது நமது தவறு தான் !

அட போயா ஆறாவது கடமைன்னு அவர் பேசிட்டாராம், அதை நான் கண்டிக்கணுமாம்..

நான் பாரு, கிழவியவே கடவுளாக்கியிருக்கிறேன்,

இப்போ காதர் மைதீனுக்கு நான் கண்டனம் தெரிவிக்கணுமா அல்லது அவர் எனக்கு கண்டனம் தெரிவிக்கணுமானு இப்போ நீங்களே கன்ஃபியூஸ் ஆயிட்டீங்க பாத்தீங்களா..

இது தாண்டா எனக்கு வேணும்..

இந்த காலத்துல வந்துகிட்டு கொள்கையாவது கத்திரிக்காயாவது.. வெள்ளந்திப் பசங்க இந்த தவ்ஹீத் ஜமாஅத் காரனுவோ..
உலகம் தெரியாம இருக்குறாங்க..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக