வியாழன், 17 ஏப்ரல், 2014

முரண்படும் சலஃபிகள்


சஹாபாக்களில் எவருமே எந்த தவறையும் செய்ததே கிடையாது என்றோ, குர்ஆன், நபி மொழி பற்றி சரியான புரிதல் இல்லாமல் ஒருவர் கூட இருக்கவில்லை என்றோ யாருக்காவது உத்திரவாதம் வழங்க முடியுமா ?
என்றால் நிச்சயம் அது முடியாது.

அவர்களும் மனிதர்கள் தான், அவர்களும் தவறு செய்வார்கள், தவறாக புரிவார்கள். இதற்கு பல சான்றுகளும் ஹதீஸ்களில் உள்ளன என்பது ஒரு புறமிருக்க, இதையெல்லாம் ஒப்புக் கொண்டே சஹாபாக்களின் சொல்லும் மார்க்கம் தான் என்று முரண்பட்டுக் கொள்ளும் கூட்டத்தார் இருப்பது தான் ஆச்சர்யம்.

சஹாபி ஒருவர் ஒன்றை தவறாக புரிந்துள்ளார் என்றால் அது தவறான புரிதல் என்று எதை அளவுகோலாக கொண்டு நாம் சொல்கிறோம்?

குர் ஆன், ஹதீஸுக்கு மாற்றம் என்பது தான் அளவுகோல்.

சஹாபி ஒருவர் ஒன்றை சரியாக புரிந்துள்ளார் என்றால் அது சரியான புரிதல் என்று எதை அளவுகோலாக கொண்டு நாம் சொல்கிறோம்?

குர் ஆன், ஹதீஸுக்கு அது ஒத்துப் போகிறது என்பது தான் அளவுகோல்.

ஆக, சஹாபாக்களின் கூற்றும் மார்க்க ஆதாரம் என்று கூறுவோரும் கூட அறிந்தோ அறியாமலோ குர் ஆன், ஹதீஸ் மட்டும் தான் மார்க்கம் என்பதை சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் தான் உள்ளனர் !

அவர்கள் இதை வெட்கப்பட்டுக் கொண்டே சொல்கிறார்கள்,
நாம் அதை தெளிவாக, நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறோம் !
அது தான் வேறுபாடு !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக