செவ்வாய், 1 ஏப்ரல், 2014

யூகம் எப்படி உறுதி செய்யப்பட்டதாக ஆகும்?


இரு வாரங்களுக்கும் மேலாக தேடப்பட்ட மலேசிய விமானம் குறித்த எந்த தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், அது ஆஸ்திரேலயா அருகே இந்தியப் பெருங்கடலில் விழுந்துவிட்டது (விழுந்திருக்கக் கூடும் என்று இல்லை !) என மலேசியப் பிரதமர் உறுதிப்பட அறிவித்திருப்பது வியப்பை அளிக்கிறது !

இதற்கு என்ன ஆதாரம்? என்று சீன அரசாங்கம் கேட்டதற்கு, வானிலை மோசமாக இருப்பதால் எங்களால் தொடர்ந்து தேட முடியவில்லை, தேடல் பணி நிறுத்தப்பட்டுள்ளது என்று ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

அப்படியானால் விமானம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தானே அர்த்தம் ?

இந்தியப்பெருங்கடல் பக்கம் விழுந்திருக்கக்கூடும் என்கிற யூகத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பென்றால் இதை முன்னரே அறிவித்திருக்கலாமே?

கடலில் விழுந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று அனைவருமே நம்பிய நேரத்தில், இல்லை இல்லை அது கடத்தப்பட்டிருக்கலாம் என்று சொன்ன அரசு, இப்போது யூகத்திற்கு கூட இடமளிக்காமல் உறுதிப்பட அறிவிப்பு செய்திருப்பது நிஜமாகவே வியப்பானது தான் !

இறைவன் நாடினாலே தவிர,பயணிகளின் உடல்களை காணாத வரை அவர்கள் உறவினர்களுக்கு ஆறுதல் கிடைக்காது என்பது மட்டும் உறுதி !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக