வியாழன், 17 ஏப்ரல், 2014

நாடு விளங்கிடும் !


நாட்டில் ஊழலை பெருக்கெடுத்து ஓட செய்து பாமரர்களையெல்லாம் ஓட்டாண்டிகளாக ஆக்கிய அரசியல்வாதிகளுக்கு கட் அவுட்டும் மலர் மாலைகளும் இடுவார்களாம்..

தேசிய ஒருமைப்பாடு என்கிற பெயரை சொல்லி மனிதனை மனிதனோடு மோத விட்டு, அதனால் விளையும் சாதி மதக் கலவரங்களில் குளிர் காயும் தலைவர்களுக்கு பின்னால் சென்று விசிலடித்து வாழ்க கோஷமிடுவார்களாம்..

சினிமா என்ற‌ பெயரில் விபச்சாரத்தை பட்டவர்த்தனமான தொழிலாக ஆக்கி பொது மக்களின் மூளையை மழுங்கடிக்க செய்து, அதன் மூலம் வருவாய் ஈட்டும் சினிமாக்காரர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பார்களாம்..

தனி மனித ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கும் போலி ஆன்மீகவாதிகளை எதிர்ப்பதை விட்டு விட்டு அவர்கள் பின்னால் இன்றைக்கும் சீடர்களாய் வலம் வருவார்களாம்..

சமூகத்தை சிறிது சிறிதாக சுரண்டி அழிக்கும் இது போன்ற காளான்களுக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க வக்கற்ற இந்த சமூகம்,

கிரிக்கெட் போட்டியில் 21 பந்துகளில் 11 ரன் அடித்து விட்டார் என்பதற்காக யுவ்ராஜ் சிங் வீட்டில் கல்லெறிகிறார்களாம்..

நாடு விளங்கிடும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக