திங்கள், 3 ஜூன், 2013

தஜ்ஜால், ஈசா நபி அற்புதங்களும் மறுக்கப்பட வேண்டிய ஹதீஸ்களா??



சூனியம் கண் திருஷ்டி போன்றவை அல்லாஹ்வுக்கு இணையான காரியங்கள் என்று கூறி மறுக்கும் நீங்கள் எப்படி தஜ்ஜால் சம்மந்தமான ஹதீஸை மட்டும் ஏற்றுக்கொள்வீர்கள்??


ஒரு குறிப்பிட்ட நபர், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட விதத்தில் குறிப்பிட்ட காரியத்தை செய்வார் என்று மனித தன்மைக்கு அப்பாற்ப்பட்டதாக குர்ஆனோ ஹதீசோ ஒருவரை பற்றி கூறினால் அதை நம்பலாம், நம்ப வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அது அல்லாஹ்வுக்கு இணையானதில்லை.

குறிப்பிட்ட நேரத்திலும், குறிப்பிட்ட விதத்திலும் மட்டும் தான் அவரால் இதை செய்ய முடியும் என்கிற விதியே, அவர் அல்லாஹ்வின் தன்மையை கொண்டிருக்கவில்லை, மாறாக அல்லாஹ் தான் சோதனைக்காக இந்த ஆற்றலை அவருக்கு வழங்கியுள்ளான் என்கிற கருத்தை அழுத்தமாக புரிய வைக்கிறது,

சாமிரி என்பவன் மாட்டை போல ஒன்றை செய்கிறான், அது சத்தம் போடுகிறது என்று குர்ஆன் சொல்கிறது என்றால் அந்த நேரத்தில் அது மாடாக ஆனது, இன்னொரு சந்தர்ப்பத்தில் அது ஆகி இருக்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அது சத்தம் போடாது.

ஈசா நபி இறந்தவர்களில் சிலரை உயிர் கொடுத்து எழுப்பியதும் இதே நிலையில் தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலவை பிளந்தார்கள் என்றால் அதுவும் இதே விதிக்கு உட்பட்டு தான்.

கியாமத் நாளுக்கு சமீபமாக தஜ்ஜால் சில அற்புதங்களை செய்து காட்டுவான் என்றால் அதையும் இதே அளவுகோலின் படி தான் நாம் புரிய வேண்டும்.

அதே சமயம், இவர்களுக்கு எல்லாம் இத்தகைய அற்புத சக்தியை அல்லாஹ் வழங்கி இருக்கிறான் என்பதை நம்புவதும், எந்த மனிதனாக இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும், உலகின் எந்த பாகமானாலும், எந்த காலகட்டமானாலும், எந்த மனிதரையும் எந்த வித புற சாதனமும் இன்றி வீழ்த்தி விடலாம் என்று நம்புவதும் மலைக்கும் மடுவுக்கும் இடையே இருக்கும் வேறுபாடாகும்.

இந்த அடிப்படை வேறுபாட்டை கூட நாம் புரியாமல் இருப்பதால் தான் பில்லி சூனியம் என்றும் மாய மந்திரம் என்றும் கண் திருஷ்டி என்றும் ஊரை ஏமாற்றி திரிகிறது ஒரு கூட்டம் !


இது தொடர்பாக மேலும் விரிவாக பின்னர் எழுதப்படும் இன்ஷா அல்லாஹ் !




1 கருத்து:

  1. அற்புதமான பதிவு!! இது கூட ஏன் விளங்கவில்லை சூனியத்தை நம்போக்கூடியவர்களுக்கு??!!

    பதிலளிநீக்கு