வெள்ளி, 21 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : தவறுகள்



தவறுகள் எல்லாருக்கும் ஏற்படும் என்பதை உளப்பூர்வமாக நம்பியதால் தான் நாம் சுன்னத் (?) ஜமாஅத்தினர் இல்லை.
அதனால் தான் நாம் மத்ஹப்வாதிகள் இல்லை,
அதனால் தான் நாம் சஹாபாக்கள் சொல்வதும் மார்க்கம் தான் என்று கூறவில்லை.

எந்த மனிதனாக இருந்தாலும் அவன் தவறுகள் செய்யக்கூடியவன் தான், அவ்வாறே அல்லாஹ் எல்லாரையும் படைத்திருக்கிறான் என்பதை உறுதியுடன் நம்பியதோடு மட்டுமல்லாமல் அதை நமது வாழ்வியல் நடைமுறையில் செயல்படுத்தியும் வருகிறோம் என்பதால் தான் இன்று நாம் ஏகத்துவ வாதிகளாக திகழ்கிறோம்.!

இந்த நம்பிக்கை நம் மனதில் இருப்பதை கொண்டு நாம் பெருமை அடைகிறோம், இந்த நம்பிக்கை இருக்கும் காலமெல்லாம் நாம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொண்டே இருக்கலாம்.

எப்போது இந்த நம்பிக்கையை விட்டும் தடம் புரள்கிறோமோ, அப்போது ஏகத்துவமும் நம்மிலிருந்து அகன்று விடும் என்பதை நம் சகோதரர்களும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக