சனி, 25 அக்டோபர், 2014

சோதித்து பார்த்து நம்புவது தான் நபிவழி


சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அவை நாம் பேசுவதை கேட்காது, நமக்கு பதிலும் தராது..
இதை இப்படி வெறுமனே சொல்லி விட்டு செல்லவில்லை இப்ராஹிம் நபி.
மாறாக, எந்த ஆற்றலுமற்ற அந்த சிலையிடம் நேருக்கு நேராக நின்று பேசுகிறார்கள்.
சாப்பிட்டீர்களா? என்கிறார்கள்.
ஏன் பேசாமல் இருக்கிறீர்கள் என்று கேள்வியெழுப்புகிறார்கள்.
என்ன ஆச்சு உங்களுக்கு என்று கேட்கிறார்கள்.
எதற்குமே அவற்றால் பதில் சொல்ல முடியவில்லை என்பதை, சிலைக்கு சக்தி இருப்பதாக நம்புகிற கூட்டத்தாரிடம் இவ்வாறு செய்து காட்டி தான் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இதை அல் குர் ஆன் 37:91 இல் பார்க்கலாம்.
சாப்பிடும் ஆற்றலை கொண்டிராத சிலையிடம் சாப்பிடுமாறு சொன்ன இப்ராஹும் நபி இணை வைத்தவரா?
நாம் பேசுவதை கேட்கும் ஆற்றலை கொண்டிருக்காத சிலையிடம் பேசியதன் மூலம் அவர்கள் அல்லாஹ்வின் ஆற்றல் அந்த சிலைக்கும் இருப்பதாக தான் நம்பினார்களா?
நிச்சயமாக இல்லை !
இணை வைப்பை வேரோடு பிடுங்கி எறியும் காரியம் தான் இது !!
சிலைக்கு கேட்கிற ஆற்றல், சாப்பிடுகிற ஆற்றல் என எந்த ஆற்றலும் இல்லை என்பதை சோதனைக்கு உட்படுத்தி நிரூபித்துக் காட்டியவர்கள் தான் ஏகத்துவ தந்தை இப்ராஹிம் நபி !
சோதிக்கும் வாய்ப்பிருப்பவற்றை சோதித்து தான் நம்பவும் வேண்டும்,
சோதித்து தான் பிறருக்கு பிரச்சாரமும் செய்ய வேண்டும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக