சனி, 25 அக்டோபர், 2014

சஹாபியின் பெயரோடு ரலி என்று சொல்வது கட்டாயமா?


சஹாபியின் பெயரோடு ரலியல்லாஹு அன்ஹு (ரலி) என்று சேர்த்து சொல்வது கட்டாயமில்லை என்கிற செய்தி பலருக்கும் தெரியவில்லை.
எந்த அளவிற்கென்றால், ஒருவர் அபுபக்கர் சித்தீக் என்று மட்டும் சொன்னால், அப்படி சொன்னவரை ஏளனமாய் பேசியும் திட்டியும் தீர்க்கின்றது ஒரு கூட்டம். ரலி என்று கூட சொல்ல தெரியவில்லை என்று, ஏதோ ரலி என்று சேர்த்து சொல்லாமல் விடுவது உலக மகா பாவச்செயல் போன்று சித்தரிக்கின்றது !
ஒரு படி மேலே சென்று, சம்மந்தப்பட்டவரை நாய் என்றும் மூடன் என்றும் மூன்றாம் தரத்தில் திட்டவும் செய்கின்றனர்.
உனக்கு மார்க்கம் தெரியவில்லையென்றால் வாய் மூடிக்கொண்டு இருப்பது தான் உனக்கும் நல்லது, உன் கண்ணியத்திற்கும் நல்லது. அதை விட்டு, மார்க்கம் போதிக்கும் அறிஞர்களை ஏளனம் செய்யும் அடிப்படை தகுதி உனக்கு இருக்கிறதா என்று சிந்தித்துக் கொள்.
சஹாபாக்களின் பெயரை சொன்னால் கூடவே ரலி என்று கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும் என்று நீ எந்த கூறு கெட்ட குப்பை மதரசாவில் ஓதிய ஆலிமிடம் படித்தாயோ அவன் உனக்கு சொல்லி தந்திருப்பான்.
14 ஆண்டு மதரஸாவில் ஓதிய அவனுக்கும் மார்க்கம் தெரியாது, மவ்லானா சொல்லி விட்டால் அது தான் வேத வாக்கு என்று கருதும் உனக்கும் அதை அறிந்து கொள்ள துப்பில்லை.
மார்க்க ஆய்வு என்றால் கிலோ எத்தனை என்று கேட்கும் ஜடங்களை மவ்லானாக்களாக போற்றுகிற நீ அத்தகைய வக்கினை முதலில் வளர்த்துக் கொள்.
அல்லாமல், ஏளனம் செய்து உன் தரத்தை நீயே வெளிக்காட்டாதே !!
(அறிஞர்களை நாய் என்று ஏசுவதில் சங்கோஜம் கொள்ளாத சம்மந்தப்பட்ட நபருக்கு இது அனுப்பப்பட்டிருக்கிறது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக