சனி, 25 அக்டோபர், 2014

காளியை ஈமான் கொண்டோர்


ஒருவன் ஹோமம் வளர்ப்பானாம்,
அதை வழிபடுவானாம்,
காளியை கடவுளாக நம்புவானாம்,
காளியின் பெயரைச் சொல்லி பூஜைகள் பல செய்வானாம்,
ஓம் கிரீம் சூம் என்று மந்திரங்கள் சொல்வானாம், காட்டில் தவமிருப்பானாம், 
நிர்வாணமாக அலைவானாம்,
இறந்து போன மனிதர்களின் மாமிசங்களையே புசித்து வாழ்வானாம்.
இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான, அல்லாஹ்வை மறுக்கும் இது போன்ற காரியங்கள் மூலம் ஒருவன் சூனியம் செய்தால் அந்த சூனியம் கூட பலிப்பதற்கு அல்லாஹ் நாடுவானாம் !
சுப்ஹானல்லாஹ் ! அல்லாஹ் என்றால் யாருப்பா ? உன் பக்கத்து வீட்டுக்காரனா?
கொஞ்சமாவது விவரமும், உள்ளத்தில் அவனைப்பற்றிய அச்சமும் இருக்கிறதா உங்களுக்கு ?
அல்லாஹ்வின் இலக்கணம் தெரியுமா உங்களுக்கு??
அல்லாஹ்வின் பண்புகள் பற்றிய ஞானம் உனக்கு இருக்கிறதா??
ஆனா ஒண்ணு..
சூனியத்தை நம்புகிறவர்கள் பின்னால் நின்று தொழலாமா கூடாதா என்பதில் பல நாட்களாக சர்ச்சை இருந்து வந்த நிலையில், காளியை வணங்கும் ஒரு சாமியார் செய்யும் சூனியம் கூட பலிப்பதற்கு வாய்ப்பிருக்கு என்று இவர்கள் கூறி விட்ட பிறகு எந்த குழப்பமுமின்றி அந்த சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது !!
அல்லாஹ்வை மட்டும் நம்புகிறவர்கள் யார், அல்லாஹ்வையும் காளியையும் நம்புகிறவர்கள் யார் என்று பிரித்தறிந்து கொள்கிற வாய்ப்பினை இந்த சூனிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி தந்திருக்கின்றன,
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! (ஈடு இணையற்ற அந்த ஒருவனுக்கு மட்டுமே !!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக