சனி, 25 அக்டோபர், 2014

நாங்களும் இருக்கிறோம்லே என்று காட்டிக் கொள்ளும் மன நோய்


நாங்களும் இருக்கிறோம்லே என்று அடிக்கடி காட்டிக் கொள்ளும் மன நோய்க்கு பல வருடங்களாக ஆளானவர் அபு அப்துல்லாஹ் என்பவர்.
தனது சீடர்களை அழைத்து வைத்துக் கொண்டு பிஜெவை ஏசுகிற நிகழ்ச்சியொன்றினை ஈரோட்டில் நடத்தி முடித்திருக்கிறார். வழக்கம் போல் அதுவும் நகைச்சுவையின் உச்சகட்டமாக முடிந்திருக்கிறது.
விவாதத்திற்கு தயாரா? என்று நம் சகோதரர்கள் நேரடியாக கேட்க, விவாதத்தின் மூலம் சத்தியத்தை அறிய முடியாது என்று முதலில் அடித்தார் ஒரு பல்டி.
பிஜெவை விடுங்கள், மற்ற தாயிகளுடன், மற்ற அறிஞர்களுடன் விவாதிக்க முன்வருகிறீர்களா? என்று கேட்டதற்கு, தவ்ஹீத் ஜமாஅத் என்கிற பெயருடன் வந்தால் விவாதிக்க மாட்டோம் என்று அடித்தார் அடுத்த பல்டி.
நாத்திகர்களும் கிறித்தவர்களும் கூட தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை தான் சரியானது என்று கூறி விவாதிக்க முன்வரும் துணிச்சலை பெற்றிருக்கிறார்கள்,
ஏன், காளிக்கு பூஜை செய்து உனக்கு சூனியம் வைப்பேன் என்று கூறுகிற சூனியக்கார கும்பல் கூட அவன் அளவிற்கு ஏதோ குருட்டு நம்பிக்கையில் விவாதிக்க வந்து விடுகிறான்.
இவர்களுக்கு, அந்த துணிச்சல் கூட இல்லை என்பதே இதன் மூலம் நிரூபணமாகிறது.
இவர் சார்பாக பேசிய இவரது சீடர் சலீம் என்பவர், "நேயர்" நாஷித் அஹமத் என்று ஆன்லைன் பிஜெ இணையதளத்தில் பொய்யாக எழுதியுள்ளார்கள் என்று சொல்லி விட்டு
தொடர்ந்து, இவர் ஒரு மிகப்பெரிய ஆகாசப் பொய்யினை அவிழ்த்து விடுகிறார்.
""நாஷித் அஹமத் யார் என்று எங்களுக்கு தெரியும், அவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் தாயி, அவர் வாணியம்பாடி, பேரணாம்பேட்டில் இருக்கிறார்"" என்று அடித்தாரே ஒரு பொய் !!!!
நாஷித் அஹமத் யார் என்று எங்களுக்கு தெரியும் என்று கூறுகிற அளவிற்கு இந்த அப்துல்லாஹ் சலீம் நாஷித் அஹமதோடு கொண்டிருந்த நெருக்கம் என்ன? அவரென்ன நாஷித் அஹமதுக்கு மாமனா மச்சானா?
நாஷித் அஹமத் தவ்ஹீத் ஜமாஅத்தின் முழு நேர தாயி கிடையாது,
அமீரகத்தில் பணிசுமைக்கு நடுவே எழுத்திலும் அவ்வப்போது மற்ற வகைகளிலும் தாவா செய்வதை தவிர, இவர் கூறுவது போல் நாஷித் அஹமத் எந்த தேதியில், எந்த வருடத்தில் வாணியம்பாடி வந்தார், என்றைக்கு பேரணாம்பேட்டிற்கு வந்தார்?
இந்த சலீம் அவரை வாணியம்பாடியிலும் பேரணாம்பேட்டிலும் எங்கே எப்போது பார்த்தார்???
ஆதாரத்துடன் வெளியிட்டு விட்டு, தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கும் அருகதையினை பெறட்டும்.
பொய்களையும் புளுகுகளையும் அவிழ்த்து விட்டு விட்டு நீங்கள் தவ்ஹீத் ஜமாஆத்தை விமர்சிக்கிறீரா?
என்றால், சொன்னதை ஆதாரத்துடன் சொல்லவும், என்று நாஷித் அஹமத் ஆகிய நான் கேட்டுக் கொள்கிறேன்.
கணிப்பு கணிப்பு என்று கூறி ஊரை ஏமாற்றி திரிந்த காலம் போய் ..
தற்போது வருமானம் படுத்து விட்டதை தொடர்ந்து, அவ்வப்போது இவ்வாறு தெருக்கூத்துகள் நடத்தி வியாபாரத்தை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு இவர்கள் ஆளாகியிருக்கிறார்கள் என்பது தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க முன்வராமல் இவர்கள் எடுக்கும் ஓட்டத்தின் மூலம் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக