புதன், 11 ஜூன், 2014

பகவத் கீதையை வேதமாக கருதுபவர்கள்


அவசியம் ஏற்பட்டால் இஸ்லாமிய அரசாங்கத்தின் மீது போர் செய்வது கடமை என்பதாக வரக்கூடிய குர்ஆன் வசனங்களை, அது தீவிரவாதத்தை தூண்டுவதாக விமர்சனம் செய்பவர்கள், வசனங்களின் முன் பின் செய்திகளையும் படித்து விட்டு தான் விமர்சனங்களில் இறங்க வேண்டும்.

குர் ஆன் என்பது ஆட்சியையும் போரையும், எதிரிகளை கொல்வதையும் சொல்வதற்காக மட்டும் வந்த வேதமல்ல.

குர் ஆன், குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசுகிறது, தொழில் செய்வதை பேசுகிறது, வியாபார நெறிகளை போதிக்கிறது, திருமணம், விவாகரத்து, கொடுக்கல் வாங்கல், குழந்தை வளர்ப்பு, சொத்துக்களை பராமரித்தல், பாகப்பிரிவினை, அண்டை வீட்டாருக்கு பணிவிடை செய்வது, உற்றார், உறவினர்களை கவனிப்பது..,
ஏன், மலஜலம் கழித்து சுத்தம் செய்வது முதல், மனைவியுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது வரை

என ஒரு மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரையுள்ள, அனைத்து உலக காரியங்களையும் சட்ட திட்டமாக வகுத்து தரும் சட்ட நூல் தான் குர் ஆன்.

அத்தோடு நிறுத்தாமல், கடவுள் என்றால் யார், அவனை வணங்குவது எப்படி, இந்த உலகம் படைக்கப்பட்டது, அழிக்கப்படுவது, அழித்த பின் நிகழப்போவது என மறு உலகம் சார்ந்தவைகளையும் பேசுகிற ஆன்மீக நூல் தான் குர் ஆன்.

அத்தோடு, அண்டசராசரங்களின் தோற்றம் முதற்கொண்டு, சூரிய சந்திரனின் சுழற்சி முறை, காலக்கணக்குகள், ஆழ் கடல் அதிசயங்கள், விலங்குகள், பறவைகளில் ஒளிந்துள்ள விஞ்ஞான அற்புதங்கள் என அதிசயங்களையும் பேரற்புதங்களையும் பேசுகிற அற்புத நூல் குர் ஆன்.

இதில் ஆட்சியை நாம் கைபற்றும் போது, நமக்கெதிராக போர் செய்ய வரும் இஸ்லாத்தின் எதிரிகளை போரில் வெட்டி வீழ்த்துவது பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது.

எப்படி, பாகிஸ்தான் கார்கிலில் படையெடுத்து வந்த போது, இந்திய ராணுவம் அவர்களை வெட்டி வீழ்த்தியதோ, அது போல..

ஆட்சியை வைத்திருப்பவர்களின் கடமை அது. மனிதனின் அனைத்து பரிணாமங்களையும் பேசுகிற ஒரு வேத நூலானது இதையும் பேசித் தான் ஆக வேண்டும்.

ஆனால், இதை விமர்சனம் செய்யும் ஹிந்து சகோதரர்கள் வேதமாக கருதும் பகவத் கீதை எப்படி பட்டது தெரியுமா?

மஹாபாரத கதையின் ஒரு பாகம் தான் பகவத கீதை.

அதென்ன மஹாபாரத கதை?

பாண்டவ சகோதரர்களுக்கும் அவர்களது ஒன்று விட்ட சகோதரர்களான‌ கொளரவர்களுக்கும் இடையே நடைபெற்ற குருக்க்ஷேத்திர போர் தான் மஹாபாரத கதை.

இந்த போருக்கான காரணம் கூட, சகோதரர்களுக்கிடையேயான குடும்ப பிரச்சனை தான்.

பாண்டவ சகோதரர்களுக்கு வில் வித்தைகளும் போர் தந்திரங்களையும் கற்றுக் கொடுத்த குருனாதர்கள் பீஷ்மர், துரோணர் போன்றவராவர்.

தர்மத்திற்காக போர் செய்து, தங்கள் ஒன்று விட்ட சகோதரர்களான கொளரவர்களை அழிப்பதற்கு முடிவு செய்து போர்களத்தில் அணி திரண்ட பாண்டவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
.
அது என்ன அதிர்ச்சி? தங்கள் குருனாதர்களான பீஷ்மர், துரோணர் போன்றவர்களை எதிரி அணியில் அவர்கள் கண்டனர் !!

அதர்மத்திற்கு எதிராக போருக்கு தயாரான பாண்டவர்கள், தங்களது குருநாதர்களுக்கு எதிராய் போர் செய்வதா? என்று அச்சமுற்றனர்.
தங்கள் குரு நாதர்கள் அதர்மத்திற்கு ஆதரவாய் தான் நிற்கிறார்கள் என்று தெரிந்த பிறகும் கூட, குரு நாதர்களை கொலை செய்ய மனம் ஒத்துக்கொள்ளாத காரண‌த்தால் நீட்டிய வில்லை கீழே இடுகிறான் அர்ஜுனன்.

அந்த சந்தர்ப்பத்தில், அர்ஜுனனின் மைத்துன‌னான கண்ணன், அர்ஜுனனுக்கு அறிவுரை கூறுகிறான்.
அதில், போர் என்று வந்து விட்டால் நபர்களை பார்க்கக்கூடாது என்றும், தர்மமா அதர்மமா என்று தான் பார்க்க வேண்டும் எனவும், குரு நாதர்களாக இருந்தாலும் போர் செய்து அவர்களை அழிப்பது தான் சரி எனவும் அறிவுரை கூற, போருக்கு தயாராகிறான் அர்ஜுனன்.

போர் செய்ய வேண்டும்,
எதிரிகளை கொன்று குவிக்க வேண்டும்,
குருவாக இருந்தாலும் தயவு தாட்சணியம் பார்க்கக் கூடாது, அவர்களையும் வெட்டி வீழ்த்த வேண்டும்

என்று கண்ணன் கூறிய உபதேசங்களை உள்ளடக்கியது தான் பகவத் கீதை !!

பகவத் கீதையை வேதமாக கருதுபவர்கள் எப்படி குர் ஆனில் எதிரிகளை வெட்டுங்கள் என்று சொல்லப்பட்டதை விமர்சனம் செய்கிறார்கள் என்று நமக்கு புரியவில்லை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக