சனி, 28 ஜூன், 2014

கால்பந்து பைத்தியம்


கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கூட்டத்தை காண்கிற போது இப்படியுமா பைத்தியமாக இருப்பார்கள் என்று எண்ணத் தோன்றும். 
நாமே அதன் தீவிர ரசிகராக இருந்த காலத்தில் எதிலுமே அவ்வாறு அதீத வெறி எதையும் காட்டக்கூடாது என்பதை சரியாக விளங்கி வைத்திருக்கவில்லை.

இன்று இந்த கால்பந்து போட்டிக்கு மக்கள் அடிமையாகி கிடப்பதை பார்க்கிற போது, கிரிக்கெட் ரசிகர்கள் எல்லாம் ஒன்றும் இல்லை என தோன்றுகிறது.

கிரிக்கெட் ரசிகனாவது தத்தமது நாட்டு அணியை ஆதரிப்பவனாக இருக்கிறான். அது ஒரு போலி தேசப்பற்று என்றாலும் அதிலொரு லாஜிக் இருந்தது.

ஆனால் இன்று உலகக்கோப்பை கால்பந்தை ரசிக்கிறோம் என்கிற பெயரில் எந்த நாட்டுக்காரனோ எந்த நாட்டுக்காரனையோ ரசிக்கிறான், அவன் மீது பைத்தியம் கொள்கிறான். அவன் கோல் அடிக்கவில்லை என்றால் கையை கீறிக் கொண்டவன் கூட இருக்கிறான்.

மேலும், ஐபிஎல் போட்டிகள் போன்ற சில விதிவிலக்குகளை தவிர்த்து விட்டு பார்த்தால் கிரிக்கெட் ஒரு ஜெண்டில்மேன் விளையாட்டு என்கிற தகுதியை இன்னும் இழக்கவில்லை.

களத்தில் விளையாடும் வீரர்கள் ஆனாலும், ரசிக்கும் ரசிகர்கள் ஆனாலும், ஒப்பீட்டளவில் நோக்கும் போது, ஒழுக்கத்துடன் தான் இருக்கின்றனர்.

ஆனால் கால்பந்து போட்டிகளில் ஒழுக்கக்கேடுகள் மலிந்து கிடக்கின்றன எனலாம்.
ஆடுகளத்தில் அடிதடி ரகளைகளுக்கு பஞ்சமில்லை ; பார்வையாளர்கள் கூட்டத்தில் நிர்வாண ஆட்டங்களுக்கும் குறைவில்லை !

தான் விரும்பும் வீரர் அல்லது விரும்பும் நாட்டின் வெற்றியோ தோல்வியோ, கிரிக்கெட் ரசிகன் பாதிப்படைவதை விட கால்பந்து ரசிகன் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறான்.
தற்கொலை, கொலை என்கிற அளவிற்கு கூட கால்பந்து போட்டியின் முடிவு மக்களை தள்ளுகிறது என்பதையெல்லாம் சிந்திக்கையில்..

இரண்டரை மணி நேரத்தில் முடிந்து விடும் என்பதை தவிர கால்பந்தை ரசிப்பதால் கேடுகளே அதிகம் என்று புரிய முடிகிறது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக