புதன், 11 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (G)


ஐந்து வயது குழந்தையின் முதிர்ச்சியை கூட பெற்றிராத‌ மிர்சா சாஹிப்
Mirza Sahib Subject (Part 7)
----------------------------------------------------------------------------------

ஆயிரம் சாபம் என்பதை ஒரு சாபம், இரண்டு சாபம், மூன்று சாபம் என்று கூறுகிறவர் விவரமுள்ள மனிதராக இருக்க மாட்டார். 
அப்படி சிறுபிள்ளைத்தனம் காட்டுகிறவராக மிர்சா சாஹிப் இருந்ததை நாம் ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிய போது,

ஏன்? சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று 33 தடவை சொல்வதில்லையா?

என்று இதை கொண்டு அதை நியாயப்படுத்தும் பதிலொன்றை சொல்லியுள்ளீர்கள்.

இது நபி (சல்) அவர்களின் கூற்றினையே கேலி செய்வதாகும் என்பதை கூட புரிய மாட்டீர்களா?

அல்லாஹ்வின் மீது 33 தடவையல்ல, ஆயிரம் முறை, லட்சம் முறை திக்ர் சொன்னாலும் ஒவ்வொரு திக்ருக்கும் நன்மை.
நாம் சொன்னால் ஒவ்வொரு திக்ருக்கும் அல்லாஹ் நன்மை தருவான், ஆகவே தான் சொல்கிறோம்.
அதை நபியவர்கள் சொல்லுமாறு நமக்கு கட்டளையிட்டதால் சொல்கிறோம்.

இதை சொல்வதால், ஒருவரை உலக விஷயங்களை கருத்தில் கொண்டு ஏசும் பொருட்டும், திட்டுவதற்காகவும், ஒரு சாபம், இரண்டு சாபம் என்று ஆயிரம் வரை சொல்வது அர்த்தமுள்ளதாகி விடுமா?

70 சஹாபாக்களை எதிரிகள் கொலை செய்த போது அதற்காக மிகவும் வருந்திய நபி (சல்) அவர்கள், அந்த மக்கத்து காஃபிர்களுக்கு எதிராக நாள்தோறும் அல்லாஹ்வின் சாபம் வேண்டி குனூத் ஓதினார்கள் ; மிகவும் மன உளைச்சலுக்கு ஆலாகியிருந்தார்கள்.

நபிக்கு மன உளைச்சல் என்பதால் அல்லாஹ்விடம் அவர்கள் துஆ செய்த முறை இப்போது மிர்சா சாஹிப் செய்தது போல் தானா?

அந்த காஃபிர்களுக்கு எதிராக இப்படி தான் துஆ செய்தார்களா?

லஃனத் உண்டாகட்டும் என்பது நாம் செய்யும் துஆ.

சுப்ஹானல்லாஹ் என்பது துஆ அல்ல. அது அல்லாஹ்வை புகழும் வார்த்தை. அவன் தூயவன் என்று அவனை போற்றும் வார்த்தை.

சுப்ஹானல்லாஹ் என்று ஒரு முறை சொன்னாலும் லட்சம் முறை சொன்னாலும் அதில் அர்த்தம் இருக்கிறது.

அதே போன்ற அர்த்தம் சாபம் விடும் போதும் தொனிக்க வேண்டுமென்றால், ஆயிரம் முறை சபிக்கிறேன், ஆயிரம் முறை சபிக்கிறேன் என்று வேண்டுமானால் ஆயிரம் முறையோ லட்சம் முறையோ சொல்லிக் கொண்டிருக்கட்டும், அது தவறில்லை.

ஆனால், ஒரு முறை சபிக்கிறேன், இரண்டு முறை சபிக்கிறேன், மூன்று முறை சபிக்கிறேன்..... ஐம்பத்தி ஆறு முறை சபிக்கிறேன்......

நூற்றி எண்பது முறை.. இருனூற்றி ஆறு முறை, எழுனூற்றி முப்பத்தி ஏழு முறை..
என்று ஆயிரம் வரை சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை, மாறாக அது ஒரு வகையான மன நோய் என்கிற முடிவை தான் சொல்கிறது.

அடுத்து, இந்த ஆயிரம் சாபம் என்கிற கேலிக்கூத்தை நியாயப்படுத்த குர் ஆனையே ஆதாரமாக காட்ட முயற்சி செய்திருக்கிறீர்கள்.
அதாவது, 55 ஆம் அத்தியாயத்தில் ஃபபி அய்யி ஆலாஹி ரப்பிக்குமாத்து கத்திபான்..

என்று அல்லாஹ் திரும்ப திரும்ப சொல்கிறானாம்..

அப்படி அல்லாஹ் திரும்ப திரும்ப சொல்வது போல தான் ஒரு சாபம், இரண்டு சாபம் என்று சொல்வதும்.. என்று அஹமதிய்யா ஜமாஅத்தினரின் அறிவாற்றலை ஒற்றை சான்றின் மூலம் நிரூபணம் செய்துள்ளீர்கள் !

ஃபபி அய்யி ஆலாஹி ரப்பிக்குமாத்து கத்திபான்.. என்றால் ""உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?""

என்பது அர்த்தம்.

ஒரு காகிதத்தை எடுத்துக் கொண்டு ஒரு சாபம், இரண்டு சாபம் என்று ஆயிரம் வரை எழுதுவதற்கு இந்த இறை வசனத்தை சான்றாக காட்டுகிறீர்கள் என்றால், அல்லாஹ்வும் இந்த அத்தியாயத்தில் இந்த வசனத்தை தொடர்ச்சியாக..

உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

என்று கூறிக்கொண்டே இருக்க வேண்டும்..

அப்படி இடையில் எந்த வாசகங்களையும் சேர்க்காமல் தொடர்ச்சியாக இதை மட்டுமே சொல்லிக் கொண்டே இருந்தால்.. நீங்கள் சொல்வதிலும் சிறிதேனும் அர்த்தமிருக்கும்.

ஆனால், அந்த அத்தியாயத்தில் அப்படியா அல்லாஹ் சொல்கிறான்?

பூமியை பார், வானத்தை பார்.. செடி கொடிகளை பார் என்று தனது படைப்பின் அதிசயத்தை பட்டியலிட்டு விட்டு பின் உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?
என்கிறான்.

பின், மண்ணால் படைக்கப்பட்ட மனிதனை பற்றி சொல்லி, நெருப்பினால் உருவாக்கப்பட்ட ஜின்களைப் பற்றி சொல்லி அதற்கும் உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? என்று கேட்கிறான்.

இரண்டு கிழக்கு திசை, இரண்டு மேற்கு திசை என்கிற வியத்தகு அறிவியல் உண்மையொன்றினை சொல்லி விட்டு பிறகு உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? என்று கேட்கிறான்.

இரண்டு கடல்களுக்கிடையே கண்களுக்கு புலப்படாத திரையொன்று இருக்கிறது என்கிற விஞ்ஞான பேருண்மையை கூறி விட்டு உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? என்று சொல்கிறான்.

கியாமத் நாள் என்கிற ஒரு நாள் வரும், அன்று அனைவருமே அழிவீர்கள், அல்லாஹ் மட்டுமே நிலைத்திருப்பான் என்கிற அச்சத்தை ஊட்டி விட்டு உங்கள் இறைவனின் அருட்கொடை களில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்? என்று கேட்கிறான்.

இவ்வாறு, அதை பார், அதை பொய்யென கருதுவாயா?

இதோ இதை பார்.. இதை வைத்து அல்லாஹ்வை மறுப்பாயா?

அந்த படைப்பினை பார், இந்த அறிவியல் உண்மையை பார்..

இதை சிந்தித்து பார்த்து அல்லாஹ்வை உன்னால் மறுக்க முடியுமா?

என்று கேட்பதற்கும்,

ஒரு சாபம்
இரண்டு சாபம்
மூன்று சாபம்
..
..
..
ஐம்பத்தி மூன்று சாபம்

அறுனூற்று எண்பத்தி எட்டு சாபம்

தொள்ளாயிரத்து நாற்பத்தி இரண்டு சாபம்..
..
..
ஆயிரம் சாபம்

என்று ஒருவர் சொல்வதும் சமமானதா?

அதே போன்று 2: 160 வசனத்தில் (ஏக இறைவனை) மறுத்து, மறுத்த நிலையிலேயே மரணித்தோர் மீது அல்லாஹ்வின் சாபமும்6 வானவர்கள் மற்றும் அனைத்து (நல்ல) மனிதர்களின் சாபமும் உள்ளது.

என்று அல்லாஹ் சொல்வதை எடுத்துக் காட்டி, இங்கே அல்லாஹ் சபிக்கிறான்,
வானவர்கள் சபிக்கிறார்கள், மனிதர்கள் சபிக்கிறார்கள் என்றெல்லாம் தனித்தனியே ஏன் அல்லாஹ் சொல்ல வேண்டும்?
என்கிற கேள்வியையும் கேட்கிறீர்கள்.

நீங்கள் வைக்கும் எந்த சான்றாவது பொருளுள்ளதாக, அர்த்தமுள்ளதாக இருக்கிறதா என்று சற்றே நடு நிலையுடன் சிந்தித்துப் பார்க்கவும்.

அல்லாஹ் சபிக்கிறான், பின் வானவர்கள் சபிக்கிறார்கள் என்று ஒவ்வொருவரும் சபிக்கிறார்கள் என்று சொல்வதும்,

ஒரு சாபம், இரண்டு சாபம், நூறு சாபம், ஐனூறு சாபம் என்று சொல்வதும் சமமா?

அப்படித்தான் உங்கள் அறிவுக்கு புலப்படுகிறதா? என்றால் உங்கள் முடிவுக்கே இதை விட்டு விடுகிறேன்.

அல்லாஹ் சபிக்கிறான், வானவர்கள் சபிக்கிறார்கள் என்று சொல்வது போல தான் இதுவும் என்றால்..

இதிலும் அதே போன்று அவர் சொல்லியிருக்க வேண்டும்.

உன்னை நான் சபிக்கிறேன்
உன்னை எனது மகன் சபிக்கிறான்
உன்னை எனது மனைவி சபிக்கிறாள்
உன்னை எனது பாட்டி சபிக்கிறாள்
உன்னை எனது பக்கத்து வீட்டுக்காரன் சபிக்கிறான்

என்று அவரொரு பட்டியலை தந்திருந்தால் தான் இந்த வசனத்தை அதற்கு உங்களால் முட்டுக் கொடுத்திருக்க முடியும்.

ஒரு வாதத்திற்கு இந்த இறை வசனத்தை அல்லது முந்தைய வசனமான எதை பொய்யென கருதுகிறீர்கள் என்கிற வசனத்தை
கூட எப்போது நீங்கள் உங்கள் கொள்கைக்கு சான்றாக காட்டலாம் என்றால்..

இந்த சாபத்தினை கூட ஒவ்வொரு காரியத்தையும் சொல்லி சொல்லி பின் சாபமிட்டார் என்றால் அப்போது இது சரி.
எப்படி?

அன்று என்னிடம் ஐயாயிரம் ரூபாய் வாங்கி விட்டு ஏமாற்றினாயே, உனக்கு சாபம்.
என்னைப் பற்றி அவதூறு சொல்லி திரிந்தாயே, உனக்கு சாபம்
வியாபாரத்தில் மோசடி செய்தாயே, உனக்கு சாபம்
ஊழல் செய்தாயே, உனக்கு சாபம்

இவ்வாறு அவன் செய்த குற்றங்கள் ஒவ்வொன்றையும் சொல்லி சொல்லி சபித்தார் என்றால் அப்போது மிர்சாவை நாம் முட்டாள் என்று சொல்ல மாட்டோம்.

ஒரு காரியத்திற்கு ஒரு சாபம். அந்த காரியத்தை சொல்லி சபிக்கிறார் என்றால் அது தான் அர்த்தமுள்ளது.

அல்லாமல், பள்ளிக்கூடம் செல்லும் எல்கேஜி குழந்தை, நான் டென் டைம்ஸ் உனக்கு ஃப்ரென்ட்,
நீ 100 டைம்ஸ் எனக்கு எனிமி..

என்றெல்லாம் சொல்வது போன்ற சிறுபிள்ளைத்தனம் தான் இந்த ஒரு சாபம், இரண்டு சாபம் என்பதும்..

இன்னும் சொல்லப்போனால், அந்த எல்கேஜி குழந்தை கூட 10 டைம்ஸ் ஃப்ர்ன்ட் என்று தான் சொன்னதே தவிர, 1 டைம் ஃப்ர்ன்ட், 2 டைம்ஸ் ஃப்ரென்ட், 5 டைம்ஸ் ஃப்ர்ன்ட்.. என்று சொல்லவில்லை. அப்படி சொல்லவும் செய்யாது.

அதை விடவும் சிறுபிள்ளைத்தனம் தான் இந்த மிர்சாவின் செயல்.

குழந்தைகள் செய்தால் குழந்தைதனம், மழலை பருவம் என்று ரசிக்கலாம்.

வளர்ந்து ஆளான ஒருவர் சொன்னால் மூளை வளர்ச்சி குன்றியவர் என்று தான் சொல்ல முடியும்.

கேட்டால், நபி (சல்) அவர்களையும் எதிரிகள் பைத்தியக்காரர் என்று தான் சொன்னார்கள் என்கிற ரெடிமேட் பதிலை மட்டும் எல்லாவற்றுக்கும் வைத்திருக்கிறீர்கள்.

அதாவது, நான் ஏற்கனவே சொன்னது போல், கீழ்பாக்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒருவன் ஒரு நாள் திடீரென வந்து நான் தான் அல்லாஹ்வின் நபி என்று சொன்னால்
இந்த காதியானி மதத்தவர்கள் அதை ஏற்று விடுவார்கள்.

என்னப்பா? கீழ்பாக்கத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறவரை நபி என்கிறாயே? என்று காரணம் கேட்டால், நபி (சல்) அவர்களை கூட எதிரிகள் பைத்தியக்காரர் என்று தானே சொன்னார்கள்? என்று எதிர் கேள்வி கேட்பார்கள்.

நல்லா இருக்குதுங்க உங்க கொள்கை !!

தொடர்ந்து, நானே மர்யம், நானே மிர்சா..
நானே ஈஸா, ஈஸாவே நான்.
அவன் தான் நான், நான் தான் அவன்
அவள் தான் நான், நான் தான் அவள்
அவனை பெற்றெடுத்தவன் நான்.
ஆனால் நான் பெண்

என்றெல்லாம் மிர்சா சாஹிப் உளரித்தள்ளியதையும், அதை கூட நியாயப்படுத்தி இஸ்லாத்தை விட்டும் வெகு தொலைவில் நிற்கும் உங்கள் அஹமத்தியா மதத்தின் லட்சணத்தையும் வரிக்கு வரி அடுத்தடுத்த பகுதிகளில் பார்க்கலாம்.

இந்த ஒரு கூற்று ஒன்றே போதும், இது போன்ற கேடுகெட்ட மதம் இந்த உலகில் இல்லை என்பதை புரிய..

ஹிந்து மதத்தை விடவும் கீழ்த்தரமான, இஸ்லாத்திற்கு நேர் எதிரான கொள்கையை தான் இந்த மிர்சா சாஹிப் பிரச்சாரம் செய்திருக்கிறார் என்பது இந்த " நானே ஈஸா, நானே மர்யம்" என்கிற இவரது உளரல்களின் மூலம் இன்ஷா அல்லாஹ் நிரூபணம் ஆகும்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக