புதன், 11 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (C)


மிர்சா சாஹிப் சுய சிந்தனையுள்ள‌ மனிதர் தானா?

Mirza Sahib subject (Part 3)
-----------------------------------------------------------------------------

மிர்சா சாஹிபின் வண்டவாளங்களுக்குள் நுழைவதற்கு முன், மேலும் சில வாதங்களை எழுப்பியிருக்கிறீர்கள். அவற்றை வரிசையாக பார்க்கலாம்.

//அபுஜாகிலுக்கு நபியின் தகுதி தென்பட்டதா? என்ற என் கேள்விக்கு உன் பதில் என்ன?//

என்று கேள்வியெழுப்பியிருக்கிறீர்கள்.

அதாவது, மிர்சாவிடம் நபிக்கான தகுதி தென்படுகிறதா? என்கிற எனது கேள்விக்கு எதிர் கேள்வியாம் இது..

அப்படி எண்ணிக்கொண்டு இதை கேட்கிறீர்கள். ஆனால், இப்படியுமா ஒருவர் வாதம் புரிவார் என்று படிப்பவர்கள் சிரிப்பதற்க்கே தவிர வேறு எதற்குமே இது போன்ற உங்கள் கேள்விகளும் வாதங்களும் பயன்படவில்லை என்பதை நீங்காள் புரிந்து கொள்வது உங்களுக்கு நல்லது.

அபு ஜஹல் தன்னை நபியென்று வாதிடவில்லை. வாதிட்டால் அவனிடமும் நபிக்கான தகுதி தென்படவில்லை என்பதை நிரூபிப்போம். இப்போது தன்னை நபியென வாதிடும் மிர்சா சாஹிபை பற்றி மட்டும் பார்ப்போம்.

///தினம் தோறும் அரசியலை பற்றி கட்டுரை எழுதியும், பேசியும் வரும் உனக்கு மிர்சா சாகிபின் தகுதியை பற்றி பேச என்ன தகுதி உள்ளது?//

என்று அடுத்ததாக கேட்டுள்ளீர்கள்.

தினம் தோறும் அரசியல் பேசினால் மிர்சா சாஹிபின் வண்டவாளங்கள் மறந்து விடுமா?
மிர்சா சாஹிபின் வண்டவாளங்களை பற்றி சொன்னால் அதற்கு மட்டும் பதில் சொன்னால் போதுமே.. எதற்கு இது போன்ற சம்மந்தமில்லாத எதிர் வாதங்கள்?

///மிர்சா சாஹிப் பற்றிய ஆட்சேபனைகளை எடுத்து வைக்கவேண்டும். நான் அதற்கு பதில் அளிப்பேன். இவ்வாறு இருவரின் விவாதமே, உண்மை எது என வெளிப்படுத்தும். அதை விடுத்து ஆரம்பத்திலேயே தகுதியை பற்றி மனம்போன போக்கில் பேசுவதற்கு, அரசியல் nashid-க்கு எந்த உரிமையும் இல்லை.///

என்று தொடர்ந்து கூறுகிறீர்கள்.

மிர்சா என்பவர் நபியில்லை, அவர் உங்களையும் என்னையும் போன்ற நல்ல மனிதரும் இல்லை, அவர் ஒரு பொய்யர், ஏமாற்றுப் பேர்வழி, பித்தலாட்டக்காரர், அவர் நபியாக இருப்பதற்கு மட்டுமல்ல, சாதாரண மனிதராக இருப்பதற்கு கூட தகுதியற்றவர் என்பது தான் எனது நிலை.

அதனால் தான் உங்களோடு விவாதம் செய்யவும் முன் வந்திருக்கிறேன்.

எனது நிலையே அது தான் எனும் போது விவாதம் துவங்கும் முன்பே நான் அப்படி சொல்லத் தான் வேண்டும்.

ஏன் நான் கூட இப்படி கேட்கலாமே?

மிர்சா சாஹிப் நபி என்பதற்குரிய ஆதாரங்களை நீங்கள் எடுத்து வைக்கவேண்டும். நான் அதற்கு பதில் அளிப்பேன். இவ்வாறு இருவரின் விவாதமே, உண்மை எது என வெளிப்படுத்தும். அதை விடுத்து ஆரம்பத்திலேயே அவர் நபி தான் அவர் நபி தான் எனறு சொல்லும் எந்த உரிமையும் உங்களுக்கு இல்லை.

இப்படி நானும் சொல்லலாம் தானே?

நான் மிர்சாவின் கீழ்தரமான தகுதியை ஆரம்பத்திலேயே பேசக்கூடாது என்றால், அவர் மேன்மைமிக்கவர் என்று நீங்களும் பேசக்கூடாது என்று நானும் தான் சொல்வேன்.

பிறகு என்ன தான் விவாதம் செய்வது??

ஆகவே இது போன்ற அர்த்தமற்ற அறிவுரைகளை தவிர்க்கவும். அவர் நபி என்று நீங்கள் சொல்லலாம் என்றால் அவர் பொய்யர் என்று நானும் சொல்லலாம்.
உங்கள் நம்பிக்கை அது, எனது நம்பிக்கை இது !
அவரவர் நம்பிக்கையை நியாயப்ப‌டுத்தி தான் விவாதமே செய்கிறோம் !

///200 நாடுகளில் உள்ள 20 கோடி மக்கள் மிர்சா சாகிபை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே மிர்சா சாகிபின் தகுதி முழு உலகிலும் நிரூபணம் ஆகிக்கொண்டே வருகிறது. ///

என்கிறிர்கள்.

சாய்பாபாவை கூட தான் லட்சக்கணக்கான மக்கள் வணங்கினார்கள்,
வீடியோ புகழ் நித்தியானந்தாவுக்கு இந்தியா முழுவதும் சீடர்கள் இருக்கிறார்கள்.
நமது ஊரில் பீடி இழுத்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு பீடி மஸ்தான் அவ்லியா தர்கா என்கிற பெயரில் தர்காவையே கட்டி பல நூறு பேர் தினம் தரிசனமும் கூட செய்கிறார்கள்.
பொட்டல்புதூரில் யானையை அடக்கம் செய்து அதை வழிபட தினமும் மிக நீண்ட வரிசை நிற்கிறது.

இதுவெல்லாம் அவர்கள் கொண்டிருக்கும் கொள்கை நேரானது என்பதற்கு அளவுகோல் ஆகி விடும் என்று எந்த மூடரும் எண்ண மாட்டார்.

ஆகவே, 200 நாடுகள் அல்ல, ஒட்டு மொத்த உலகமும் அஹமதியா மதத்தை தழுவினாலும் சத்தியம் அங்கே இருக்கிறதா? என்று மட்டுமே அறிவுள்ளவர் சிந்திப்பர். இது போன்ற வாதங்களும் எடுபடாது என்பதை நினைவூட்டுகிறேன்.

////தமிழகத்தில் மட்டும் தவ்ஹீது பேசும் நீங்கள், ரோட்டில் போகிற ஒருவரை நபி என நம்பவேண்டுமா என கேட்பதில் ஆச்சரியம் இல்லை தான்.////

தமிழ் மட்டும் தெரிந்தால் தமிழகத்தில் தான் தவ்ஹீத் பேச முடியும். எதை செய்ய இயலுமோ அதை செய்தால் போதும்.
ஆனால், தமிழ் மட்டும் பேசி, தமிழகத்தில் தவ்ஹீத் ஏற்படுத்திய புரட்சி சூராவளியில் தூக்கி வீசப்பட்டதன் கதி, நீங்களும் உங்கள் மதமும் நாட்டின் தெருக்கோடியில்..

நீங்களும் தமிழ் பேசக்கூடியவர்கள் தான் என்பதையும், உங்களால் தமிழகத்தில் சாதிக்க முடிந்தது என்ன? என்பதையும் சிந்தித்தால் இது போன்ற அபத்தங்களை வாதமாக வைக்க மாட்டீர்கள் !

///// எதன் அடிப்படையில் நீங்கள் அரசியலை பின் பற்றி செல்கிறீர்கள்? அரசியல் என்பது பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்படும் மார்க்கம். சிறந்த அரசியல் தலைவர்கள் கூட அரசியலை அசிங்கமாகத்தான் பார்த்தார்கள்.////

என்கிறீர்கள்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்? அரசியல் என்பது ஹராம் என்கிறீர்களா?
ஜனனாயகம் என்பது தவறு என்று சொல்லி திரியும் கூட்டத்தின் கொள்கை தான் உங்களுடையதுமா? என்றால் அதை வெளிப்படையாக சொல்லுங்கள்,
அது போன்ற மடமை வேறு இல்லை என்பதை தனி தலைப்பிட்டு விளக்குகிறேன்.

///ஈஸா நபி உயிரோடு இருக்கிறார்கள் என்ற கொள்கையும், நபிக்கு பின் நபி இல்லை என்ற கொள்கையும் உன் முப்பாட்டன்மார்களுடைய ( யூத, கிறிஸ்தவர்கள் ) கொள்கை அல்லாமல் வேறு என்ன?/////

என்று கேட்கிறீர்கள். அதாவது, இதை கேட்கிறோமே, படிப்பவர்கள் நம்மை கேலி செய்து சிரிப்பார்களே, நமது சிந்தனையை பற்றி தவறாக அல்லவா எடை போடுவார்கள் என்று சிந்திக்காமலே வாதம் செய்து வருகிறீர்கள் என்பது எனக்கு கவலையை தருகிறது.

ஈஸா நபி இறக்கவில்லை என்று நான் நம்புகிறேன், எனது பாட்டன், முப்பாட்டனும் அதை தான் நம்பினார்கள். ஆகவே நான் எனது பாட்டன், முப்பாட்டனை பின்பற்றுகிறேன் என்கிறீர்கள்.

ஏன்? அல்லாஹ்வை தொழ வேண்டும் என்று நீங்களும் தான் நம்புகிறீர்கள். அதையே தான் உங்கள் பாட்டன், முப்பாட்டனும் நம்பினார்கள். நீங்கள் ஏன் இந்த விஷயத்தில் உங்கள் பாட்டன் முப்பாட்டனை பின்பற்றுகிறீர்கள்??

இப்படி நான் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்??

எதை பேசினாலும் சிந்தித்து பேசுங்கள் என்று மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அர்த்தமேயில்லாத இது போன்ற வாதங்களை வைத்தால், உங்கள் மதத்தை சார்ந்த சிந்தனை சொரூபிகள் வேண்டுமானால் உங்களை ஆஹா ஓஹோ என புகழலாம்,
மற்றவர்களிடம் அவை எடுபடாமல் போய் விடும்..
இதை மீண்டும் அன்புடன் எனது சிறு அறிவுரையாக உங்களுக்கு சொல்கிறேன்.

///ஆனால் குரானில் கூறும் science ஐ கொண்டே அஹ்மதிகள் புதிய வானம் படைக்க இருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியாது. (கிண்டல் பண்ணுவதாக இருந்தால் பண்ணிக்கோ)///

என்று அடுத்து பேசுகிறீர்கள். கிண்டல் பண்ணுவதாக இருந்தால் பண்ணிக்கோ என்று சொல்லி விட்ட பிறகு மனம் இடம் தரவில்லை, ஆகவே, நோ கமன்ட்ஸ் !

மர்யம் தான் மிர்சா, மிர்சா தான் மர்யம், மசீஹ் தான் மிர்சா, ஈசா தான் மிர்சா, மிர்சா தான் ஈசா, ஈசப்னு மர்யம் என்றால் மிர்சாவுக்குள் மிர்சா..
மிர்சா கர்ப்பமுற்றார், மிர்சா கருத்தரித்தார், மர்யம் தான் அந்த மிர்சா, மிர்சா பெற்றது ஈசா..

என்றெல்லாம் புல்லரிக்கும் அளப்பெரிய தத்துவங்களை பொழியும் அஹம்திய்யா மதம், புது வானமென்ன, புது சூரியன், புது சந்திரன், புது நட்சத்திரம் என எல்லாவற்றையும் படைக்கும் ஆற்றல் பெற்றவர்கள் தான்.. யாரால் மறுக்க முடியும் !

/////நீங்கள் குரானில் நிறைய கப்சாகளை வைக்கவில்லையா? நிறைய முரண்பாடுகள் வைக்க வில்லையா?/////

கப்சாக்கள் வைத்தது யார் என்கிற பட்டியலை தந்த போது தானே அதை விட்டும் விரண்டோடி, 13 மசாலாக்களில் ஏழுக்கு மட்டும் பதில் என்கிற பெயரில் சமாளித்து விட்டு மீதியை கண்டுகொள்ளவே செய்யாமல் நழுவியிருக்கிறீர்கள்??

மிர்சா சாஹிப் விட்டடித்த கப்சாக்களை தான் வண்டி வண்டியாக பார்க்க இருக்கிறோமே.. பொறுங்கள்.. நீங்கள் எங்களை சொல்கிறீர்களா??

////ஏராளமான முறைகளில் சரி பார்த்து, உண்மையாளர் தான் என உளமாற நம்பி உள்ளீர்கள் என்றால், உங்களுக்கு இடையே ஒருவருக்கொருவர், காஃபிர், பொய்யன் என்றெல்லாம் ஏன் கூறுகிறீர்கள். இதற்கு நீங்கள் ஒருவருக்கொருவர் “கொஞ்சுகிறீர்கள்” என்று அர்த்தம் கொடுக்கவா?///

என்று அடுத்த வாதமொன்றை வைத்திருக்கிறீர்கள்.

ஏராளமான முறையில் சரி பார்த்து உண்மையாளர் என்று நம்பித் தான் நபி (சல்) அவர்களை ஏற்கிறோம், ஆமாம், அதனால் என்ன?
அதனால் இன்னொருவரை பார்த்து நீ பொய்யன் என்று சொல்லக் கூடாதா?

எனது பார்வையில் நான் சரியான கொள்கையில் இருக்கிறேன், நீங்கள் பொய்யான கொள்கையில் இருக்கிறீர்கள். உங்கள் பார்வையில் நீங்கள் சரியான கொள்கையில் இருக்கிறீர்கள், நான் பொய்யான கொள்கையில் இருக்கிறேன்..

இருவருமே அவரவர் நிலையை ஆய்வு செய்து சிந்தித்து தான் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். பின் ஏன் ஒருவரையொருவர் பழித்துக் கொள்கிறோம்??

உங்கள் கேள்வியை உங்களிடமே கேட்கிறேன்.

ஆக, இதுவும் அர்த்தமுள்ள வாதமில்லை !

////நீ எழுதிஉள்ளாய் : “எந்த காஃபிர் வந்து கேட்டாலும், இவர் அல்லாஹ்வின் தூதர் தான் என்பதை எந்த முஸ்லிமாலும் நிரூபிக்க முடியும்.”
பதில்: எப்படி? ஒரு கூட்டம் கூறுகிறது, தொழும்போது கையை நெஞ்சில் கட்டினால் தான் அல்லாகுவின் தூதரை ஏற்றுக்கொள்வேன் என்று.
மற்றொரு கூட்டமோ கையை வயிற்றின் மேல் கட்டினால் தான் அல்லாகுவின் தூதரை ஏற்றுக்கொள்வேன் என்று.////

என்று அடுத்து கூறியிருக்கிறீர்கள்.

அதாவது, இயல்பாய் நல்ல சிந்தனையுள்ள ஒருவர் கூட அஹமதிய்யா எனும் புது மதத்தை தழுவிவிட்டால் சிந்தனை தடுமாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்று வரிக்கு வரி நிரூபிக்கிறீர்கள்.

மிர்சா சாஹிபை பின்பற்ற துவங்கும் எவராக இருந்தாலும் வாதம் என்கிற முறையில் இப்படி தான் அர்த்தமேயில்லாமல் பேசிக் கொண்டிருப்போம் என்றும் நிரூபிக்கிறீர்கள்.

எந்த காஃபிர் வந்து கேட்டாலும் முஹம்மது என்பவர் நபி தான் என்று எங்களால் நிரூபிக்க முடியும் என்பதற்கும், நெஞ்சில் கை கட்டுவதா வயிற்றில் கை கட்டுவதா என்று கருத்து வேறுபாடு கொள்வதற்கும் என்ன சம்மந்தம்??

நீங்கள் இதுவரை பேசிய எந்த ஒன்றாவது உருப்படியான கருத்தை கொண்டதாக, மக்கள் சிந்திக்கும் படியான வாதமாக இருந்ததா என்று நெஞ்சில் கை வைத்து சுய பரிசோதனை செய்யுங்கள்.

மிர்சா மிர்சா என்று அந்த போதையிலேயே இருந்தால் அல்லாஹ் இப்படி தான் சிந்தனையை கூர்மையாக செலுத்துவதை விட்டும் தடுப்பான் !

////வரக்கூடிய நபி, ஈசாவை பல காரணங்களால் ஒத்து இருப்பார் என்பதற்கே ‘இப்னு மர்யம்’ என்று, வரக்கூடிய நபியை பற்றி நபி ஸல் அவர்கள் முனறிவிப்பு செய்துள்ளார்கள்.////

என்கிறீர்கள்.

இதுவும் நான் ஏற்கனவே சொன்னது போன்றது தான்.

நானே ஈஸா, நானே மர்யம், நானே அல்லாஹ், நானே ஆதம், நானே நீ, நீயே நான், அவனே நான், நானே அவன்..
என்று மருத்துவத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களை எல்லாம் நபியாக்கினால் இது தான் பிரச்சனை.

மர்யமின் மகன் ஈசா வருவார் என்று அல்லாஹ் சொல்கிறான்.

மர்யமின் மகன் ஈசாவை போன்றவர் வருவார் என்று நாம் அர்த்தம் செய்ய வேண்டுமாம்.

ஏன் செய்ய வேண்டும்? நமக்கென கிறுக்கா பிடித்திருக்கிறது இப்படி அர்த்தமற்ற பொருளை செய்வதற்கு?

அப்படியானால் எல்லாற்றையைம் இப்படியே புரியலாமே..

ஹஜ்ஜுக்கு மக்கா செல்லுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

மக்கா போன்ற இன்னொரு இடம் செல்லுங்கள் என்று நாம் புரிவோம். புரிந்து விட்டு இனி அனைவரும் ஐரோப்பா கண்டத்திற்கு ஹஜ் செல்லுங்கள்.

பள்ளிவாசலுக்கு சென்று தொழுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
பள்ளிவாசல் என்றால் பள்ளிவாசல் போன்ற.. என்று புரியலாம்.. அவ்வாறு புரிந்து எல்லாரும் இனி வீட்டிலேயே தொழுங்கள்.

இப்படியே புரிந்து அழிந்து நாசமாகி விடலாம்..

இந்த நானே மிர்சா, நானே மர்யம், நானே கர்ப்பமானேன், நானே ஈசாவை பெற்றேன், பின் நானே ஈஸாவானேன் என்கிற மிர்சா சாஹிபின் உளரல்களையெல்லாம் அவரது வண்டவாளங்களுக்குரிய பதிலை சொல்லும் போது விளக்கமாகவே பார்ப்போம்.

////100 வருடங்கள் முன்பு வரையிலும் ஈஸா உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை முஸ்லிம்களின் ரத்தத்தில் கூட ஊறிப்போயிருந்தது.///

என்கிறீர்கள். இதை முறியடிக்க தான் மிர்சா வந்தார் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

ஆனால், வேடிக்கை என்ன தெரியுமா? ஈசா இறக்கவில்லை, மீண்டும் வருவார் என்று நான் நம்பிக் கொண்டிருந்தேன் என்று இந்த மிர்சா சாஹிபே சொல்லியிருக்கிறார்.

அது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. அதைக் குறித்து அடுத்தடுத்த தொடர்களில் பார்க்க இருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்.

///இப்போது நீ புரிந்திருப்பாய் என நினைக்கிறேன்.
அதாவது நபி வாதம் செய்வதற்கு முன்னர் எப்படி வாழ்ந்தார் என்பதை ஒரு அளவுகோலாக பார்க்கவேண்டும் என்று குராணிலிருந்து புரிய முடிகிறது.///

என்று அடுத்ததாக கூறியிருக்கிறீர்கள். இது மட்டும் அளவுகோல் இல்லை என்று முந்தைய தொடரின் போதே நிரூபித்திருக்கிறேன்.

நபியென்று சொல்வதற்கு முன்பாக எப்படி நல்லவராக இருக்க வேண்டுமோ, அதன் பிறகும் இருக்க வேண்டும்.

நபியென்று தன்னை பிரகடனப்படுத்திய பிறகு அவர் கொண்டு வரும் தூது செய்தியில் பொய்களும் முரண்பாடுகளும் இருக்ககூடாது !

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாத வரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராள மான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (4:82)

இதுவும் தான் அளவுகோல்.

////உலக கரியங்களுக்காக வாழ்நாளின் பெரும்பகுதி பொய் பேசாத ஒருவர், இறைவன் விஷயத்தில் பொய் பேச தேவை என்ன?///

என்று இறுதியாக கேட்டிருக்கிறீர்கள்.

உலக விஷயங்களுக்காக பொய் பேசி பயனில்லை என்றாகும் போது, இறைவன் விஷயத்தில் பொய் பேசி உலகாதாயம் பெறலாம் என்கிற சபலம் மனிதர்களில் சிலருக்கு ஏற்படத்தான் செய்யும்.

உலக காரியங்களில் நல்லவனாக வாழ்ந்தாலும் பேரும் புகழும் கிடைக்காது.. தன்னை நபியென மக்கள் நம்பி விட்டால் புகழ் கிடைக்கும்.
பணம் சம்பாதிக்கலாம்..
மனிதனுக்கு பல ஆசைகள் இருக்கா தான் செய்யும். ஆக, இப்படியெலலம் கேள்வி எழுப்பி உங்கள் சித்தாந்தத்தை நியாயப்படுத்தி விட முடியாது.

தவிர், மிர்சா சாஹிபின் தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றும் திறந்த புத்தகமாக அனைவரும் காணும் வகையில் இல்லை, இருந்தால் தானெ தெரியும், அதிலும் என்னவெல்லாம் திருகுதாளங்கள் இருந்தன என்று சொல்ல..

நித்தியானத்தா தன்னை துறவியாக பிரகடனப்படுத்திய பிறகு தான் அவரை பற்றி உலகிற்கு தெரியும்.
நான் என் சிறு வயதில் நல்லவனாக தானே வாழ்ந்தேன், பின் இப்போது கடவுள் விஷயத்தில் மட்டும் பொய் சொல்வேனா? என்று அப்பாவித்தனமாக நித்தியானந்தா கேள்வி கேட்டால், உங்கள் கூற்றுப்படி, ஆமாம் சரி தானே.. எப்படி பொய் சொல்ல முடியும்? ஆகவே இந்த வீடியோ மேட்டரெல்லாம் பொய் தான் என்று சொல்லி விட வேண்டும் போல..

ஏனெனில், எல்லாருக்கும் என்ன நித்தியானதாவின் சிறு வயது வரலாறு தெரிந்திருக்குமா என்ன?

ஆக, ஆசையில் பல வகை இருக்கும். ஒருவருக்கு பணத்தாசை, இன்னொருவருக்கு புகழாசை, பெண்ணாசை, மண்ணாசை போல, தன்னை நபியென புகழப்படும் ஆசை இந்த மனிதருக்கு.

ஒரு படி மேலே போய், தன்னை அல்லாஹ் என்றே சொல்கிற மிகவும் ஆபத்தான ஆசை கூட இவருக்கு உண்டு..

அனைத்தையும் அடுத்தடுத்த தொடர்களில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ் !

தொடரும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக