புதன், 11 ஜூன், 2014

அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 6 (D)


அல்லாஹ்வுக்கு இணை வைத்த மிர்சா சாஹிப் நபியா?
Mirza Sahib Subject (Part 4)
-----------------------------------------------------------------------------------------------

ஈஸா நபி வருவார் என்று சொல்வது ஷிர்க் என்று ஒரு இடத்திலும், அவர் நிச்சயம் வருவார் என்று இன்னொரு இடத்திலும் முரண்பட்டு மிர்சா சாஹிப் பேசியதை நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதற்கு பதில் சொல்கிற நீங்கள்,

ஈசா வருவார் என்று சொல்வது ஷிர்க் என்று தான் அவர் சொன்னார், பிறகு மீண்டும் வருவார் என்பது ஈசாவை சொல்லவில்லை, மசீஹ் என்று தான் சொன்னார், அந்த மசீஹ் என்று அவர் சொல்வது தன்னை தான்.
மிர்சா சாஹிப் தான் மீண்டும் வருவார், ஆகவே இது முரணில்லை என்கிறீர்கள்.

அப்படியா? சரி, அப்படியானால், மிர்சா சாஹிபின் ஈஸா நபி குறித்த நிலைபாட்டினை இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே பார்த்து விடுவோம்.

இந்த மிர்சா சாஹிப் தான் கொண்டிருந்த நம்பிக்கை குறித்து அவரது நூலான ஹகீகத்துல் வஹி பக்கம் 153 இல் கீழ்கண்ட கருத்தை சொல்லியிருக்கிறார்.

அதாவது, முதலில் ஈஸா வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று தான் நானும் நம்பிக் கொண்டிருந்தேன், அது தான் எனது கொள்கை.
என்னைப் பார்த்து அல்லாஹ் பலமுறை ஈஸாவே ஈஸாவே என்று அழைத்த போதும் நான் இதே கொள்கையில் தான் இருந்தேன்.
இதே கொள்கையில் இருந்த பிறகு, மழை போல் அல்லாஹ்விடமிருந்து வஹி வர துவங்கியது,
பிறகு தான் தெரிந்து கொண்டேன், அல்லாஹ் இவ்வளவு காலமும் ஈஸாவே ஈஸாவே என்று என்னை தான் அழைத்திருக்கிறான்..

ஆகவே அன்றிலிருந்து தான் புரிந்து கொண்டேன், ஈஸா இறந்து விட்டார் என்று.

இது தான் மிர்சா சாஹிபின் கொள்கை என்று நான் சொல்லவில்லை, அவரே சொல்லியிருக்கிறார்.

இதற்கு என்ன சமாளிப்பு செய்யப்போகிறீர்கள்? சமாளிப்பதற்கும் ஒரு அளவில்லையா?

மசீஹ் என்றால் ஈஸா இல்லை, என்று நீங்கள் இப்போது சொல்லும் சமாளிப்பு தவறு என்று உங்கள் மிர்சா சாஹிபே நிரூபித்திருக்கிறார். தன்னை ஈஸா என்று தான் அல்லாஹ் அழைத்தான் என்று.

ம‌ர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். (3:45)

மசீஹ் என்று அல்லாஹ் ஈஸா நபியை தான் சொல்கிறான் என்று அல்லாஹ்வே சொல்லியிருக்கிறான்.

இங்கே மசீஹ் இறங்கி வருவார் என்று மிர்சா எழுதியிருப்பது ஈசாவை குறிக்கவில்லை, மிர்சா சாஹிபை தான் குறிக்கிறது என்று ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்வதாக இருந்தால், ஈஸா வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று அவர் சொல்வதாக சொன்னேனே, அந்த இடத்தில் கூட அவர் பயன்படுத்தியிருக்கும் சொல் மசீஹ் தான் !

அது தான் வேடிக்கை.

மசீஹ் வானத்திலிருந்து இறங்கி வருவார் என்று சொல்வது ஷிர்க், முஹம்மது நபி இறந்து விட்டார்கள், மசீஹ் மட்டும் வானிலிருந்து இறங்கி வருவாரா?

என்று கேட்டு விட்டு தான், பிறகு, மசீஹ் வருவார் என்றும் எல்லா ஞானங்களுடனும் இறங்குவார் என்றும் சொல்கிறார்.

அனைத்துமே ஆயினே கமாலாத்தே இஸ்லாம் எனும் நூலில் பக்கம் 44 இலும், அதே நூல் பக்கம் 409 இலும் காணலாம்.

ஆக, இறங்கி வருவார் என்று அவர் சொல்கிற இடத்தில் வரக்கூடிய மசீஹ் எனும் சொல் ஈஸாவை குறிக்காதாம்,
இறங்கி வருவார் என்று நம்புவது ஷிர்க் என்று சொல்கிற இடத்தில் மசீஹ் என்று அவர் சொல்லி விட்டால் அது மட்டும் ஈஸாவை குறிக்கிமோ?

ஏன், அந்த இடத்திலும் மிர்சா என்று பொருள் செய்ய வேண்டியது தானே? மிர்சா வருவார் என்று நம்புவது ஷிர்க். இப்படி பொருள் செய்யுங்களேன்.

சரி, அனைத்தையும் விட முத்தாய்ப்பாக, நான் ஈஸா வருவார் என்று தான் இத்தனை காலமும் நம்பிக் கொண்டிருந்தேன், அவர் வானத்தில் இருக்கிறார் என்று தான் நான் சொன்னேன் என்று,

ஆயினே கமாலாத்தே நூலில் மசீஹ் வருவார், எல்லா ஞானங்களுடனும் வருவார் என்று தான் எழுதியதற்கு தானே விளக்கமும் கொடுத்து, இப்போது நீங்கள் முட்டுக் கொடுப்பது போல் மசீஹ் என்றால் மிர்சா இல்லை, ஈஸாவை தான் சொன்னேன் என்று அவரே விளக்கவுரையும் சொல்லியிருக்கிறார்.

அதை ஹகீகத்துல் வஹி 153 இல் பார்க்கலாம்.

அவரது எழுத்துக்கு அவரே விளக்கம் சொல்லி விட்ட பிறகு, அவர் சொல்லாத விளக்கத்தை நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?

இன்னும் சொல்கிறேன் கேளுங்கள். அந்த பக்கத்தில் எந்த அளவிற்கு அவர் தெளிவாக எழுதுகிறார் என்றால்,

எனக்கு வஹி வருகிறது, ஈஸாவே ஈஸாவே என்று..

ஆனால், மற்ற முஸ்லிம்களிடம் என்ன அகீதா (கொள்கை) இருந்ததோ அதே கொள்கையான ஈஸா வருவார் என்கிற கொள்கையை தான் நானும் கொண்டிருந்தேன், ஈசா உயிருடன் இருக்கிறார் என்று தான் நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆகவே என்னைப் பார்த்து ஈஸாவே என்று அல்லாஹ் அழைத்த போதெல்லாம் அதற்கு வேறு அர்த்தம் கொடுத்துக் கொண்டேன்.
அதனால் தான் பராஹின அஹமதியா எனும் நூலில் ஈஸா வானத்தில் இருக்கிறார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தேன்..

என்று அப்பட்டமாக சொல்கிறார். (உருது மூலத்துடன் வார்த்தைக்கு வார்த்தை இருக்கிறது)

தொடர்ந்து,

... மழையைப் போல மீண்டும் மீண்டும் வஹி வரும் போது தான் நான் புரிந்து கொண்டேன், ஈஸா என்று தன்னை தான் அல்லாஹ் அழைக்கிறான், ஈஸா என்றால் ஈஸா என்று நேரடியாக புரியக் கூடாது, தன்னைப் பார்த்து உவமையாக தான் சொல்கிறான் என்று..

சரி, இப்போது கேள்விகளுக்கு வருவோம்.

இப்படி அப்பட்டமாக உளறித்தள்ளியிருக்கும் ஒரு மனிதர் உங்கள் பார்வையில் நபியா?

அல்லாஹ்விடமிருந்து வஹீ வருகிறது என்றால், அந்த வஹியை பெற்று அதை மக்களுக்கு அவர் விளக்க வேண்டும் என்பதற்காக வருகிறது.
ஆனால், இங்கே அல்லாஹ் பல முறை தன்னைப் பார்த்து ஈஸா ஈஸா என்று சொன்னானாம், ஆனாலும் அந்த உவமையை புரியாமல் ஈஸா உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்பிக் கொண்டிருந்தாராம்..

என்றால், வஹி என்று அல்லாஹ் அனுப்பியும் அதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஒரு நபி இருப்பாரா?

வஹியின் மூலம் அல்லாஹ் சொல்ல வரும் செய்தி, அதை பெறக்கூடிய நபிக்கே புரியாமல் இருக்குமா?

அதை விளக்க அல்லாஹ்வுக்கே தெரியவில்லையா? இது அப்பட்டமான அபத்தமில்லையா?

சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும்,

வஹி வரும் காலத்திலும் கூட, அதாவது தான் நபியாக ஆன பிறகும் கூட ஈஸா உயிருடன் இருக்கிறார் என்று தான் உங்கள் மிர்சா சாஹிப் நம்பிக் கொண்டிருந்தார் என்று அவரே வெட்கமில்லாமல் எழுதி விட்ட பிறகு, என்னை பார்த்து நீங்கள் எழுப்பும் கேள்வியை இப்போது மிர்சா சாஹிபை நோக்கி நான் எழுப்புகிறேன்.

என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது அல்லாஹ் மட்டும் தானே, ஒரு மனிதர் உண்ணாமல் பருகாமல் பல்லாயிரம் ஆண்டுகள் உயிருடன் இருக்கிறார் என்று நம்புவது பச்சை ஷிர்க் இல்லையா?
அதை ஏன் இந்த மிர்சா சாஹிப் செய்தார்?
நபியாக இருந்து கொண்டே ஏன் செய்தார்?

அவருக்கு அல்லாஹ் விளக்குவதற்கு முன்பு தான் குர் ஆனும் ஹதீஸும் அவரிடம் இருக்கதானே செய்தது? அதை படித்து சிந்தித்து, அல்லாஹ்வுக்கு இணை வைக்கக்கூடாது, எந்த மனிதராலும் 2000 வருடங்கள் உயிருடன் இருக்க முடியாது என்று புரிந்து ஏகத்துவ கொள்கையை நிலை நாட்ட வேண்டியது தானே?

அந்த துப்பும் வக்கும் ஏன் இந்த மிர்சா சாஹிபுக்கு இல்லாமல் போனது?
உங்கள் பார்வையில் நான் ஷிர்க் வைப்பது போல் அவர் ஏன் ஷிர்க் வைத்தார்?

ஷிர்க் வைத்த ஒருவரை நீங்கள் ஏன் நபி என்கிறீர்கள்?

ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்பது தான் எல்லாரையும் போல எனது அகீதாவாகவும் இருந்தது, எனது முந்தைய நூலிலும் அப்படி தான் எழுதி வந்தேன் என்று அப்பட்டமாக சொல்லும் இவர் பச்சை முஷ்ரிக் இல்லாமல் வேறு என்ன?

பின் திருத்திக் கொண்டார் என்றாலும், குர் ஆனும் ஹதீஸும் கைகளில் இருந்த காலத்திலேயே உங்கள் பார்வையில் எது சத்தியமோ, அதை விளங்கிக் கொள்ள துப்பு கெட்ட ஒருவர் நபியா?

உங்கள் கருத்திப்படி குர் ஆனில் தான் ஈஸா நபி இறந்து விட்டார் என்று தெள்ளத் தெளிவாக இருக்கிறதே? அதை கூட விளங்காமல், ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார், அது தான் எனது அகீதா என்று மடமையாக புரியக்கூடிய மிர்சா சாஹிப் நபியா?

குர் ஆனில் அல்லாஹ் என்ன சொல்லியிருக்கிறான் என்பதை கூட புரிய முடியாத ஒருவர் நபியா?

உங்கள் கருத்திப்படி குர் ஆனில் இருந்து ஈஸா நபி இறக்கவில்லை என்று எங்களால் நிரூபிக்கவே முடியாதே, அது கூட தெரியாமல், ஈஸா நபி உயிருடன் தான் இருக்கிறார், அது தான் எனது அகீதா ஷிர்க்கில் மிதந்த ஒருவர் நபியா??

என்கிற கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.

ஈஸா நபி உயிருடன் இருப்பதாக நம்புவது ஷிர்க் என்று சொல்கிற அடிப்படை தகுதி கூட மிர்சா சாஹிப் எனும் பொய்யரை நபியாக நம்பும் கூட்டத்திற்கு இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

வண்டவாளங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ் !
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக