வியாழன், 13 மார்ச், 2014

கல்லா நிரப்பிய தர்கா கமிட்டி


உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருக்கடியில் தண்ணீர் குழாய் ஒன்றை இணைத்து, கப்ருக்கடியிலிருந்து அற்புத நீரூற்று ஒன்று உருவாகியுள்ளது என்று புரளி கிளப்பினால்,

அதில் அடங்கியுள்ள அவ்லியாவின் சிறு நீர் தான் அது என்று குடத்துடன் வரிசையில் காத்திருக்கும் அறிவிலி கூட்டம் இன்னும் இருக்கத் தான் செய்கின்றன.

செத்துப் போனவர் எப்படிடா சிறு நீர் கழிப்பார்? என்கிற அடிப்படை மார்க்க அறிவோ ஈமானின் சுவடோ கூட இவர்களுக்கு இல்லை என்பது ஒரு பக்கம்..

ஒரு வாதத்திற்கு அது அந்த அவ்லியாவின் சிறு நீர் தான் அது என்று வைத்துக் கொண்டால் கூட, அவ்லியாவின் சிறு நீர் என்பதால் அது மட்டும் என்ன தேனாட்டம் இனிக்கவா போகிறது? என்கிற அடிப்படை அறிவும் அற்றவர்கள் தான் இன்றைக்கும் கப்ரை முட்டி நரகத்திற்கு தங்கள் இடத்தை முன் பதிவு செய்து வரும் சமுதாயத்தவர்.

இன்று தக்கலை பீரப்பா தர்காவிலுள்ள மரத்திலிருந்து தண்ணீர் ஒழுகியதாம், அதை பார்க்கவும், டம்ளரில் ஏந்திக் கொள்ளவும் ஒரு கூட்டம் !

தர்கா கமிட்டியின் கல்லா நிறைந்தது, நரகத்திற்கான முன்பதிவும் அதிகரித்தது !!

அவர்களில் பெரும்பாலோர் செவியுறுகிறார்கள் என்றோ, விளங்குகிறார்கள் என்றோ நீர் நினைக்கிறீரா? அவர்கள் கால்நடைகள் போன்றே தவிர வேறில்லை. இல்லை! (அதை விடவும்) வழி கெட்டவர்கள். (25:44)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக