புதன், 22 ஜூலை, 2015

ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறு


 "இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே" 
சகோ. பிஜெவி இந்த வருட தொடர் உரையிலிருந்து எடுக்கப்பட்டது



வஹீ மட்டும் தான் மார்க்கம் என்பதை விளக்கமாக அறிந்திருக்கும் நாம்அந்த வஹீயின் ஒருபகுதியான ஹதீஸ்களைப் பொறுத்தவரைசிலவற்றை வஹீ என்று ஏற்கிறோம்சிலவற்றைவஹீ இல்லையென கூறி நிராகரிக்கிறோம்.

நாமும் இதை செய்கிறோம்எல்லா கொள்கையுடையவர்களும்எல்லா இயக்கத்தவரும் இதைசெய்கின்றனர்.

ஏதேனும் காரணங்களை மையப்படுத்தி சில ஹதீஸ்களை வஹீ இல்லை எனக் கூறிபுறந்தள்ளிக் கொண்டிருக்கிறோம்.
இவை ஆதாரப்பூர்வமானவைஇவை பலகீனமானவை என்றெல்லாம் ஹதீஸ்கள்விஷயத்தில் பிரித்தறியும் நாம் குர் ஆனில் அவ்வாறு பிரிப்பது கிடையாது.

குர் ஆனைப் பொறுத்தவரைசஹீஹான வசனங்கள்லயீஃபான வசனங்கள் என்றுவேறுபடுத்தவே முடியாது.
குர் ஆன் வசனங்கள் அனைத்துமே சஹீஹ் தான்.
இந்த வேறுபாட்டினை முதலில் அறிந்து கொள்வதே இந்த தலைப்பை சரியாக புரிந்து கொள்ளஉதவுகின்ற அடிப்படையாக அமையும்.

நபி (சல்அவர்கள் இன்று நம்முடன் வாழ்ந்திருந்தாலோ அல்லது நபி (சல்அவர்கள் வாழ்ந்தகாலத்தில் நாம் இருந்திருந்தாலோ மேற்கண்ட குழப்பங்கள் ஹதீஸ்கள் விஷயத்தில்எழுந்திருக்காது.

காரணம்நபி (சல்அவர்கள் என்ன சொன்னார்களோ அதை நேரடியாக நாம் காதுகளில்கேட்டிருப்போம்.

நேரடியாக நாம் ஒன்றை நபி (சல்அவர்களிடம் கேட்டு விட்டால்குர் ஆனைப் போல் அதையும்கருதி பின்பற்றியாக வேண்டும்ஏனெனில் அது வஹீ.
ஆனால்நபி (சல்அவர்களின் காலத்திற்கு பிறகுநபி (சல்அவர்கள் சொன்னதாக நாம் ஒருவிஷயத்தைப் பற்றி அறிகிறோம் என்றால் நபியிடம் கேட்டதாக ஒருவர் சொல்லஅவரிடம்கேட்டதாக அடுத்த தலைமுறையில் ஒருவர் சொல்லஇவரிடம் கேட்டதாக இவருக்குப் பிறகுவந்த தலைமுறையில் ஒருவர் சொல்லஇறுதியில் ஒருவர் அதை எழுதி வைத்துக்கொள்கிறார்.
அப்படியானால்உண்மையில் இந்த செய்தி நபி (சல்அவர்கள் சொன்னது தானாஅல்லதுஅவர்களது பெயரைப் பயன்படுத்தி இடைச்செருகல் ஏதும் நடந்திருக்கிறதா என்பதை உறுதிசெய்யும் கடமை நமக்கு வந்து விடுகின்றது.

இஸ்லாத்தை அழித்தொழிப்பதற்காக கங்கணம் கட்டி செயல்பட்ட எதிரிகள் எல்லாகாலத்திலும் இருந்தனர் எனும் போதுஇஸ்லாதிற்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் நபி (சல்)அவர்கள் சொல்லாததையெல்லாம் அவர்கள் சொன்னதாக பொய்களை கூறும் நிலைஇருந்தது.
அவ்வாறு சொல்லியும் இருக்கிறார்கள்.
அந்த விபரத்தை நாம் பின்னர் காண இருக்கிறோம்.

ஆகபொய்களும் சரியானவைகளும் கலந்து வருகின்ற போதுஎவை நபி சொன்னதுஎவை நபிசொன்னது இல்லை என்று வேறுபடுத்தி அறிய வேண்டிய கட்டாயத்தின் பால் நாம்தள்ளப்படுகிறோம்.

நபி சொன்னதை மறுப்பதற்கில்லைமாறாக நபி சொன்னார்களா இல்லையா என்பதைஅறிவதற்கு தான் இதை செய்கிறோம்.

காரணம்ஹதீஸ்கள் அனைத்தும் ஒருவர் அல்லது இருவர் வழியாக தான்அறிவிக்கப்படுகின்றன.
குர் ஆனைப் பொறுத்தவரைஇத்தகைய குழப்பம் இல்லைகாரணம்அதை அறிவித்தது ஒட்டுமொத்த தலைமுறை.
நபி (சல்)அவர்கள் காலத்தில் அவர்கள் எதை குர் ஆன் என்று சொன்னார்களோ அதை ஒட்டுமொத்த சஹாபாக்களும் அங்கீகரித்து அதை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றார்கள்.
சஹாபாக்களுக்குப் பிறகு வந்த தபியீன்கள் அனைவருமே ஒட்டு மொத்தமாக அதை குர் ஆன்என அங்கீகரித்து அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றனர்.
இப்படியாக தலைமுறை தலைமுறையாக குர் ஆன் என்பது நம் கைகளில் கிடைத்திருக்கிறதுஎனும் போதுஇதில் கடுகளவு சந்தேகமும் இல்லை.
நபி (சல்அவர்களிடம் நாமே நேரடியாக கேட்டால் எந்த அளவிற்கு நம்பகமான செய்தியாகஇருக்குமோ அந்த அளவிற்கு குர் ஆனில் எந்த சந்தேகமும் இல்லை.

அதே சமயம்ஹதீஸ்களைப் பொறுத்தவரைநபி (சல்அவர்கள் ஒன்றை சொல்லும் போதோஅல்லது செய்து காட்டும் போதோ அவ்விடத்தில் 4, 5 சஹாபாக்கள் மட்டும் இருந்தால் அவர்கள்மட்டுமே அந்த ஹதீஸை அறிவார்கள்.
அறிந்த அந்த சஹாபாக்களாவது உடனடியாக எல்லாரிடமும் சென்று, "இன்றைக்கு நபி (சல்)அவர்கள் மூலம் இந்த ஹதீஸை நான் கேட்டேன்என்று சொல்லிக் கொண்டிருப்பாரா?என்றால் அப்படியும் இல்லை.

அவர் கேட்பார்அதோடு அவர் வியாபாரம்மற்ற பணிகள் என சென்று விடுவார்.
பிற்காலத்தில் அவர் தனிப்பட்ட முறையில் வாழ்க்கையில் ஏதும் பிரச்சனைகளை சந்திக்கின்றபோதுஇதற்கு நபி (சல்அவர்கள் இப்படியொரு தீர்வை சொல்லியிருக்கிறார்கள்நான்கேட்டிருக்கிறேன்", என்று அந்த சமயத்தில் சொல்வார்.

அந்த நேரத்தில் தான் இப்படியொரு ஹதீஸ் இருப்பதே பலருக்கும் தெரியவரும்.

ஆகநபி (சல்அவர்கள் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸ்களைப் பொறுத்தவரைஅதைஅறிவித்த அறிவிப்பாளர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால்தலைமுறை கடந்து அறிவிக்கப்பட்டு நூற்களில் பதிவு செய்யப்படும் போது இது உண்மையில்நபி (சல்அவர்கள் சொன்னது தானா அல்லது பொய்யர்கள் எவராவது இடையில் நுழைந்துவிட்டார்களாஎன்பதை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.



எந்த அமைப்பாக இருந்தாலும் சில ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்றும் வேறு சில ஹதீஸ்களை பலகீனமானது எனவும் சொல்லத்தான் செய்கின்றனர்.

இதற்கான அடிப்படை காரணம் என்ன என்பதை அறிவதற்கு ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாற்றினை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.



அல்லாஹ்வின் புறத்திலிருந்து அருளப்பட்ட குர் ஆன் வசனங்களைப் பொறுத்தவரை அதை பாதுகாக்கும் பணிகளில் நபி (சல்) அவர்களே நேரடியாக ஈடுபட்டிருந்தனர்.
வஹீ செய்தி வரும் போதெல்லாம் அதை மனப்பாடம் செய்து கொள்ளும் பொறுப்பினை பல சஹாபாக்களிடம் ஒப்படைந்திருந்தார்கள்.

அதே போன்று, வருகின்ற வஹீ செய்திகளை எழுதி வைக்கும்படியும் சில சஹாபாக்களிடம் கூறியிருந்தார்கள்.

இது தான் நபி (சல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு அனைவரிடமிருந்த பிரதிகளும் ஒன்றுபடுத்தப்பட்டு, ஒப்பீடு செய்யப்பட்டு இறுதியில் குர் ஆனாக தொகுக்கப்பட்டது.

ஆக, குர் ஆனானது உள்ளத்திலும் எழுத்திலும் பாதுகாக்கப்பட்டிருந்தது.

அதே சமயம், ஹதீஸ்களைப் பொறுத்தவரை இத்தகைய பாதுகாப்பு முறைகளை நபி (சல்) அவர்கள், அவர்கள் வாழும் காலத்தில் செய்து கொள்ளவில்லை.
அதை மனப்பாடம் செய்து கொள்ளச் சொல்லி எவரிடமும் சொல்லவில்லாஇ, எழுதி வைக்க சொல்லி கட்டளையேதும் பிறப்பிக்கவில்லை.

இன்னும் சொல்லப்போனால், குர் ஆனோடு ஹதீஸ் கலந்து விடக் கூடாது என்கிற காரணத்தை சுட்டிக் காட்டி, ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்ளாதீர்கள் என்றே கட்டளையிட்டார்கள்.
(பார்க்க புஹாரி 7702).
செய்திகளை வாய் வழியாக அறிவித்துக் கொள்ள அனுமதித்த நபி (சல்) அவர்கள், அவற்றை எழுதிக் கொள்ள அனுமதிக்கவில்லை. காரணம், குர் ஆனை எழுதிக்கொண்டிருந்த சஹாபாக்கள் ஹதீஸ்களையும் எழுதினால் இறுதியில் எது குர் ஆன் எது ஹதீஸ் என்று குழப்பம் ஏற்பட்டு விடும் என்பதே அதற்கு காரணம்.

அதே சமயம், குர் ஆனை எழுதும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாத சஹாபி ஒருவருக்கு ஒரு ஹதீஸை எழுதிக் கொடுக்க அனுமதித்தும் இருக்கிறார்கள்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
அல்லாஹு தஆலா தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்தபோது அவர்கள் மக்கா மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்துவிட்டு, 'அல்லாஹு தஆலா மக்காவை (துவம்சம் செய்வதை)விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) இறைநம்பிக்கையாளர்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை. 
இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கிறதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெறலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்" என்று கூறினார்கள். அப்பாஸ்(ரலி), 'இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்" என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இத்கிர் புல்லைத் தவிரத்தான்" என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ்(ரலி) என்பவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்" என்று உத்தரவிட்டார்கள்.  (புஹாரி 2434)

மற்றொரு ஹதீஸில்,

நபி (சல்) அவர்களிடம் எந்த செய்தியை நான் கேட்டாலும் அதை எழுதிக் கொள்வேன் என்பதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர்  (ரலி) அவர்கள் சொன்ன செய்தி அபுதாவுத் 3646 இல் பதிவாகியுள்ளது.

அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்கள் எதையெல்லாம் கேட்டார்களோ அதை மட்டும் எழுதிக் கொண்டார்கள், அவர் கேட்காத எத்தனையோ ஹதீஸ்கள் இருக்கும், அவற்றையெல்லாம் அவர் எழுதிக் கொள்ளவில்லை.

அதே போன்று, அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

என்னை விட அதிகமாக வேறு எவருமே ஹதீஸ்களை அறிவித்ததில்லை என்கிறார்கள்.
இது புஹாரி 113 இல் பதிவாகியிருக்கிறது.

ஆக, குர் ஆன் என்பது நபி (சல்) அவர்களின் காலத்திலேயே நெறிப்படுத்தப்பட்டு நிறைவுபடுத்தப்பட்டு விட்டது.
அதில் எதுவும் சேர்க்கப்படவும் இல்லை, குறைக்கப்ப‌டவும் இல்லை.
அதே நேரம், ஹதீஸ்களைப் பொறுத்தவரை அப்துல்லாஹ் இப்னு அம்ர் போன்ற ஒரு சில சஹாபாக்கள் எழுதிக் கொண்ட ஒரு சில ஹதிஸ்களைத் தவிர்த்து மீதமுள்ள அனைத்துமே வாய் வழியாக வந்தவை தான்.

இதன் காரணமாகவே, பிற்காலத்தில் வந்த அறிஞர்கள், வாய் வழியாக கிடைக்கப்பெறும் ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற முடிவுக்கு வருகின்றனர்.
அதில் முதலாவதாக இந்த திட்டத்தை செயல்படுத்த துவங்கியவர் இப்னு ஜுரைஜ் எனும் அறிஞர்.
ஹிஜ்ரி 150 இல் மரணித்ததாக வரலாற்றில் பதிவாகியிருக்கும் இந்த அறிஞர் தான் ஹதீஸ்களை எழுத்தில் தொகுக்கும் பணியினை துவக்கினார்.
ஆனால், அந்தப் பணிக்காக இவர் எங்கும் பயணம் செய்து செய்திகளை சேகரிக்கவில்லை. மாறாக இவர் வாழ்ந்த மக்கா நகரத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் என்னன்ன செய்திகள் நபி (சல்) அவர்கள் சொன்னதாக வியாபித்திருந்ததோ அவற்றை மட்டுமே எழுதிக் கொண்டார்.
அதில் கூட நபி (சல்) அவர்கள் சொன்ன விஷயங்களை மட்டும் எழுதி வைத்தாரா என்றால் இல்லை.
நபி (சல்) அவர்கள் சொன்னது, சஹாபாக்கள்  தங்கள் சுய கருத்துக்களாக சொன்னவை என அனைத்தையும் கலந்தே எழுதினார்.
ஆக, குறைந்த அளவிற்கே என்றாலும், முதன்முதலாய் ஹதீஸ்களை எழுத்தில் தொகுக்கும் பணியை செய்தது இந்த இப்னு ஜுரைஜ் என்பவர் தான்.

அதே போன்று, ஹிஜ்ரி 153 இல் மஃமர் பின் ராஷித் என்கிற அறிஞர், ஹிஜ்ரி 156 இல் சயித் அபி அவ்பா,  ஹிஜ்ரி 160 இல் ஷுஃபா,  ஹிஜ்ரி 163 இல் சுஃப்யான் அல் தவ்ரி, ஹிஜ்ரி 179 இல் மரணித்த‌ மாலிக் இமாம், ஹிஜ்ரி 188 இல் ஜரீர், ஹுசைன் போன்ற அறிஞர்கள், இப்னு ஜுரைஜை ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்ளும் பணியை இப்னு ஜுரைஜ்ஜிற்கு பிறகு தொடர்ந்து செய்து வந்தவர்களாவர்.

ஆனால், அனைவருமே ஹதீஸ்களை சேகரிக்கும் பொருட்டு எந்த பயணத்தையும் மேற்கொள்ளவில்லை.
சஹாபாக்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் சென்று செய்திகளை சேகரிக்காமல், அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் நபி (சல்) அவர்கள் சொன்னவை என்று எவையெல்லாம் அவர்கள் காதுகளுக்கு எட்டுகின்றதோ அவற்றை மட்டுமே எழுதி வைப்பவர்களாக இருந்தனர்.

ஆனால், இவற்றில் பெரும்பான்மையான நூற்கள் இன்று இல்லை. காலப்போக்கில் அழிந்தே போயின.
அவை இன்று இருந்திருந்தால், அவை மிகவும் வலுவான ஹதீஸ்களாக நமக்குக் கிடைத்திருக்கும்.
காரணம், அதை தொகுத்த அனைவருமே நபி (சல்) அவர்களது காலத்திற்கு மிகவும் நெருக்கமாக வாழ்ந்தவர்கள் என்கிற வகையில் பல அறிவிப்பாளர்கள் கொண்ட சங்கிலித் தொடர் அவர்கள் தொகுத்த ஹதீஸ்களுக்கு இருக்காது.
ஆனால், அத்தகைய ஹதீஸ்கள் அனைத்தும் இன்று அழிந்து விட்டன.

இதைத்  தொடர்ந்து, ஹிஜ்ரி 200 க்குப் பிறகு தொடர்ச்சியாக வந்த அறிஞர்கள் பலரும் தொகுத்த ஹதீஸ் நூற்கள் இன்றைக்கும் காணக் கிடைக்கின்றன.

ஹிஜ்ரி 200 இல் வந்தவர்கள் இமாம் ஷாஃபி. 204 இல் தயாலிஸ் இமாம், 211 இல் அறிஞர் அப்துர் ரசாக் , அலி, இப்னு அபி ஷைபா, அஹமத், தாரமி என ஏராளமான அறிஞர்கள் ஹிஜ்ரி 200க்குப் பிறகு தோன்றியவர்கள்.
இவர்களோ, ஹதீஸ்களை தொகுப்பதற்காகவே பலகட்ட பயணங்களை மேற்கொண்டு சஹாபக்கள் பல்கிப்பெருகியிருந்த உலகின் அதிகமான பாகங்களுக்கு சென்று ஹதீஸ்களை சேகரிக்கும் மிகப்பெரிய முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆக, ஹிஜ்ரி 200க்கு முன் தொகுக்கப்பட்ட ஹதீஸ்களானது குறைந்த அளவிற்கே இருந்தன.
அவரவர் வாழ்ந்த பகுதிகளில் மக்கள் பரவலாக பேசிக் கொண்ட செய்திகள் மட்டுமே பதியப்பட்டன.
அத்தகைய நூற்களில் அதிகமானவை இன்று அழிந்தும் போயின.

ஆனால், ஹிஜ்ரி 200க்குப் பிறகோ, ஹதீஸ்களை தொகுக்கின்ற பணியோ இன்னும் விரிவுப்படுத்தப்பட்டது.
பல நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்டன. அவை இன்றளவும் காணக்கிடைக்கவும் செய்கின்றன.

இந்த வரிசையில் ஹிஜ்ரி 256இல் வந்தவர் தான் இமாம் புஹாரி.
இமாம் அஹமத் இப்னு ஹம்பலின் மாணவரான இவர் தான், அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் ஆதாரப்பூர்வமானவை எவை, பலகீனமானவை எவை என்று தரம்பிரித்து, ஆதாரப்பூர்வமானவற்றை மட்டும் தான் பதிய வேண்டும் என்கிற முடிவினை எடுக்கிறார்.

அதே போன்று, ஹிஜ்ரி 261 முஸ்லிம் இமாம், ஹிஜ்ரி 75 இல் இப்னு மாஜா, 279 இல் திர்மிதி, 303 இல் பஸ்ஸார், 313 இல் இப்னு குசைமா, 354இல் இப்னு ஹிப்பான், 385 இல் தப்ரானி, 405இல் தாரகுத்னி, 430 இல் ஹாகிம், 488 இல் பைஹகி என நபி (சல்) அவர்களின் காலத்திற்கும் 100 வருடங்கள் கழித்து துவங்கப்பட்ட ஹதீஸ்களை தொகுத்தெழுதும் இந்த பணியானது கிட்டத்தட்ட ஹிஜ்ரி 550 ஆண்டு வரை நீடித்தது.

இந்த காலத்தில் தான் உண்மையான ஹதீஸ்களுடன் பல்வேறு பொய்களும் நபியின் பெயரால் அதிகமதிகமாக கட்டவிழ்த்து விடப்பட்டன.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக