வியாழன், 16 ஜூலை, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !! (நாள் : 25)

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே !!

(2015 ரமலான் தொடர் உரையாக சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் உரையாற்றியதின் சாராம்சம், எழுத்து வடிவத்தில்)


 நாள் : 25


ஹதீஸ்களைப் புரிந்து கொள்வது எப்படி? (தொடர்ச்சி)


அறிவிப்பாளர் குறித்த‌ ஆய்வு :

ஹதீஸ்களை வெறுமனே பதிய வைத்தால் மட்டும் போதாதுஅவற்றை நெறிப்படுத்தவும் வேண்டும் என்கிற தூய எண்ணத்தில்அறிவிப்பாளர்களின் தரம்அதனபடிப்படையில்சொல்லப்பட்ட செய்தியின் நம்பகத்தன்மை ஆகியவற்றை அலசும் பணியில் முதன்முதலாய்ஈடுபட்டது இமாம் ஷுஃபா அவர்கள்.
அவர்களைத் தொடர்ந்து கத்தான்அஹ்மத் இப்னு ஹம்பல்மாலிக் போன்றவர்களும் இந்தஆய்வின் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

இது பற்றி மாலிக் இமாமின் மாணவரான நஸாயி அவர்கள் சொல்லும் போதுமாலிக் இமாம்ஹதீஸ் விஷயத்தில் மிகவும் நுணுக்கமன ஞானத்தை கொண்டிருந்தார்கள் என்றும்அதேபோன்று ஹதீஸ் துறையிலுள்ள ஞானத்தைப் பொறுத்தவரை ஷுஃபா அவர்களைமுழுமையாக நம்பலாம் எனவும் கூறுகிறார்கள்.

ஆகபல அறிஞர்கள் ஹதீஸ்களை பதிவு செய்யும் பணியினை செய்தாலும்இந்த நான்குபேரின் பங்களிப்பு என்பது மிகவும் தனித்துவமானது என்று சொல்லலாம்.

இது பற்றி ஷுஃபா அவர்களே கூறும் போது,
இமாம் மாலிக் அவர்களும் ஹதீஸ்களை இதே போன்று நெறிப்படுத்தும் பணியில்ஈடுபட்டிருந்தார்கள்.
தொடர்ந்து அவர்கள் கூறும் போதுஅறிவிக்கப்படுவதையெல்லாம் நாங்கள் பதிவு செய்து விடமாட்டோம்அறிவிப்பவர் நல்லவர் என்றவுடன் பதிவு செய்து கொள்ள மாட்டோம்மாறாகபலஆய்வுகளை அதில் மேற்கொள்வோம்பல நிபந்தனைகளுக்கு உட்படுத்தி தான் அதை பதிவுசெய்வோம்ஏனெனில்இது நபி (சல்அவரக்ளோடு தொடர்புடைய விஷயம்.
அதற்குரிய தகுதியுடன் அறிவிப்பவரிடமிருந்து தான் பதிவு செய்ய முடியும்"

என்பதாக தெள்ளத்தெளிவாக கூறுகிறார்கள்.

சுஃப்யான் அல்தவ்ரி அவர்கள் சொல்லும் போது, ஹதீஸ் கலையில் ஷுஃபா அவர்கள் தான் அமீர்என்று பாராட்டுகின்றார்கள்.

சாலிஹ் இப்னு முஹம்மத் அவர்கள் சொல்லும் போதுஹதீஸ் கலையில்அறிவிப்பாளர்களை எடை போடுவதில் ஷுஃபா தான் முதன்மையானவர்பிறகு கத்தான் ,அஹமத் இப்னு ஹம்பல் போன்றோரும் இருந்தனர் என்று சொல்கிறார்கள்.



ஹதீஸ் கலையின் ஐந்து விதிகள் :


ஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா அலல்து பலகீனமானதா என்பதை அறிவதற்கு ஐந்துஅளவுகோல்களை இந்த இமாம்கள் முன்வைக்கின்றனர்.
இந்த ஐந்து அளவுகோலும் சரியாக இருக்கும் பட்சத்தில் தான் ஒரு ஹதீஸை சஹீஹ்அந்தஸ்திற்கு கொண்டு வருகின்றனர்.

1. அறிவிப்பாளர் நேர்மையாளராக இருத்தல் வேண்டும் :

இது முதல் அளவுகோலாகும்.
ஒரு செய்தியை ஒருவர் சொல்லும் போது அவர் சொல்வதை நாமே சென்று உறுதி செய்துவிடலாம் என்றால் சொல்பவரின் நம்பகத்தன்மையோ அவரின் நேர்மையையோ நாம் அலசத்தேவையில்லை.

உதாரணமாகஒரு இடத்தில் புதையல் ஒன்று இருப்பதாக ஒருவர் சொல்கிறார்.
சொல்பவர் நேர்மையாளரா பொய்யரா என்றெல்லாம் இவ்விடம் நாம் ஆய்வு செய்யத்தேவையில்லைகாரணம்அவர் சொன்னது போல் அந்த இடத்தில் புதையல் இருந்தால் அவர்நேர்மையானவர்புதையல் இல்லையென்றால் அவர் பொய்யர்ஆகஅவர் சொன்னதை நாமேநேரடியாக சரி பார்க்க வழி இருக்கும் போதுஅதுவே நமக்கு போதுமானது.

ஹதீஸ்களை அறிவிப்பதைப் பொறுத்தவரைஇப்படி நபி (சல்அவர்கள் சொன்னார்கள் என்றுஒரு அறிவிப்பாளர் ஒன்றை சொல்லும் போதுஉண்மையில் இப்படி நபி (சல்அவர்கள்சொன்னார்களாஎன்பதை நபி (சல்அவர்கள் வாழும் காலம் என்றால் நாம் அவர்களிடமேநேரடியாக சென்று கேட்டு தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
நபி (சல்அவர்கள் காலம் முடிந்த பிறகு இந்த வாய்ப்பு இருக்கிறதா?
அறிவிப்பாளரின் வார்த்தையை தான் நம்ப வேண்டியுள்ளது.

அப்போதுசொன்னவர் நல்லவராசொன்னவர் உண்மை பேசுபவராஎன்கிற ஆய்வைஅடிப்படையாக கொண்டு தான் ஒன்றை உறுதி செய்ய இயலும்.

ஆகஅறிவிப்பவர் நேர்மையாளராக இருக்க வேண்டும் என்கிற அளவுகோல் இங்கேஅவசியமாகிறது.
நேர்மையாளர் என்றவுடன் 100% சதவிகிதம் தவறே செய்யாதவர் என்று அர்த்தமில்லை.
மனிதன் என்கிற முறையில் எல்லா தவறுகளும் இருப்பவராக தான் இருப்பார்.
எனினும்தன்னளவில் தவறுகள் செய்பவன் கூட பிறரை வஞ்சிக்கக் கூடாது என்கிறகொள்கையில் இருப்பான்பிறரிடம் மோசடி செய்யக் கூடாது என்கிற ஒழுக்கத்தோடுஇருப்பான்,முக்கியமாக நபியின் பெயரால் பொய்யுரைக்கக் கூடாது என்கிற அச்சத்துடன்இருப்பான்.
அத்தகையோர் தான் ஒரு ஹதீஸை அறிவிப்பதற்கு தகுதியானவர்கள்.

இந்த அளவுகோலை கூட இமாம் ஷுஃபா போன்றவர்கள் சுயமாக முடிவு செய்து விடவில்லை.
மாறாகஒரு செய்தியை நாம் அறிந்தால் கேட்டவுடன் அதை நம்பாமல் ஆய்வு செய்யவேண்டும்சொன்னவரின் நம்பகத்தன்மையை எடை போட வேண்டும் என்பதாக குர் ஆன்கூறுகின்ற பல்வேறு அளவுகோல்களை சான்றாக முன்வைத்து தான் இந்த விதியினைவகுக்கிறார்கள்.

 நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதி ருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (49:6)

இந்த வசனத்தில், ஒருவர் கொண்டு வரக்கூடிய செய்தியினை அப்படியே ஏற்றுக்கொண்டு விடாமல் இயன்றவரை விசாரித்துக் கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அது போல்,

உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை (17:36)

எந்த விஷயத்தில் போதுமான அறிவு நமக்கு இல்லையோ அதை பின்பற்றக் கூடாது எனும் போது, அறிவிப்பாளர் எதை சொன்னாலும் அதை கண்மூடித்தனமாய் பின்பற்றுவது தகாது என்று எளிதில் புரிந்து கொள்ளலாம்.


இதைக் கேள்விப்பட்ட போது 'இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு' என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா? (24:16)

ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக பரப்பப்பட்ட அவதூறு செய்தி குறித்து அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்லும் போது, அதைப் பற்றிய ஞானமில்லாமல் பரப்பிய குற்றத்திற்காக அல்லாஹ் கடுமையாக கோபம் கொள்கிறான்.
உங்களுக்கு ஞானமில்லாத விஷயங்களை பரப்புவது அவதூறு என்று அல்லாஹ் இதில் சொல்வதிலிருந்தும், ஹதீஸ் எனக்கூறி அறிவிக்கப்படும் அனைத்தையும் தக்க ஞானமின்றி ஏற்கக் கூடாது என்று புரியலாம்.

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! (65:2)

விவாகரத்தின் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொதுவாக அல்லாஹ் சொல்லாமல், நேர்மையான சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதிலிருந்து, மனிதர்களின் நேர்மையை உரசிப் பார்ப்பதும், அதை கண்டறிவதும் அவசியம் என்று புரிகிறது
இதே கருத்தை கீழ்காணும் வசனமும் விளக்குகிறது.

நம்பிக்கை கொண்டோரே! இஹ்ரா முடன் இருக்கும் போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்! உங்களில் எவரேனும் வேண்டுமென்றே அதைக் கொன்றால் அவர் கொன்ற பிராணியுடன் ஒத்துப் போகும் கால்நடை (ஆடு, மாடு ஒட்டகம் ஆகியவை) பரிகாரமாகும். அது கஅபாவைச் சென்றடைய வேண்டிய காணிக்கை(ப் பிராணி). அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு ஈடான அளவு நோன்பு நோற்க வேண்டும். உங்களில் நீதியுடைய இருவர் இது பற்றித் தீர்ப்பளிக்க வேண்டும்.  (5:95)

இதிலும் நீதமான இருவரிடம் தீர்ப்பு கேட்குமாறு அல்லாஹ் சொல்வதிலிருந்து மனிதர்களின் நிதமாக நடப்பவர் யார், நீதி தவறி நடப்பவர் யார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிகின்றது.



நீ உண்மை சொல்கிறாயா? பொய்யர்களில் ஆகி விட்டாயா? என ஆராய்வோம்' என்று அவர் கூறினார். (27:27)

இவ்வசனத்தில், சுலைமான் நபியிடம் ஹூத் ஹூத் பறவை அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் ராணியின் செயல்கள் குறித்த செய்தி ஒன்றை கூறும் போது, அதை கூட உடனடியாக சுலைமான் நபி ஏற்கவில்லை.
மாறாக, நீ சொல்வது உண்மையா பொய்யா என்பதை நான் முதலில் ஆராய்வேன் என்றே கூறினார்கள். 

ஆகநபி (சல்அவர்கள் சொன்னதாக அறிவிப்பவர் நேர்மையாளர் என்று அறியப்பட்டால் தான்அதை சஹீஹ் அந்தஸ்த்துக்கு கொண்டு வருவார்கள்.

பொய்யர் என்று தெரிந்தாலோ அல்லது அவர் பொய்யரா நேர்மையாளரா என்கிற தகவலேகிடைக்காமல் இருந்தாலோ அவர் கூறுகின்ற ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்கிறபட்டியலில் சேர்க்க மாட்டார்கள்.


2. செய்தியை சரியான முறையில் உள்வாங்கி புரியக் கூடியவராக இருக்க வேண்டும்.

இதுவும் ஹதீஸ் விதிகளில் உள்ளது இரண்டாவது அளவுகோல்.

அறிவிப்பவர் நல்லவராகவும் நேர்மையாளராகவும் இருந்தாலும் கூடசொல்லப்படும்செய்தியை சரியான முறையில் புரிந்து கொள்வதற்கு அவை போதுமான தகுதிகளாக ஆகாது.
நேர்மையாளர் கூட ஒன்றை தவறாக புரிந்து விடுவார்கேட்பதில் சில வார்த்தைகளைகவனக்குறைவால் தவற விடுவார்அதனாலும் கூட கருத்துக்கள் மாறிப்போய் விடலாம்.

ஆகசொல்லப்படும் செய்தி என்னவோ அதை அதே பொருளில் புரிந்து கொள்வது என்பதுஹதீஸ் அறிவிப்பாளரின் முக்கிய தகுதியாக இமாம்கள் நிர்ணயம் செய்கின்றனர்.

நாம் கூட இன்று சஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்கிறோம்.
ஆனால் அதை வெளியே பிரச்சாரம் செய்பவர்கள் எப்படி சொல்கிறார்கள்இவர்கள்சஹாபாக்களை திட்டுகிறார்கள் என்கிறார்கள்.
இது தான் அறிவிப்பாளரின் பலகீனம்.

எனவேபுரிதலில் கவனத்துடன் இருந்துசொல்லப்பட்ட செய்தியை முழுமையாகஉள்வாங்கக்கூடியவரா என்பதை அலசுவதை இரண்டாவது விதியாக வகுக்கின்றனர் இந்த இமாம்கள்.


3. அறிவிப்பாளர்களில் ஒருவருக்கொருவர் சங்கிலித் தொடர்பு இருக்க வேண்டும்.

இப்ராஹிம் என்கிற ஒருவர் வாயிலாக நான் இதை கேட்டேன் என்று இஸ்மாயில் என்பவர்சொன்னால்இந்த இஸ்மாயில் இப்ராஹிம் காலத்தில் வாழ்ந்தவர் தானாஎன்பதை சரி பார்க்கவேண்டும்.
அவர் காலத்தில் வாழாதவர் அவரிடம் கேட்டிருக்க முடியாது.
அதே போன்றுசம காலத்தில் வாழ்ந்தவராக இருந்தால் மட்டும் போதாதுஇருவரும் சந்தித்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்திருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு இப்ராஹிம் டில்லியிலும் இஸ்மாயில் சென்னையிலும் வாழ்ந்தவர்களாகஇருந்தால் இவர்கள் எப்போதேனும் சந்தித்திருக்கிறார்களாஇவர் டில்லிக்கு சென்றாராஅல்லது அவர் சென்னைக்கு வந்திருக்கிறாராஎன்றெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும்.
அதே போல்இப்ராஹிமிடம் கேட்டதாக இஸ்மாயில் சொல்கிறார் என்றால் கேட்டு புரிவதற்குரிய வயதில் தான் இஸ்மாயில் இருந்தாராஎன்பதையும் சரி பார்க்க வேண்டும்.
இப்ராஹிம் சென்னைக்கு வந்த சமயத்தில் இஸ்மாயிலின் வயது 6 ஆக இருக்கும்,அப்படியானால் இவர் இப்ராஹிமிடம் செய்திகளை கேட்டிருப்பாராகேட்டு அறிவிக்கின்றமுதிர்ச்சியை அவர் அப்போது பெற்றிருக்கவில்லை என்கிற முடிவுக்கு வருவார்கள்.

ஆகஒரு அறிவிப்பாளர் நேர்மையானவர் என்று முடிவு செய்த பிறகுஅவர் தெளிவாக புரியக்கூடியவர் தானா என்பதை உறுதி செய்த பிறகுஅவர் பிறந்த வருடம்அவர் வாழ்ந்த காலம்,வாழ்ந்த பகுதிஎத்தனை வருடங்கள் வாழ்ந்தார்எந்த வயதில் இந்த செய்தியை அவர் கேட்டார்,என்றெல்லாம் பல அடுக்கு ஆய்வுகளை இமாம்கள் மேற்கொள்கின்றனர்.

இதில் எந்த ஒன்றிலாவது குறைவு ஏற்பட்டாலோ சங்கிலித் தொடரில் முறிவு இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டாலோஒன்றுஏதேனும் ஒரு நபர் இடையில் விடுபட்டிருக்க வேண்டும்அல்லது இவர் பொய் சொல்லியிருக்க வேண்டும்இரண்டில் எதுவாக இருந்தாலும் இந்தஹதீஸ் சஹீஹாக இருக்க முடியாது என்கிற அடிப்படையில் அதை தள்ளி விடுவார்கள்.


4. அறிவிக்கப்பட்ட செய்திஅதை விட பலமான இன்னொரு செய்திக்கு முரணாக இருத்தல்கூடாது.

இதுவும் முக்கியமான அளவுகோலாகும்.

ஒரு செய்தியை ஒருவர் அறிவிக்கிறார்.
அதற்கு முரணான ஒரு கருத்தை மூவர் அறிவிக்கிறார்கள் என்றால் மூவர் அறிவிப்பது தான்நம்பகத்தன்மையில் அதிகம் வலுவானவைகாரணம்மூன்று பேரிடம் குறை ஏற்படுவதைவிட ஒருவரிடம் குறை ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு அதிகம்.
ஆகஅந்த ஒருவர் நம்பகமானவராக இருந்தாலும்நேர்மையானவர் என்று அறியப்பட்டாலும்,தெளிவான சிந்தனை கொண்டவர் என்று உறுதி செய்யப்பட்டாலும்அதை விட வலுவாகஅறிவிக்கப்படும் மூன்று பேரின் செய்திக்கு இவரது கூற்று முரணாக இருப்பதால் இவரதுகூற்றை பலகீனம் என்று தள்ளி விடுவார்கள்.

5. நுணுக்கமான குறைபாடுகள் இருக்கக் கூடாது.

இதுவும் ஹதீஸ் கலை விதிகளில் ஒரு முக்கியமான விதியாக இமாம்கள்கருதியிருக்கிறார்கள்.
வெளிப்படையாக தெரியக்கூடிய குறைகள் இருப்பது போல் நுணுக்கமான குறைகளும்இருக்கக் கூடாது என்கிற அளவிற்கு ஹதீஸ்களை வகைப்படுத்துவதில் அந்த அளவிற்குகண்ணும் கருத்துமாய் இமாம்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம்.

(நுணுக்கமான குறைகள் என்றால் என்ன என்பதைப் பற்றி அடுத்த தலைப்பில் விரிவாக காணலாம்)


ஆகஹதீஸ் துறையில் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் சொன்னவரதுநம்பகத்தன்மையை உரசிப்பார்ப்பதற்கும் குர் ஆன் ஹதீஸ்களில் கூட ஏராளமான சான்றுகளை நம்மால் காண முடியும்.

சந்தேகமானதை விட்டு விடுங்கள்சந்தேகமற்ற விஷயங்களை பின்பற்றுங்கள் என்று நபி (சல்)அவர்கள் கூறிய செய்தி ஹதீஸ்களில் பதிவாகியிருக்கிறது.

ஒரு செய்தியை ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கிறார் என்றால்அவரது நேர்மை தொடர்பாகவும்,அவரது சிந்தனைத் திறன் தொடர்பாகவும் நமக்கு சந்தேகம் எழுந்து விட்டால் அத்தகையசெய்தியை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸே சான்றாகஇருக்கின்றது.

அதே போன்றுதிருமணத்திற்காக பெண்ணை தேர்வு செய்யும் போது நான்கு காரணங்களுக்காக மணமுடிக்கிறீர்கள்எனினும் தீனுடைய பெண்னை தேர்வு செய்து வெற்றிபெறுங்கள் என்பதாக நபி (சல்அவர்கள் கூறியிருப்பதும் எதை காட்டுகிறது?

ஒருவரின் குணத்தைமார்க்கப் பற்றையெல்லாம் ஆய்வு செய்யலாம் என்று இதன் மூலம்தெரிகின்றது.

அது போல்கேள்விபட்டதையெல்லாம் பரப்புபவனே அவன் பொய்யன் என்பதற்கு சான்றாகும்என்று நபி (சல்அவர்கள் சொன்னதாக முஸ்லிம் 6 இல் பதிவாகியிருக்கும் ஹதீஸும்,கிடைக்கப்பெறும் செய்தியினை ஆய்வு செய்தே பின்பற்ற வேண்டும் என்கிற விதியினை நமக்கு வகுக்கிறது.

அதே போல்நபி (சல்அவர்கள் மற்றொரு சந்தர்ப்பத்தில் சொல்லும் போதுஎன் பேரில் பொய்சொல்வது மற்ற விஷயங்களில் பொய் சொல்வதைப் போன்றதல்லமாறாக அது கொடியநரகிற்கு உங்களை இழுத்துச் செல்லும் என்று கடுமையான முறையில் எச்சரிக்கைசெய்திருக்கிறார்கள்.

இது புஹாரி 1291 இல் பதிவாகியிருக்கும் ஹதீஸாகும்.

ஆகநபியின் பெயரால் ஒரு செய்தி அறிவிக்கப்படுமேயானால்கண்மூடித்தனமாக அவற்றைநம்பி விடக் கூடாதுமாறாகஅது உண்மை செய்தி தானாஇதை நபி (சல்அவர்கள்சொல்லியிருப்பார்களாஇதை அறிவிப்பவர் உண்மையாளர் தானாஎன பல ஆய்வுகளைசெய்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.




நம்பகமான அறிவிப்பாளர் என்றால் என்ன பொருள்?


அதே சமயம்இன்னொன்றையும் நாம் தெளிவாக புரிய வேண்டும்.
ஒரு அறிவிப்பாளரின் அறிவிப்பை நாம் ஆதாரப்பூர்வமானது என ஏற்கிறோம் என்றால் அவர்நூறு சதவிகிதம் பரிசுத்தமானவர் என்று சான்று வழங்குவதாக அர்த்தம் இல்லை.
இமாம்கல் அலசியது வரை அவர் நேர்மையாளராக அவர்கள் பார்வைக்கு தென்பட்டார்,அவ்வளவே !
வெளிப்படையாக தென்படும் குணத்தை வைத்து தான் நம்மால் எடை போட முடியும்அதுதான் நமக்கு கடமையும் கூட.
அதை தாண்டி ஆராய்வது நமக்கு இயலாத காரியம்அது அல்லாஹ்வின் மறைவானஞானத்தில் தான் உள்ளது.

இந்த கருத்தை நபி (சல்அவர்கள் கீழ்காணும் வகையில் விளக்குகிறார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, ‘நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம். மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்) விட்டு விடட்டும்” என்று கூறினார்கள். 
புஹாரி 2458


இதிலிருந்து நமக்கு விளங்குவது என்ன?

நபி (சல்அவர்கள் ஒருவரை நல்லவர் என்று நம்பினால் கூட அது தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறதுவெளிப்படையான செயல்களை வைத்து தான் ஒருவரது குணத்தைநம்மால் அலச முடியுமே தவிரஉண்மை அதற்கு மாற்றமாகக் கூட இருக்கலாம்.
நபி (சல்அவர்களின் புரிதலிலேயே இவ்வாறு தவறுகள் வரலாம் எனும் போது இமாம்கள்ஒருவரை நேர்மையாளர் என்று கண்டறிந்து விட்டால் தவறே வராதா?

நபி (சல்அவர்களோ அந்த நபரை நேருக்கு நேராக கண்டவர்கள்அவரோடு உரையாடியவர்கள்,அவர்களுக்கே சில நேரங்களில் சரியாக அளக்க முடியாமல் போய் விடும் போதுநேருக்குநேராக காணாமல்வெறும் வாய் வழிச் செய்திகளாகவே ஒரு அறிவிப்பாளரின் வரலாற்றைஅறிந்த இமாம்கள்தவறே இழைத்திருக்க மாட்டார்களா?
என்பதை சிந்திக்க வேண்டும்.

எனவேநல்லவர் என்று அறியப்பட்டவர் இமாம்களின் பார்வையில் நல்லவர்அவர்களுக்குகிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் அந்த அறிவிப்பாளரை நல்லவர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள்கிடைக்காத வேறு தகவல்களும் இருக்கலாம்அந்த தகவல்களின் படிஇவர் நல்லவராக இல்லாமல் கூட இருக்கலாம்அல்லது தெளிவான முறையில் புரியாதவராககூட இருக்கலாம்.
இப்படி தான் நாம் புரிய வேண்டும்.

நாமே ஒரு பெண்ணை நல்ல ஒழுக்கமுள்ளசாலிஹான பெண் என்று எண்ணித் தான்திருமணம் செய்கிறோம்.

திருமணத்திற்குப் பிறகு தான் உண்மை நிலவரம் தெரியவரும்எத்தனையோ குடும்பங்களில்சண்டைசச்சரவுகள்விவாகரத்து வரை கூட செல்கின்றன.
ஆகநல்ல பெண்சாலிஹான பெண் என்றால் நாம் பார்த்தவரை சாலிஹான பெண் என்பதுதான் பொருளே தவிரஅவள் சொர்க்கம் புகுவாள்அந்த அளவிற்கு நல்லவள் என்று பொருள்இல்லை !

நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய சஹாபாக்கள் தொடர்பான ஹதீஸ்களில்போரின் போது,கலிமா சொன்ன ஒருவரை ஒரு சஹாபி கொன்று விடுவார்ஏனென்று நபி (சல்அவர்கள்வினவும் போதுஅவர் தற்காத்துக் கொள்வதற்காகவே அப்படி சொன்னார் என்று இந்த சஹாபிவிளக்கமளிப்பார்.
ஆனால்அந்த விளக்கத்தில் நபி (சல்அவர்கள் கோபம் கொள்வார்கள்.
வெளிப்படையாக நீ எதை கண்டாயோ அதனடிப்படையில் தான் தீர்ப்பு வழங்க வேண்டுமேதவிரநீ அவரது உள்ளத்தைப் பிளந்து பார்த்தாயாஎன்று மிகக் கடுமையாக கோபம்கொள்கிறார்கள்.
இந்த சம்பவம் புஹாரி 287 இல் பதிவாகியிருக்கிறது.

ஆகஇமாம்கள் ஒரு ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று பதிகிறார்கள் என்று சொன்னால் மேற்கூறப்பட்ட ஐந்து ஹதீஸ் கலை விதிகளும் பேணப்பட்டிருக்கிறது என்று பொருள்.
அறிவிப்பாளர் நேர்மையாளர்அவர் தெளிவாக புரிந்து கொள்பவர் போன்றவையெல்லாம்இமாம்களின் பார்வையில்அவர்களுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில்எடுக்கப்பட்ட முடிவு தானே தவிர, 100 சதவிகிதம் பரிசுத்தமானவர்கள் தான் அந்தஅறிவிப்பாளர்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது.



அறிவிப்பாளரை அலசுவது புறம் பேசுவதாகுமா?

அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை அலசுவது அவர்களை புறம்பேசுவதாக ஆகிறது என்பதாக ஒரு தவறான வாதத்தை சிலர் முன்வைக்கின்றனர்.
ஆனால், யார் இந்த வாதத்தை முன் வைக்கிறார்களோ அவர்கள் பின்பற்றுகின்ற இமாம்களும் கூட அறிவிப்பாளர்களை அலசியிருக்கின்றனர் என்பது தான் வேடிக்கை.

அபு சாஹித் என்பவர் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பலிடம் இதே கேள்வியை முன்வைக்கிறார்.
அறிவிப்பாளரின் நிறை,குறைகளையெல்லாம் அலசுவது என்பது அவர்களைப் பற்றி புறம் பேசுவதாக ஆகாதா? என்று.

அதற்கு பதிலளித்த அஹ்மத் இப்னு ஹம்பல் இமாம், இதுவெல்லாம் புறம் பேசுவதில் அடங்காது எனவும், இது நன்மையை நாடி செய்யப்படும் காரியம் எனவும் பதிலளிக்கிறார்கள்.

நபி (சல்) அவர்கள் சொன்ன உண்மையான ஹதீஸ்களும் அவர்கள் சொல்லாத, அவர்கள் பெயரில் புனையப்பட்ட பொய்யான ஹதீஸ்களும் கலந்திருக்கும் ஒரு சமூகத்தில், எது சரியான செய்தி, எது பொய்யான செய்தி என்று பிரித்தறிவிக்கும் பணி என்பது சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரும் தொண்டு.
அது நிச்சயம் புறம் பேசுவதில் அடங்காது என்பதாக அஹ்மத் இமாம் விளக்கமளிக்கிறார்கள்.

அதே போல், நீங்கள் எந்த அறிவிப்பாளரை விமர்சிக்கிறீர்களோ அவர்கள் நாளை மறுமையில் உங்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் முறையிட வருவார்கள் என்று சொல்லப்பட்ட போதும்,
நபியின் பெயரால் பொய்யான செய்திகளை நான் பரப்பும் போது நாளை நபி (சல்) எனக்கெதிராக வருவார்களே, அதை விட, இந்த அறிவிப்பாளர் வருவது எவ்வளவோ மேல் என்பதாக பதிலளிக்கிறார்கள்.

அறிவிப்பாளரின் குறையை கண்டறிவது என்பது அவரை குறைப்படுத்தி அவரை இழிவுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் அல்ல.
மாறாக, அவர் மூலமாக கிடைக்கப்பெறும் ஹதீஸ்கள் உண்மையில் ரசூல் (சல்) அவர்கள் சொன்னவை தானா அல்லது அவர்கள் பெயரால் புனையப்பட்டவையா என்பதனை கண்டறிவதற்காக மட்டுமே அவ்வாறு அலசப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தொடரும், இன்ஷா அல்லாஹ்



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக