வெள்ளி, 13 செப்டம்பர், 2013

முகநூல் பதிவுகள் : அப்பாவி ஊடகம்




இந்தியாவில் முதலும் கடைசியுமாய் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் 2012 டிசம்பரில் புது டில்லியில் நடந்த சம்பவம் தான்.

அதற்கு முன்னரும் பின்னரும், நாட்டிலுள்ள எந்த பெண்ணையும் எந்த ஆணும் ஏறெடுத்து கூட பார்த்தது கிடையாது.

எந்த ஆணாவது எந்த பெண்ணையாவது கேலியாவது செய்ததுண்டா ? ஊஹும்...
கற்பழிப்பு ? கேலியே செய்ததில்லை எனும் போது கற்பழிப்பா?

காந்தி கண்ட கனவு 1947 ஆகஸ்ட் முதல் 2012 நவம்பர் வரையிலும், பிறகு 2013 ஜனவரி முதலும் தொடர்ந்து அச்சுபிசகாமல் பலித்து வருகிற உன்னதமான (??) திரு நாட்டில் தான் நாம் வாழ்கிறோம்.

இந்த உண்மை தெரியாமல், டெல்லி சம்பவத்தை மட்டும் ஊடகம் பெரிது படுத்தியதன் மர்மம் என்ன ? தமிழகத்தில், இன்னபிற மாநிலங்களில் நடப்பதெல்லாம் இந்த ஊடக பச்சோந்திகளுக்கு தெரியவில்லையா? என்று அப்பாவிகளான (??) ஊடகங்களை சிலர் ஏசுகிறார்கள்..
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக