வெள்ளி, 13 செப்டம்பர், 2013

மாற்று மத பண்டிகைக்கு வாழ்த்து சொல்லலாமா?



மற்ற மதத்தவர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வது சரி என்றால் அந்த பண்டிகைகளை நாம் கொண்டாடுவதும் சரி தான்.

கொண்டாடுவது தவறு என்றால் வாழ்த்து சொல்வதும் தவறு தான்.

இப்படி புரிவது தான் சரியான பகுத்தறிவு.

கொண்டாட கூடாது தான், ஆனால் வாழ்த்து சொன்னால் என்ன தவறு என்று கேட்பவர்கள் சற்று சிந்தித்தாலேயே, இது பகுத்தறிவற்ற கேள்வி என்பது புலப்படும் !

கிருஷ்ணனை நான் வணங்கவில்லை, அப்படி ஒருவர் வாழ்ந்ததாகவும் நான் நம்பவில்லை. ஆகவே, இல்லாத கிருஷ்ணரை கடவுளாக வணங்குவதற்கு என்று ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டால் நான் அதை கொண்டாட மாட்டேன்.
கொண்டாடுபவர்களை ஊக்குவிக்கவும் மாட்டேன்.

மேலும், கிருஷ்ணனை வணங்குவதற்காக பண்டிகையை நான் கொண்டாடினால் நான் நரகம் செல்வேன் என்பது எனது நம்பிக்கை. 

அதை யார் கொண்டாடினாலும் அவர் நரகம் செல்வார் என்று தான் நம்புகிறேன்.

இப்படி நம்பி விட்டு, அவ்வாறு கொண்டாடும் ஒரு ராமசாமிக்கு "ஹேப்பி கிருஷ்ண ஜெயந்தி" என்று நான் சொன்னால் சந்தோஷமாக நரகத்திற்கு செல் என்று அந்த ராமசாமியை பார்த்து நான் சொல்வதாக தானே பொருளாகும் ????

ராமசாமி மீது அன்பிருந்தால் அவர் கொண்டாடும் பண்டிக்கைக்கு ஒரு முஸ்லிம் வாழ்த்து சொல்லகூடாது !!

இதில் காழ்ப்பும் இல்லை, குரோதமும் இல்லை. இது அவரவர் கொள்கையை சார்ந்தது !






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக