வெள்ளி, 13 செப்டம்பர், 2013

முரண்பாட்டு மூட்டையாக இந்தியா !


தீவிரவாதம் என்றால் அது இஸ்லாம் இல்லை, இஸ்லாம் என்றால் அங்கே தீவிரவாதம் இல்லை. தீவிரவாதத்தை, மற்ற மதங்களை விடவும் கடுமையாக எதிர்க்கிற ஒரு மதம் இஸ்லாம் !

ஆனால், இன்று இத்தகைய எதிர்மறை நிலைகள் கூட, இந்தியாவிலுள்ள அதிகாரம் படைத்தவர்களாலும் ஊடக துறையினராலும் நேர்மறையாக திரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முரண்பட்ட இரு நிலைகளை கூட நேர்மறையாக பாவிக்கும் இந்த சமூகம், இது போல் இன்னும் பல முரண்பாடுகளையும் முரண்பாட்டாளர்களையும் விட்டு வைத்து தான் உள்ளது..

மதநல்லிணக்கதை பற்றி பேசும் நரேந்திர மோடி போல..

ஜாதி பாகுபாடு தமக்கு இல்லை என்று பேசும் ராமதாஸ் போல..

உலக அமைதி பற்றி ஐநாவில் பேசும் அமெரிக்கா போல..

பகுத்தறிவுக்கு சொந்தம் கொண்டாடும் நாத்திகர்கள் போல..

கலவர தடுப்பு மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பாஜக போல..

குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை பற்றி பேட்டி வழங்கும் சினிமாக்காரர்கள் போல..

சிக்கனத்தை போதிக்கும் இந்திய அரசியல்வாதிகள் போல..

ஊழலை கண்டிக்கும் ஹசாரேக்கள் போல..

தனி மனித ஒழுக்கத்தை பற்றி பேசும் நித்தியானந்தா போல..

உண்மைக்கு குரல் கொடுப்பதை சொல்லும் இந்திய ஊடகங்களை போல.. !!!!

......முரண்பாட்டு மூட்டையாக இந்தியா !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக