செவ்வாய், 18 ஜனவரி, 2011

ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு இறுதி அழைப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்


அன்பு சகோதரர் ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு..

இதுவரை நிகழ்ந்த விவாதத்தின் போது, பல பல கேள்விகளையும் ஹதீஸ்களையும் நான் முன்வைத்த போதும் கூட, நான் மெயில்களை பிரிக்கிறேன் என்றும், முழு ஹதீஸ்களையும் பதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன் வைத்து, அதை சரி செய்யும் பட்சத்தில் மட்டுமே நாம் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன் என்று கூறி வந்தீர்கள்.

ஆதாரங்கள் சொன்ன பிறகும் கூட, வேறு வேறு காரணங்களை கூறி பதில் சொல்வதை விட்டும் தவிர்ப்பதை தானே இவர் நோக்கமாக கொண்டிருக்கிறார் என்ற வகையில், ஒரு கட்டத்தில், உங்களுடனான விவாதத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நான் நினைத்தேன்.

ஆனால், இதன் காரணமாக, அந்த ஹதீஸ்களுக்கு நீங்கள் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள், நான் சொல்லும் ஆதாரங்கள் எனது கொள்கைக்கு எவ்வாறு முரணாக இருக்கிறது என்பதை நானும் பிறரும் அறிய ஒரு சந்தர்ப்பம் இல்லாமல் போகிறது என்ற கவலையும் இன்னொரு பக்கம் உள்ளது.

இறைவனை முன்னிறுத்தி மட்டுமே நான் இதுவரை விவாதம் செய்து வந்ததால், எனது கருத்தில் தவறு இருக்கிறதா? என்பதை இதுவரை என்னால் அறிய முடியாமல் இருப்பது ஏமாற்றத்தை தருகிறது.

இதை மனதில் கொண்டு உங்களுக்கு நான் மீண்டும் ஒரு அழைப்பை இறுதியாக கொடுக்கிறேன்..

பிறை குறித்த விவாதத்தை மீண்டும் செய்வோம், வாருங்கள்..

ஆனால், இந்த முறை சற்று நெறிமுறைகளுடனும், கண்டிஷங்களுடனும்..

நீங்கள் என் மீது என்னென்ன குற்றச்சாட்டை வைத்தீர்களோ, உதாரணம், (மெயில்களை பிரிக்கிறேன்.,.) அது போன்ற எந்த தவறுகளும் இனி தெரிந்தோ தெரியாமலோ நிகழாது, இன்ஷா அல்லாஹ்.

நான் உங்களது அந்த கோரிக்கையை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

விவாதத்தை மீண்டும் ஆக்கப்பூர்வமான முறையில் தொடர்வதற்கு (அல்லது தொடங்குவதற்கு) நீங்கள் என்னென்ன கண்டிஷன்களை சொல்கிறீர்களோ, அதை இங்கு பட்டியலிடுங்கள். முடிந்த வரைக்கும் அதை நாம் பேணி நடக்கிறோம்..

என் நினைவுக்குட்ப்பட்டு, நான் சில கண்டிஷன்களை உங்களுக்கு வைக்கிறேன்.

  • நம் இருவருக்கிடையே பிறை சம்மந்தப்பட்ட கருத்துப்பரிமாற்றங்கள் அனைத்தும் ஒரே மெயிலின் கீழே, ஒரே தலைப்பின் கீழே மட்டுமே இருக்க வேண்டும். (இது நீங்கள் என்னை நோக்கி வைக்கும் கண்டிஷன் தான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் )

  • வேலை பழு காரணமாகவும், மற்ற மற்ற மார்க்க விஷயங்களையும் அறிவதற்கு நேரம் வேண்டும் என்பதாலும், ஒரு நாளைக்கு நம் இருவரும் ஒரு மெயிலுக்கு மேலே எழுதக்கூடாது.

  • நம் இருவர் தவிர்த்து வேறு எந்த சகோதரர் அந்த மெயிலில் கருத்து பதித்தாலும், அவர்களுக்கு நாம் பதில் அளிக்க கூடாது. (அவ்வாறு பதில் அளித்தால், அதுவும் ஒரு நாளைக்கு ஒரு மெயில் கோட்டாவில் வந்து விடும்.. அதாவது, அந்த நாளைக்குரிய நமது வாய்ப்பை இழந்தவர்களாகி விடுவோம்!

  • பிறை சம்மந்தமாக , என்னை அல்லது உங்களை குறித்து வேறெந்த விமர்சனங்களையும் இந்த மெயில் தவிர்த்து வேறெந்த மெயிலிலும் நாம் இருவரும் பதிக்ககூடாது. அவ்வாறு பதிக்கப்பட்டது கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டாது. நாம் பேசிக்கொண்டிருக்கும் மெயிலில் சொல்லப்படும் கருத்துக்கள் மட்டுமே ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படும்.

  • அதே சமயம், வேறு வேறு மெயில்களில் வேறு சகோதரர்கள் எதையாவது எழுதி, அதற்கு நாம் பதில் சொல்வது இந்த கண்டிஷனில் அடங்காது. அது போன்று நாம் பதில் மட்டுமே வேறு மெயில்களில் எழுதுவது, நமது விவாதத்தை பாதிக்காது !!

இது போக, வேறு ஏதேனும் கண்டிஷன்கள் என் நினைவுக்கு வந்தால் அதையும் எழுதுகிறேன்..

உங்களுக்கு தோன்றும் கண்டிஷன்களை இங்கு எழுதி, இத்தனை கண்டிஷங்களோடும், ஒப்பந்தத்தோடும் பிறை குறித்த கருத்துப்பரிமாற்றதை, இறைவனை முன்னிறுத்தி நீங்கள் செய்ய தயாரா? எனபதை எனக்கு பதிலாக எழுதுங்கள்.

திங்கள், 17 ஜனவரி, 2011

ஹிஜ்ரா கமிட்டியின் இரட்டை வேடம் - 2


அஸ்ஸலாமு அலைக்கும்..

ஏர்வாடி ஹிஜ்ரா கமிட்டியின் ஆதரவு பெற்ற, Er . அப்துஸ்ஸமத் அவர்களின் "பிறை பார்த்தல்", நூலில் காணப்படும் மற்றுமொரு ஹதீஸ் விளக்கத்தை இங்கே தருகிறேன்.

பக்கம் 18 :
அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்ததாக சஹீ முஸ்லிமில் காணப்பெறும் நபி மொழி ஒன்று கூறுகிறது :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், (ரமலான் மாதத்) தலைப்பிறையை பார்த்தால் நோன்பு நோற்கவும்.
அதே போல் (ஷவ்வால் மாத) தலைப்பிறையை பார்த்தால் நோன்பு நோர்ப்பதை முடிவுக்கு கொண்டு வரவும்.
ஆகாயம் மேகமூட்டமாக இருந்தால் நோன்பை 30 ௦ நாட்கள் நோற்கவும்.

இது அந்த நூலில் 18 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள வாசகம்!

ஏர்வாடி சிராஜ் நம்மோடு விவாதத்தின் போது பேசியதை இங்கு நினைவூட்டுகிறேன்..

ஒரு மாதத்தை முடிவு செய்ய அந்த மாதத்தின் தலைப்பிறையை பார்க்க வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று நம்மிடம் கேள்வி கேட்டார் இவர்.

ஒரு மாதத்தை தீர்மானிக்க முந்தைய மாதத்தை தான் பார்க்க வேண்டும் என்று கூறினார் இவர்.

ஆனால், இந்த நூலில் இவர்கள் எழுத்துள்ளது என்ன என்பதை கவனியுங்கள்..
நோன்பை துவக்க ரமளானின் தலைப்பிறையை தான் பார்க்க வேண்டுமாம்.
நோன்பை முடிக்க (ஷவ்வால் மாதத்தை தீர்மானிக்க) ஷவ்வால் மாத தலைப்பிறையை தான் பார்க்க வேண்டுமாம்..

இவர்களது இரட்டை வேடத்தை பார்த்து விட்டீர்களா?

அடுத்து, அந்த ஹதீஸில் மேகமூட்டம் என்ற வார்த்தையை நாம் கூறிய போது, மேகமூட்டம் என்ற வார்த்தை எங்குள்ளது என்று என்னிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார்கள் .

அதற்கு நாம் பதில் சொல்லும் போது, அந்த வார்த்தை இல்லை என்று சொல்கிறீர்களா? அப்படியானால் வேறு என்ன வார்த்தை இருக்கிறது? அதை நீங்களாவது விளக்கி, அந்த ஹதீஸில் நான் சொல்லும் கருத்து வராது என்பதை நிரூபியுங்கள் பார்க்கலாம், என்றேன்.
அதற்கு வாய் திறக்காதவர், மீண்டும் மீண்டும் "மேகமூட்டம்", என்ற வார்த்தை எங்குள்ளது என்று மட்டும் கேட்டு வந்தார்.

இதோ, அந்த நூலில் இவர்கள் எழுதியதை பாருங்கள்..

......ஆகாயம் மேகமூட்டமாக இருந்தால் நோன்பை 30 ௦ நாட்கள் நோற்கவும்.


இவரது இரட்டை வேடங்களை அறிந்து கொள்ளுங்கள்..

ஞாயிறு, 16 ஜனவரி, 2011

ஹிஜ்ரா கமிட்டியின் இரட்டை வேடம் - 1




அஸ்ஸலாமு அலைக்கும்


பிறையை கணிப்பது எந்த அளவிற்கு குர் ஆன் , ஹதீசுக்கு எதிரானது என்பதையும், கணித்து முடிவு செய்யலாம் என்று வாதம் செய்வோரது வாதத்தில் எந்த அளவிற்கு ஆதாரங்கள் இல்லாமல் இருக்கின்றன என்பதையும் நாம் தொடர்ச்சியாக கண்டு வந்தோம்.

இதை பற்றிய ஆய்வுக்கட்டுரை ஒன்றை தயாரிக்கும் இவ்வேளையில், எனது கவனத்திற்கு வந்த ஒரு நூலை பற்றி இங்கு அறிய தருகிறேன்.

"பிறை பார்த்தல் - ஒரு ஆய்வு"'
என்ற நூல்., ஏர்வாடி ஹிஜ்ரா கமிட்டியின் ஆதரவுடன், Er .அப்துஸ்ஸமத் அவர்களால் எழுதப்பட்ட ஒரு நூல்.

இந்த நூலில்பக்கம் 19 , 20 இல் எழுதப்பட்டிருப்பதை உங்கள் கவனத்திற்கு தருகிறேன்..

அதாவது, அந்த பாடத்தின் தலைப்பு : "கண்ணால் பார்த்தே முடிவெடுத்த காலமும் கணக்கிட திறனில்லா சூழலும்"

இதில், நாம் ஆதாரமாக வைத்திருந்த குறைப் ஹதீஸ், வாகனக்கூட்டம் ஹதீஸ், நீட்டப்படும் மாதங்கள் என்ற ஹதீஸ், ஆகிய ஹதீஸ்களை அவர்கள் எடுத்து வைத்து, விளக்கம் கொடுக்கிறார்கள்.

குறைப் ஹதீசுக்கு அவர்கள் கொடுத்த விளக்கம் பக்கம் 19 இல் இடம்பெற்றுள்ளது..!.

""பிறையை பார்த்தல் சம்மந்தமாக அன்றும் வேறுபட்ட கருத்துக்கள் நிலவி வந்தன என்பதை இந்த நபி மொழி விளக்குகிறது.
சிரியாவில் ஒரு நாளும் மதினாவில் பிறிதொரு நாளும் நோன்பு நோற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அது போல், சிரியாவில் ஒரு நாளும் மதினாவில் வேறொரு நாளும் நோன்பை முடித்து பெருநாள் கொண்டாடியிருக்கிறார்கள். ""
- பக்கம் 19 !

இது குறைப் ஹதீஸுக்கு அவர்கள் கொடுத்த விளக்கம்.


குறைப் ஹதீஸின் தமிழக்கத்தில் அவர்கள் எழுதியதை படிக்க வேண்டுமா?

அதே பக்கத்தில்..

""......... முஆவியா அவர்களும் பார்த்து நோன்பு வைத்தார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள், நாங்கள் சனிக்கிழமை இரவு தான் பார்த்தோம். எனவே நாங்கள் முப்பது நாட்களை நிறைவு செய்வது வரை அல்லது (ஷவ்வால் மாத)பிறையை பார்க்கும் வரை நோன்பு நோர்ப்போம்.................."

அடைப்புக்குறியில் அவர்கள் போடப்பட்டுள்ளது என்ன என்பதை கவனித்தீர்களா?

ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் துவங்கி விட்டதா என்பதை முடிவு செய்ய, ஷவ்வால் மாதப்பிறையை தான் பாக்க வேண்டும், என்று அவர்கள் கூறுவதை பார்த்து விட்டீர்களா?
நம்மோடு விவாதிக்கும் போது என்ன சொன்னார்கள், என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று!


அடுத்து,

நீட்டப்படும் மாதங்கள் குறித்த ஹதீஸை இவர்கள் விளக்குவதை பாருங்கள்..



"""மேலே எடுத்துரைக்கப்பட்ட நபி மொழிகள் யாவும், தலைப்பிறையை கண்ணால் நேரடியாக பார்த்தே மாததொடக்கதை கணிதுக்கொண்டார்கள் என்றே கூறுகின்றன என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. """"
பக்கம் 20

நம்மோடு நடந்த விவாதத்தின் போது இதை இவர்களால் ஒப்புக்கொள்ள இயன்றதா?
இதை அறிவித்தால் இவர்களால் தொடர்ந்து தனது கொள்கையை எடுத்து சென்று விவாதத்தை தொடர முடியாது என்பதால், இவர்களின் நயவஞ்சகத்தனத்தை இவர்களே அம்பலப்படுத்தியுள்ளார்கள்.

தொடர்ந்து இவர்களின் வண்டவாளங்கள் அனைத்தும் வெளிச்சம் போட்டுக்காட்டப்படும்..

மின்னஞ்சல் மூலமாக என்னோடு நடந்த விவாதத்தின் முழு தொகுப்பும் சில நாட்கள் கழித்து வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்..

வெள்ளி, 14 ஜனவரி, 2011

குழந்தைகளை தத்தெடுப்பது கூடுமா?

குழந்தைகளைத் தத்து எடுத்து வளர்ப்பதற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் அதே சமயம் எடுத்து வளர்ப்பதால் தந்தை, மகன் என்ற உறவோ, வாரிசுரிமையோ ஏற்பட்டு விடாது. நாம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கிறோம் என்றால் அந்தக் குழந்தையின் தந்தை பெயருக்குப் பதிலாக நம்முடைய பெயரைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.

இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒருவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தால் அக்குழந்தைக்கு அவர் தான் தந்தை என்று கருதும் வழக்கம் இருந்தது. வளர்ப்பு மகன் தன்னை எடுத்து வளர்த்தவருக்கு வாரிசாகி வந்தார். பின்பு இஸ்லாம் இதைத் தடை செய்து விட்டது.

குழந்தையை வளர்க்கும் பொறுப்பை ஏற்கும் அதே வேளையில் அக்குழந்தையின் தந்தை எவரோ அவர் தான் அக்குழந்தைக்குத் தந்தையாக எப்போதும் இருப்பார். வளர்ப்பவர் ஒருக்காலும் தந்தையாக முடியாது. வளர்க்கப்பட்டவர் வளர்த்தவருக்கு வாரிசாகவும் முடியாது என்று புதிய சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதைப் பின்வரும் வசனமும் ஹதீஸ்களும் தெளிவுபடுத்துகின்றன.

அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியா விட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றம் இல்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்). அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (33 : 5)

4000حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ أَبَا حُذَيْفَةَ وَكَانَ مِمَّنْ شَهِدَ بَدْرًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَبَنَّى سَالِمًا وَأَنْكَحَهُ بِنْتَ أَخِيهِ هِنْدَ بِنْتَ الْوَلِيدِ بْنِ عُتْبَةَ وَهُوَ مَوْلًى لِامْرَأَةٍ مِنْ الْأَنْصَارِ كَمَا تَبَنَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَيْدًا وَكَانَ مَنْ تَبَنَّى رَجُلًا فِي الْجَاهِلِيَّةِ دَعَاهُ النَّاسُ إِلَيْهِ وَوَرِثَ مِنْ مِيرَاثِهِ حَتَّى أَنْزَلَ اللَّهُ تَعَالَى ادْعُوهُمْ لِآبَائِهِمْ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அபூ ஹுதைஃபா (ரலி) அவர்கள் சாலிமைத் தம் வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்கள். அவருக்குத் தம் சகோதரரின் மகளான ஹிந்த் பின்த் வலீத் பின் உத்பாவைத் திருமணமும் செய்து வைத்தார்கள். சாலிம் ஓர் அன்சாரிப் பெண்ணின் அடிமையாக இருந்தவர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸைதை வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டது போல (சாலிமை, அபூ ஹுதைஃபா -ரலி- அவர்கள் வளர்ப்பு மகனாக்கிக் கொண்டார்கள்.) மேலும், அறியாமைக் காலத்தில் ஒருவரை அவருடைய வளர்ப்புத் தந்தை(யின் பெயர்)உடன் இணைத்து மக்கள் அழைப்பதும் அவரது சொத்துக்கு வாரிசாக (வளர்ப்பு மகனை) ஆக்கும் பழக்கமும் இருந்து வந்தது. "வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் இணைத்து அழையுங்கள்'' என்னும் (33:5) வசனத்தை அல்லாஹ் அருளும் வரையில் (இந்தப் பழக்கம் நீடித்தது.)

புகாரி (4000)

4782 حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ قَالَ حَدَّثَنِي سَالِمٌ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا كُنَّا نَدْعُوهُ إِلَّا زَيْدَ بْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ رواه البخاري

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை "ஸைத் பின் முஹம்மத்' (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்.

புகாரி (4782)

வளர்ப்புக் குழந்தைக்கு வாரிசுரிமை ஏற்படாது. எனினும் ஒருவர் விரும்பினால் தனது வளர்ப்பு மகனுக்கு மரண சாசனம் (உயில்) மூலம் சொத்தை எழுதி வைக்கலாம்.

(பாகப் பிரிவினை என்பது) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே.

அல்குர்ஆன் 4:11

செய்யப்பட்ட மரண சாசனம், மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்.)

அல்குர்ஆன் 4:12

பொதுவாக மரண சாசனம் செய்ய அனுமதி உள்ளதை இந்த வசனத்திலிருந்து அறியலாம். ஆயினும் இவ்வாறு செய்யும் மரண சாசனம் மூன்றில் ஒரு பகுதியைத் தாண்டக் கூடாது. மூன்று லட்சம் ரூபாய் சொத்துக்களை விட்டுச் செல்பவர் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்குத் தான் மரண சாசனம் செய்யும் உரிமை படைத்துள்ளார்.

ஒருவர் முழுச் சொத்துக்கும் மரண சாசனம் எழுதி வைத்தாலும் மூன்றில் ஒரு பங்கு அளவுக்குத் தான் அது செல்லும். எஞ்சியவை இஸ்லாம் கூறும் முறைப்படி வாரிசுகளுக்குப் பங்கிடப்பட வேண்டும்.

விடை பெறும் ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்த என்னை விசாரிக்க வந்தார்கள். அந்த நோயினால் நான் இறப்பின் விளிம்புக்கே சென்று விட்டிருந்தேன். நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு செல்வந்தன். எனக்கு ஒரேயொரு மகளைத் தவிர வேறு எவரும் இல்லை. இந்நிலையில் நீங்கள் பார்க்கின்ற வேதனை என்னை வந்தடைந்து விட்டது. ஆகவே நான் என் செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தர்மம் செய்து விடட்டுமா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். "அப்படியென்றால் அதில் பாதியைத் தர்மம் செய்து விடட்டுமா?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "மூன்றில் ஒரு பங்கு! ஸஅதே! மூன்றில் ஒரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டு விட்டுச் செல்வதை விட தன்னிறைவு பெற்றவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கும் எதுவாயினும் அதற்குரிய பிரதிபலனை அல்லாஹ் உங்களுக்கு அளித்தே தீருவான். உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டும் ஒரு கவள உணவாயினும் சரியே!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஅத் (ரலி)

நூல்: புகாரி 3936, 4409, 5668, 6373

மேலும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் பெண்கள் அக்குழந்தைக்குத் தாயாக முடியாது. அக்குழந்தை திருமணம் முடிக்க தடைசெய்யப்பட்ட நெருங்கிய உறவினராக முடியாது.

எனவே அக்குழந்தை பருவ வயதை அடைந்து விட்டால் ஒரு அந்நியரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் ஒழுங்கு முறைகளைக் கற்றுக் கொடுத்துள்ளதோ அந்த ஒழுங்கு முறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

உதாரணமாக தன்னால் வளர்க்கப்பட்டவருடன் தனியாக இருப்பது, பர்தா அணியாமல் அவருக்கு முன்னால் காட்சி தருவது போன்றவை கூடாது. அந்நிய ஆணுடைய அந்தஸ்த்தையே அவருக்குக் கொடுக்க வேண்டும்.
மேலும் அதிக விபரத்துக்கு பார்க்க

14.01.2011. 07:10

(onlinepj.com)




வியாழன், 13 ஜனவரி, 2011

பிறை குழப்பங்கள் !



பொய்யை மூலதனமாக கொண்ட ஏர்வாடி JAQH

பிறை : ஒன்பது ஆதாரங்கள்


ஏர்வாடி சிராஜ் - இவரை அறிந்து கொள்ளுங்கள்


நழுவும் சிராஜ்


விவாத சவடாலை ஏற்றுக்கொண்ட பிறகும் இழுத்தடிக்கும் ஹிஜ்ரா கமிட்டிக்கு பதில்


சத்தியத்தில் மோசடி செய்வது யார்? (சிராஜ் அவர்களின் பதில் இணைக்கப்பட்டுள்ளது )


ஏர்வாடி சிராஜ் அவர்களுக்கு இறுதி அழைப்பு

ஹிஜ்ரா கமிட்டியின் இரட்டை வேடம் - 1

ஹிஜ்ரா கமிட்டியின் இரட்டை வேடம் - 2


சிராஜ் அவர்களுக்கு ஒரு அன்பான அழைப்பு


தலைப்பு வாரியாக வரிக்கு வரி பதில்!

மெயில்களை பிரித்து மோசடி செய்கிறேனா?


அதிமேதாவிகளின் உளறலுக்கு பதில்

அர்த்தமற்ற சவால்!

பதில் சொல்லாதது யார்?

குர்ஆன் பிறையை காலம் காட்டி என்று சொல்வதை எந்த ஹதீஸ் மறுக்கிறது?

ஏர்வாடி சிராஜின் தவறான கொள்கைக்கு மறுப்பு - 1
ஏர்வாடி சிராஜின் தவறான கொள்கைக்கு மறுப்பு - 2

டவுன் ஹாஜி செய்தது மட்டும் எப்படி தவறாகும்?
ஹிஜ்ரா கமிட்டீயிடத்தில் சில கேள்விகள்
தடம் புரண்ட டவுன் காஜி

முஆவியா அவர்கள் பார்த்தது உங்களுக்கு போதாதா?

அரபா தினம் தெரிந்தும் மறுப்பது மனமுரண்டில்லையா?

சகோ.சிராஜ் அவர்களுக்கு ஒரு அன்பான அழைப்பு!!



சகோ. ஏர்வாடி சிராஜின் அறைகூவலுக்கு பதிலடி
மற்றும் சகோ, சிராஜ் அவர்களுக்கு ஒரு அன்பான அழைப்பு!!


அஸ்ஸலாமு அலைக்கும்..

ஒவ்வொரு தலைப்பிலும் சிராஜ் சொன்ன பொய்கள், அவர் செய்த நயவஞ்சக செயல்கள் என்று வெளிப்படையான குற்றச்சாட்டுகள் பல செய்து, அவற்றுக்கு விளக்கம் கேட்டால் அதை தர திராணி இல்லாத இவர், மென்றதையே மென்று கொண்டிருக்கிறார்.
பல பல தலைப்புகளாக பிரித்தால் இப்போது எனக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
அனைத்து தலைப்பையும் தொகுத்து எனக்கு அனுப்பியுள்ளீர்கள்.
எனக்கு உண்மையில் உதவி தான் செய்துள்ளீர்கள். தலைவலி குறைந்து தான் இருக்கிறது!
நன்றி!

ஒன்பது ஹதீஸ் ஆதாரங்களை தந்து, ஒவ்வொரு தலைப்பிலும் பல பல கேள்விகளை முன் வைத்தும், சிராஜ் சொல்லும் பதில் எந்த அளவிற்கு அபத்தமாகவும் கேலிக்குரியதாகவும் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியும், இவரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம்.
மற்ற மற்ற மெயில்களை பார்வையிடுங்கள்.

அதில் சிராஜ் போல, ஒரே பதிலை அனைத்து மெயில்களிலும் கட் பேஸ்ட் செய்யாமல், ஒவ்வொரு தலைப்பிலும் கேட்கப்பட்ட கேள்வி என்ன? அதற்கு இவர் பதில் தராமல் நழுவும் விஷயங்கள் என்னென்ன ? என்பதையெல்லாம் மெயில் வாரியாக பட்டியல் இட்டுள்ளோம்.


எந்த மெயிலுக்கும் பதில் தராத இவர்,
கேட்க்கும் ஒரே கேள்வி, ஹதீஸ்களை எந்த வெட்டலும் , சுய கருத்துகளை திணிக்காமலும், வார்த்தைகளை இட்டுக்கட்டமலும் பதித்திருக்கிறேன் என்று இறைவன் மீதாணையாக சொல்ல முடியுமா? என்பது தான்.

//பிறை சம்மந்தப்பட்ட அவருடைய ஆதார ஹதீஸ்களை ஒரு வார்த்தை கூட அவர் இட்டுகட்டாமல், கூட்டாமல்,குறைக்காமல், திரிக்காமல், வெட்டாமல், தன் சுய கருத்துகளை திணிக்காமல் முழுமையாக பதிந்தேன் என அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நாஷித் அவர்கள் கூற வேண்டும்- ஏர்வாடி சிராஜ்



இதை நாம் ஏற்கனவே சொல்லியாகி விட்டது.

எனது நினைவுக்குட்ப்பட்டு பிறை சம்மந்தப்பட்ட ஹதீஸ்களுக்கு சுய விளக்கங்களை நான் கொடுக்கவில்லை. கொடுக்கவும் மாட்டோம். எந்த வார்த்தையையும், வேண்டுமென்றே நான் வெட்டவில்லை, சேர்க்கவில்லை. எதை இருக்கிறது என்று நான் நம்புகிறேனோ, அதை தான் சொல்லியிருக்கிறேன்.
மேலே இவர் என்னவெல்லாம் கேட்டாரோ, எதையும் நான் வேண்டுமென்றே செய்யவில்லை!
இறைவன் சாட்சி.!!!!!

எனது அறிவையும் மீறி, ஏதேனும் கருத்துக்களிலோ, நான் பதிந்த மொழியாக்கத்திலோ தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டுங்கள்,. திருத்திக்கொள்கிறேன்.

இவை எல்லாம் சாதாரண விஷயம் தான். மனிதன் என்றால் தவறு செய்வான். தெரியாமல் செய்யும் தவறுகள் என்றால் சுட்டிக்காட்டினால் அல்லாஹ்வுக்காக திருத்திக்கொள்வான்.
இது எனக்கும் பொருத்தும்.. சிராஜுக்கும் பொருந்தும்..

தெரிந்தே நாம் எந்த வெட்டல், இடை சருகல்கள் செய்யவில்லை. அல்லாஹ் மீது ஆணையாக!
ஆனால், சிராஜ் செய்துள்ளார்.


தெரிந்தே நான் ஹதீஸில் இல்லாத கருத்தை கூறி, அதன் மூலம், பிறையை கண்ணால் பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும் என்ற கருத்து ஹதீஸில் இல்லாத போதும் இருக்கின்றதாக நான் சொல்லவில்லை.
இருப்பதை இருக்கிறது என்று நம்பி தான் சொல்கிறேன்.
வேண்டுமென்றே நான் எதை பொய்யாக இங்கு சொல்லிருந்தாலும் அல்லாஹ்வின் சாபம் எனக்கு உண்டாகட்டும்.! ..


ஆனால், தன் பக்கம் உண்மை இருப்பவர் இது போன்று கேட்க தேவையே இல்லை.
அதை தான் இங்கு குழும சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

இவர் தனது கொள்கையில் உண்மையாளர் என்றால், தன் கொள்கையை நிலைநாட்டும் விருப்பம் கொண்டவராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
  • நாஷித் கூறியுள்ள இந்த ஹதீஸில் இந்த வார்த்தை இல்லை. அவர் தவறாக சொல்லியுள்ளார்.
  • அவர் இவ்வாறு திரித்து, வெட்டி, மறைத்துள்ளதால், அவர் இந்த ஹதீசுக்கு சொல்லும் கருத்து இவ்வாறு வராது.
  • இதோ, இந்த வார்த்தைக்கு பதிலாக ஹதீஸில் இந்த வார்த்தை தான் உள்ளது.
  • இந்த வார்த்தை இருப்பதால், அதன் கருத்து இது தானே தவிர நாஷித் சொல்லும் கருத்து அல்ல!
  • அந்த ஹதீசுக்கு நாஷித் சொல்லும் கருத்துக்கும் நான் சொல்லும் விளக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள்.
  • இதனால், பிறையை கண்ணால் ஒவ்வொரு மாதமும் பார்த்து முடிவு செய்ய கூடாது என்று கருத்து வருவதை பாருங்கள்.
  • நாஷித் தன் சுய விளக்கத்தை கொடுத்து விளக்கி, தன் கொள்கையை தவறான முறையில் நிலைநாட்டுவதை பாருங்கள்..


என்று, சிராஜ் அவர்கள் தன் பக்கம் உள்ள ஹதீஸ் விளக்கம் என்ன என்பதை சொல்லி , நான் ஹதீசுக்கு தந்திருக்கும் தமிழக்கத்தையும் , விளக்கத்தையும் குற்றம் சொல்ல வேண்டுமே அல்லாமல், நீங்கள் ஹதீஸில் உள்ள வார்த்தைகளை வெட்டாமல் பதிதிருக்கிறீர்களா? என்று என்னிட கேட்பது நேரத்தை கடத்தும் செயல்.

இருந்தாலும், அதற்கு நாம் இறைவனை சாட்சியாக்கி ஏற்கனவே பதில் சொல்லி விட்டோம் என்பது வேறு விஷயம்..


இவர் நம்மிடம் சத்தியம் செய்ய சொல்லியதால், அதே போன்று , இவரை நோக்கி நாம் இப்போது கேள்வி கேட்கிறோம்..

  • பிறை விஷயத்தில், எந்த ஹதீஸுக்கும் நான் வேண்டுமென்றே ஹதீஸில் இல்லாத விளக்கத்தை கொடுக்கவில்லை.
  • எந்த ஹதீசையும், அது தரும் சட்டத்தையும் நான் வேண்டுமென்றே மறுக்கவில்லை.
  • நாஷிதின் எந்த கருத்துக்கு பதில் சொல்லும் போதும் , எந்த விஷயத்திலும் வேண்டுமென்றே நான் பொய் சொல்லவில்லை

என்பதை இங்கு இறைவன் மீதாணையாக சிராஜ் சொல்ல வேண்டும்.

""நான் கூறுவதில் பொய் இருந்தால் அல்லாஹ் என்னை சபிக்கட்டும், என்று நான் எவ்வாறு அறிவித்தேனோ , அதே போன்று, இவரும் மேற்படி மூன்று செய்திகளையும் முன்னிறுத்தி இவ்வாறு அல்லாஹ்வின் சாபத்தை வேண்டி, அதையும் இங்கு அறிவிக்க வேண்டும்.""


விவாதங்களை இனி இதற்கடுத்து தொடரலாம், இன்ஷா அல்லாஹ்.





சிராஜ் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அன்பான வேண்டுகோள்.
(எந்த உள்நோக்கமும் இல்லாமல், திறந்த மனதோடு நான் கேட்டுக்கொள்வது....)


வாதங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவசரப்பட்டு விடாதீர்கள். வாதங்களை விட, இறைவனின் பாதுகாப்பு மிக முக்கியம்..
தயவு செய்து அவசரப்பட்டு சத்தியமோ , சாபமோ சொல்லி விடாதீர்கள்.

நமது இந்த விவாதம் எந்த நிலையில் இப்போது உள்ளதோ, அதே நிலையில் வேணடுமானால் நிறுத்திக்கொள்ளலாம் சகோதரரே! நீங்கள் எதை நம்பி உள்ளீர்களோ, அதை நீங்களே மறு பரிசீலனை செய்து கொள்ளுங்கள்.
நானும் செய்கிறேன். நேர்வழிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
இதை தனிப்பட்ட முறையில் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

((இதை வைத்து, நான் பின்வாங்கி விட்டதாக திரித்து விடாதீர்கள், தயவு கூர்ந்து ))


வஸ்ஸலாம்..


அன்புடன்,
நாஷித் அஹமத்

தொடர்புக்கு : + 91 99527 82646
السلام عليكم ورحمة الله وبركاته

புதன், 12 ஜனவரி, 2011

பிறை : ஒன்பது ஆதாரங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும்


பிறையை கண்ணால் ஒவ்வொரு மாதமும் பார்த்து தான் மாதங்களை தீர்மானிக்க வேண்டும். முன்கூட்டியே கணிப்பது மார்க்க அடிப்படையில் தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் இது வரை ஒன்பது ஆதாரங்களை நான் தந்தேன்.
படிப்பவர்களது வசதிக்காக அனைத்தையும் ஒரே இழையில் இங்கு தொகுத்துள்ளோம்..



ஆதாரம் 1

மாதத்திற்கு 29 நாட்களாகும். எனவே பிறையை காணாமல் நோன்பு வைக்காதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்ப்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக்கி கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புஹாரி



(ஒவ்வொரு மாதமும் 29 முடிந்த பிறகு பிறை பார்க்க வேண்டும். பிறை தெரிந்தால் அந்த மாதம் முடிந்து அடுத்த மாதம் துவங்கி விட்டது. முடியவில்லை என்றால் முந்தைய மாதம் இன்னொரு நாள் தொடருகிறது!)





ஆதாரம் 2

குறைப்:
"உம்முள் பல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருக்கும் முஆவியா அவர்களிடம் என்னை அனுப்பினார். நான் சிரியாவிலிருக்கும் போது ரமளானின் முதல் பிறை எனக்கு தென்ப்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையை பார்த்தேன். பின்னர் அம்மாத இறுதியில் மதீனா வந்தேன்.
இப்னு அப்பாஸ் அவர்கள் பயணம் குறித்து விசாரித்தார்கள். பின்னர் பிறை குறித்தப்பேச்சை எடுத்தார்கள்.
இப்னு அப்பாஸ் :
"நீங்கள் எப்போது பிறையை பார்த்தீர்கள் ?.
குறைப்:
நாங்கள் வெள்ளிக்கிழமை பிறை பார்த்தோம்.
இப்னு அப்பாஸ் :
நீயே பிறையை பார்த்தாயா?
குறைப் : .
ஆம், மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியாவும் நோன்பு பிடித்தார்கள்.
இப்னு அப்பாஸ்:
நாங்கள் சனிக்கிழமை தான் பிறை பார்த்தோம் , ஆகவே, மறு பிறை பார்க்கும் வரை, அல்லது முப்பதாக பூர்த்தி செய்யும் வரை நோன்பு வைதுக்கொண்டிருப்போம்.
குறைப் :
ஏன்?, முஆவியா அவர்கள் பார்த்ததும், நோன்பு வைத்ததும் உங்களுக்கு போதாதா?
இப்னு அப்பாஸ்:
"போதாது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் கட்டளையிட்டுள்ளார்கள்.


அறிவிப்பவர் : குறைப்
நூல் : முஸ்லிம்



(ஒரு ஊரில் ஒரு நாளிலும், இன்னொரு ஊரில் இன்னொரு நாளிலும் பிறை பார்க்கப்பட்டிருக்கிறது!
எங்கள் ஊரில் நாங்கள் பார்த்ததை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? என்று கேட்ட பிறகும் கூட இப்னு அப்பாஸ் அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். நாங்கள் பிறை பார்த்து தான் தீர்மானிப்போம் என்கிறார்கள்.)




ஆதாரம் 3 :


"நாங்கள் உம்ராவுக்காக புறப்பட்டோம். பதன் நகலா எனும் இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது பிறை பார்க்க முயன்றோம் . (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாம் இரவில் பிறை என்றனர். சிலர் இது இரண்டாம் இரவின் பிறை என்றனர். இது பற்றி இப்னு அப்பாஸ் அவர்களிடம் கூறினோம். "நீங்கள் எந்த இரவில் பிறை பார்த்தீர்கள்", என்று கேட்டார்கள். இந்த இரவில் பார்த்தோம், என்று கூறினோம்.
அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள்
"பிறை பார்க்கும் வரை (முந்தய) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான், என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் . எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவுக்குரியது தான், என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபுல் பக்தரி ,
நூல் : முஸ்லிம்



(ஏதேனும் காரணத்தால் தலைப்பிறை நம் கண்களுக்கு தெரியாமல் போய், அதற்கடுத்த நாள் பிறை பெரிதாக, இரண்டாம் பிறையாகவோ மூன்றாம் பிறையாகவோ தென்பட்டால் கூட, அதை பெரிதாக எடுக்க தேவையில்லை. நம் கண்களுக்கு பிறை தெரிவது தான் நமக்கு முதல் பிறை! அது வரை, அல்லாஹ் முந்தைய மாதத்தை நீட்டியுள்ளான்!)





ஆதாரம் 4 :

நாங்கள் "தாது இர்க்" எனும் இடத்தில் ரமலான் (முதல்) பிறையை பார்த்தோம். இது பற்றி விளக்கம் கேட்க இப்னு அப்பாஸ் அவர்களிடம் ஆளை அனுப்பினோம்.
இப்னு அப்பாஸ் அவர்கள், "நீங்கள் பார்ப்பதற்காகவே பிறையை அல்லாஹ் வானத்தில் சிறிது நேரம் தென்பட செய்கிறான், உங்களுக்கு மேகமூட்டம் காரணமாக பிறை தெரியவில்லை என்றால் (முந்தைய) மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக சொன்னார்கள்.
அறிவிப்பவர் : செய்யத் பின் பைரூஸ்
முஸ்லிம் : 1985


(நாம் தலைப்பிறையை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் பிறையை சிறிது நேரம் வானில் தென்பட செய்கிறான்!)






ஆதாரம் 5


மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தெரியவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலை பொழுதை அடைந்தோம்.
பகலின் கடைசிப்பகுதியில், ஒரு வாகனக்கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபு உமைர்
நூற்கள் : நசயீ , திர்மிதி, அஹமத்.


(பிறையை கணித்து பின்பற்றுபவர்கள் என்றால் நேற்று பிறை பார்க்க தேவையில்லை. அதை நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொல்ல தேவையில்லை. அவர்கள் சொல்லியதை வைத்து நோன்பை விடுமாறு நபி அவர்கள் அவர்களுக்கு கட்டளை இட தேவையில்லை. நீங்கள் கணித்து கொள்ள வேண்டியது தானே? ஏன் பிறை பார்த்தீர்கள்?
அதை ஏன் என்னிடம் வந்து சொல்கிறீர்கள்? நானும் கணி
த்துகொள்வேனே, என்று அவர்கள் கேட்கவில்லை!)





ஆதாரம் 6

சந்தேகத்திற்குரிய நாளில் (ஷாபான் 30 இல்) யார் நோன்பு வைக்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.
அறிவிப்பவர் : அம்மார் (ரலி)
நூல் : ஹாக்கிம்.



(சந்தேகத்திற்குரிய நாள் என்பதெல்லாம் ஒவ்வொரு மாதமும் பிறையை பார்த்து மாதங்களை முடிவு செய்பவர்களுக்கு மட்டுமே ஏற்ப்படும். 2015 ஆம் ஆண்டு , ஒவ்வொரு மாதத்திற்கும் எத்தனை எத்தனை நாட்கள் என்பதை இன்றே அறிவித்து விட்டவர்களுக்கு அனைத்து நாட்களும் உறுதியான நாட்கள் தான். எதுவும் சந்தேகமான நாள் இல்லை.
அப்படியானால், இந்த ஹதீஸே அவர்களுக்கு பொருளற்றதாகி விடுகிறது!)



ஆதாரம் 7

அபு உமைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.:

மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தெரியவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலை பொழுதை அடைந்தோம்.
பகலின் கடைசிப்பகுதியில், ஒரு வாகனக்கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபு உமைர்
நூற்கள் : நசயீ , திர்மிதி, அஹமத்.



(பிறை தகவல் சொன்ன வாகனக்கூட்டதாரிடம் தான் நோன்பை விடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்களே தவிர, உடன் இருந்த சஹாபாக்களிடம் நோன்பை விட சொல்லவில்லை.
அவர்கள் பார்த்தது அவர்களுக்கு, நாம் பார்ப்பது நமக்கு என்று தான் செயல்பட்டிருக்கிறார்கள். நபி (ஸல்) கணித்து முடிவு செய்பவர்களாக இருந்தால் அனைவருக்கும் ஒரே நாள் தான் வந்திருக்க வேண்டும்.
குறைந்த பட்சம், தகவல் கிடைத்த பிறகாவது, ஒரே தினத்தில் பெருநாள் வைத்திருக்க வேண்டும். அனால், அவ்வாறு வரவில்லை!)







ஆதாரம் 8

அபு உமைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.:

மேகமூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்கு தெரியவில்லை. எனவே, நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலை பொழுதை அடைந்தோம்.
பகலின் கடைசிப்பகுதியில், ஒரு வாகனக்கூட்டம் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
நூற்கள் : நசயீ , திர்மிதி, அஹமத்.




(ஒவ்வொரு மாதமும் தலைப்பிறையை பார்த்து தான் மாதங்களை தீர்மானிக்க வேண்டும் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக இருக்கிறது.
நோன்பு வைத்த நிலையில், ஷவ்வால் பிறையை பார்க்க முயற்சித்த சஹாபாக்கள், பிறை தெரியாததால், நோன்பை தொடர்ந்தவர்களாக ரசூல் (ஸல்) அவர்களுடன் மாலை பொழுது வரை இருக்கிறார்கள், என்று ஹதீஸ் சொல்கிறது..)




ஆதாரம் - 9

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும் பெருநாள் திடலுக்கு செல்லுமாறும் மக்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ரிப்யீ பின் கிராஷ்
நூல் : அபு தாவூத்




(ரமளானின் கடைசி நாள் பற்றி மக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டிருக்கிறது என்று ஹதீஸ் சொல்கிறது. முன்கூட்டியே கணித்து முடிவு செய்திருபார்களேயானால், கருத்து வேறுபாடுகள் ஏற்படாது. அனைத்தும் உறுதியான நாட்கள் தான்.
பிறை தெரியாமல் நோன்பு வைத்துக்கொண்டிருந்த நபி (ஸல்) அவரகளிடம் ஒரு கிராமவாசி கூட்டம் வந்து பிறை பார்த்த தகவலை சொல்கிறது. தகவல் கிடைத்த பிறகு நோன்பை விடுகிறார்கள்.
முன்கூட்டியே கணிக்கலாம் என்றிருந்தால் பிறை தகவலுக்காக அவர்கள் காத்திருக்க தேவையில்லை. வந்தவர்களிடம் "நாங்கள் கணித்து செயல்படுவோமே, நீங்கள் பிறை தகவலை ஏன் வந்து சொல்ல வேண்டும்? என்று கேட்டிருப்பார்கள்.
மார்க்கத்தில் முன்கூட்டியே கணிக்கலாம் என்றல்லவா இருக்கிறது? நீங்கள் ஏன் பிறை பார்த்தீர்கள்? என்று அவர்கள் கேட்டிருக்க வேண்டும், அவ்வாறும் கேட்கவில்லை)






அன்புடன்,
நாஷித் அஹமத்

தொடர்புக்கு : + 91 99527 82646

السلام عليكم ورحمة الله وبركاته