வியாழன், 17 ஏப்ரல், 2014

மயிலாடுதுறையில் TNTJ தேர்தல் பிரச்சாரம் செய்வது சரியா?



இஸ்லாத்தை அழித்தொழிக்க எண்ணுபவர்கள் என்கிற காரணத்தை மையபடுத்தி பாஜகவை எதிர்க்க வேண்டும் என்கிற கொள்கையை எல்லா முஸ்லிம்களுமே கொண்டிருக்கிறோம்.
இஸ்லாத்தை அழித்தொழிக்கும் எந்த சக்தியானாலும் அது களையெடுக்கப்பட வேண்டும், அது பாஜகவாக இருந்தாலும் சரி, வேறு எவராக இருந்தாலும் சரி. அத்தகைய நிலைபாடு தான் நடுநிலையானது.

ஆனால், இந்த கொள்கையில் நாம் உறுதியானவர்களாக இருப்பவர்களா? என்றால், இல்லை என்பதே நமது நிலைபாடுகள் தெளிவுப்படுத்தும் உண்மை !
இந்த கொள்கையில் உறுதியானவர்களாக நாம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்த கொள்கையையே இழிவுப்படுத்தும் வகையில் தான் நாம் நிலைபாட்டினை வகுத்துக் கொண்டிருக்கிறோம் என்பது எவ்வளவு வேதனை !

இஸ்லாத்தை அழித்தொழிக்கும் எந்த சக்தியானாலும் அது களையெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டு, ஹிந்து பெயரை கொண்ட ஒரு கட்சியென்றால் அதை களையெடுப்போம், அதுவே முஸ்லிம் பெயர் கொண்ட கட்சி என்றால் அதற்கு முட்டுக் கொடுப்போம் என்றால் இது எப்படி?
ராமசாமி என்றால் நாம் வெகுண்டெழுவோம், அப்துல் காதர் என்றால் அவருக்கு சாமரம் வீசுவோம் என்றால் இதென்ன நியாயம்??

பாஜகவை நாம் எதிர்ப்பதற்கு என்ன நியாயங்களும் காரணங்களும் இருக்கின்றனவோ அதை விடவும் அதிகமான அல்லது குறைந்தது அதே அளவிலான காரணங்கள் முஸ்லிம் பெயர் தாங்கி கட்சிகளான முஸ்லிம் லீக், தமுமுக, எஸ்டிபிஐ போன்றோரை எதிர்ப்பதற்கும் இருக்கின்றது.

பாஜக ஒரு இன அழிப்பை நிகழ்த்தினால் அதனால் உயிர் பலி ஏற்படும், ஆம் மிகப்பெரிய இழப்பு தான், தாங்க இயலாத கொடுமை தான்; மறுப்பதற்கில்லை. ஆனால், பாஜகவினால் உயிர்களை தான் கொல்ல இயலுமே தவிர, இந்த சத்தியக் கொள்கையை கொல்ல முடியுமா?
இஸ்லாம் பல்கிப் பெருகுவதை இது போன்ற இன அழிப்பின் மூலம் அவனால் செய்து விட முடியுமா? ஒரு போதும் முடியாது !
அது ஒரு ஷைத்தானிய கட்சி என பிறந்த குழந்தை முதல் கிழவன் வரை அனைவருமே பாஜக குறித்து அறிந்து வைத்திருக்கிறோம். ஆகவே, அத்தகைய எந்த மாற்றமும் அவன் மூலம் இந்த சமூகத்திற்கு நிகழாது.

அதே சமயம், ஜவாஹிருல்லாஹ் என்றும் ஹைதர் அலி என்றும் பாகவி என்றும் பெயர் சொல்லிக் கொண்டு கட்சி நடத்துபவர்கள் இஸ்லாமிய சமுதாயத்தவர் முன்னிலையில் தங்களை முஸ்லிம் சமூகத்தின் பாதுகாவலர்களாய் அல்லவா காட்சி தருகின்றனர்?

இறந்து போனவர்களை கடவுளாக வணங்கும் சமுதாயத்தின் மத்தியில் அரசியல் செய்பவர்கள் என்றால், தங்களை மார்க்க வரம்புகளை விட்டும் தடம் புரளாதவர்களாய் காட்சி தந்தால் மட்டும் தான், ஏற்கனவே வழி தவறி நிற்கும் முஸ்லிம் சமூகமானது மேலும் வழிதவறாமல் காக்கப்படும்.

ஓஹ், நமது தலைவர்களாக வரக்கூடியவர்கள் இந்த அளவிற்கு மார்க்க வரம்பை பேணக்கூடியவர்களா? என்று ஒரு பாமரன் எண்ணும் போது, தமது செயல்பாடுகளையும் அவன் மறு பரிசீலனை செய்வான்.
சமுதாய தலைவர்களாக வலம் வர விரும்புகிறவர்கள் இத்தகைய நல்விளைவை தான் சமுதாயத்தில் விதைக்க வேண்டும்.
அல்லாமல், ஏற்கனவே கல்லையும் கப்ரையும் வணங்கக்கூடியவர் முன்னிலையில் ஆரத்தி எடுத்தும் கோவிலுக்கு பிரசாதம் அனுப்பியும் நாம் வழிகாட்டக்கூடாது.

அத்தகைய தவறான வழியில் இருக்கும் ஒரு சமூகம், அதையே மார்க்கமாக நம்பி பின்பற்றுவதற்கு அதிக நேரமாகாது !

பாஜக உயிரை கொல்லும், தமுமுக, எஸ்டிபிஐ போன்றோர் உள்ளங்களை கொல்பவர்கள் !

பாஜகவை எதிர்ப்பது 100% நியாயமெனில் இந்த பெயர்தாங்கிகளை எதிர்ப்பதும் 100% நியாயமானதே !

நானும் முஸ்லிம், எனக்கு ஓட்டு போடுங்கள் என்று இத்தகைய பெயர்தாங்கிகள் போட்டியிடும் தொகுதியில் முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்கும் பொருட்டு தவ்ஹீத் ஜமாஅத் விழிப்புணர்வு கூட்டம் நடத்துவதை விமர்சிக்கும் தகுதி எந்த
நாவுக்கும் கிடையாது,

காரணம், அந்த நாவுகள் எவையும் உள்ளங்களை கொல்லக்கூடிய காரியங்களை கண்டிக்க துப்பு கெட்டவை !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக