செவ்வாய், 1 ஏப்ரல், 2014

இறுதி நபி : குர்ஆனிய‌ ஆதாரம்


திருக்குர் ஆன் 7 :158 - 
மனித குலம் முழுவதற்கும் நான் தான் தூதர் என்று முஹம்மது நபியை அல்லாஹ் சொல்ல சொல்கிறான்.

திருக்குர் ஆன் 25 :1 - 
அகிலத்தில் உள்ள அனைவருக்கும் எச்சரிக்கை செய்வதற்காகவே இந்த குர் ஆன் தரப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வேதமும் அந்தந்த சமுதாய மக்களுக்கு மட்டும் வழி காட்ட இறக்கியிருந்த அல்லாஹ், குர் ஆனை மட்டும், அகிலத்தார் அனைவருக்காகவும் தந்துள்ளதாக சொல்கிறான்.
ஆகவே, மிர்சா குலாம் என்பவனும் பொய்யன், அவன் வேதம் என்று கொண்டு வந்ததும் பொய் !!

திருக்குர் ஆன் 34 :28 -
மனித குலம் அனைவருக்கும் எச்சரிக்கை செய்வதற்காக முஹம்மத் நபியை அல்லாஹ் அனுப்பியதாக சொல்கிறான்.
அவர்களுக்கு முன் சென்ற எந்த நபியையும் மனித குலம் முழுமைக்காகவும் அல்லாஹ் அனுப்பவில்லை!
முஹம்மது நபிக்கு முன் சென்ற எல்லா நபிமார்களையும் ஒவ்வொரு சமுதாய மக்களுக்காக மட்டுமே அனுப்பினான். முஹம்மது நபியை குறித்து சொல்லும் போது மட்டும், அகிலத்தார் அனைவருக்காகவும் அனுப்பினேன் , என்கிறான்.

மனித குலம் குலம் முழ்மைக்கும் நபியாக ஒருவரை அனுப்பி விட்ட பிறகு, இன்னொரு நபியை அல்லாஹ்வே அனுப்பினால், தனது வார்த்தைக்கு அல்லாஹ்வே முரண்பட்டு விட்டான் என்கிற பயங்கரமான கருத்து வந்து விடும்.

அத்தகைய பயங்கரத்தை சர்வ சாதாரணமாக செய்கிறார்கள் இந்த மிர்சா குலாம் அபிமானிகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக