செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மறுமை பாக்கியமே ஒரே இலக்கு !


தங்கள் தலைவனின் கட் அவுட் ஏன் வைக்கப்படவில்லை என்று கேட்டு சண்டையிடும் கட்சியினர் மத்தியில் ..

தன் இயக்க தலைவரது புகைப்படமொன்று அரசியல் பேனரில் இடப்பட்டதை கண்டித்து அந்த பேனரையே அப்புறப்படுத்தும் கொள்கையுறுதி கொண்ட அமைப்பு ஒன்றில் உறுப்பினராக இருப்பதற்கு நானும் சரி, அதிலுள்ள ஒவ்வொரு நபரும் சரி, பெருமிதம் கொள்கிறோம்.

ஒரு பக்கம் முஸ்லிம் கட்சி என்று சொல்லிக் கொண்டே மலர் மாலைகள் , பொன்னாடைகள், கட் அவுட் விளம்பரங்கள், ஆடல், பாடல், கூத்து கும்மாளங்கள், அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மாபாதக செயல்கள்..

மறு பக்கம், இயன்ற வரை தூய்மையின் சிகரமாய் வாழ்ந்து வரும் இயக்கம்..

இதை விட தெளிவான வேறுபாடு வேறென்ன வேண்டும் ?

இப்படியொரு இயக்கமா? இப்படியொரு கொள்கையுறுதியா?
பொன்னாடைகளும், மலர் மாலைகளும் வேண்டாம் என்போர் இதை கொண்டு என்ன நாடுகின்றனர் ?
என்ன நாடி விட முடியும், மறுமை பாக்கியத்தை தவிர..?
சுப்ஹானல்லாஹ் !!

இறுதி வரை இதே கொள்கையுறுதியுடன் செயல்பட இந்த இயக்கத்திற்கு அல்லாஹ் அருள் புரிவானாக ! ..
மற்றவர்களுக்கும் இதையே ஒரு பாடமாகவும் ஆக்குவானாக!!

நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான். (29:69)

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (3:104)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக