செவ்வாய், 1 ஏப்ரல், 2014

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்


கை கூப்பி வணக்கம் தெரிவிப்பது இணை வைக்கும் மாபாதக செயலல்லவா? என்று கேட்டால், ஒன்று ஆமாம் அது தவறு தான் என்று ஒப்புக் கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும்,
அல்லது, குறைந்த பட்சம் மெளனமானவாவது இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அதையும் நியாயப்படுத்த கிளம்பியிருக்கிறது ஒரு கூட்டம். 
அதிலென்ன தவறு? ஒளு செய்து, தக்பீர் சொல்லி, ருகூஹ், சஜதா செய்வது தான் வணக்கம், இவர் அந்த நிய்யத்திலா கை கூப்புகிறார்?

என்று, வணக்கம் தெரிவிப்பதை கூட நியாயப்படுத்த,

மார்க்கம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, எங்கள் கட்சிக்கு இழுக்கு வந்து விடக்கூடாது என களமிறங்கியிருக்கும் இது போன்ற படுபாவிகளுக்கு ஒன்றை சொல்கிறோம்.

முஸ்லிம் ஒற்றுமை என்றும், இஸ்லாமிய சமுகத்திற்காக குரல் கொடுக்கிறோம் எனவும் இந்த உலகில் நீங்கள் எதை சொல்லியும் ஏமாற்றலாம்.
விபரமறியா நால்வர், அதன் சூட்சமத்தை அறியாமல் உங்கள் பின்னால் வரவும் செய்யலாம்.
ஆனால், உங்களை அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கிறான்.
சூட்சமக்காரனுக்கெல்லாம் மிகப்பெரிய சூட்சமக்காரன் அவன்.

வணக்கம் சொல்லி விட்டு, நான் என்ன ஒளு செய்து தொழவா செய்தேன்? என்று நா கூசாமல் பேசும் உங்கள் நாவுகளை இரு துண்டுகளாக ஆக்க அவனுக்கு ஒரு கண நேரம் போதும் !

முஸ்லிம்கள் மத்தியில் ஒரு முகத்தையும் காஃபிர்கள் மத்தியில் வேறொரு முகத்தையும் காட்டித் திரியும் நயவஞ்சகர்களாகிய உங்களுக்கு, நீங்கள் இதே நிலையில் தொடர்வது வரை, இம்மையில் படுகேவலமான இழிவை தருவதும், மறுமையில் அதிபயங்கரமான நரகில் தள்ளுவதும் அவனுக்கு மிக லேசானது என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்களுக்கு எதிராக கையேந்தும் நிலைக்கு இந்த முஸ்லிம் உம்மத்தை தள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக