செவ்வாய், 1 ஏப்ரல், 2014

சமூகவலைதளங்கள் உருவாக்கும் மாற்றம்


அரசியல் பேசுவதோடும், விவாதிப்பதோடும் நிறுத்தாமல், வாக்களிக்க சலிப்படைந்து விடுமுறை தினத்தை பொழுதுபோக்காய் கழிக்கலாம் என்று எண்ணுகிறவர்களை வாக்குசாவடிக்கு செல்ல வைப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

தேசிய அளவில், ஊழலுக்கும் மதவாதத்திற்கும் எதிராய் மிகப்பெரிய மாற்றம் நிகழ வேண்டுமானால், அதிகமான விழுக்காடு வாக்குகள் பதிவாக வேண்டும் என்பது மிக முக்கியம். 

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி நாட்டின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கும் சக்தியாய் ஊடகமும் சமூகவலைதளங்களும் உருவாகியுள்ளன‌ !

Internet & Mobile Association of India (IAMAI) நிகழ்த்தியிருக்கும் ஆய்வின் படி நாட்டில் மொத்தமாய் உள்ள 80 கோடி வாக்காளர்களில் 17 கோடிக்கும் அதிகமானவர்கள் இணையதளம் பயன்படுத்துபவர்கள் எனவும் அதில் கிட்டத்தட்ட 29% பேர் (அதாவது 4.8 கோடி) கல்லூரிக்கு செல்லும் இளைஞர்கள் எனவும் தெரிகிறது.

இவர்களையடுத்து 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 26%, வேலைக்கு செல்லும் பெண்கள் 10% இணையத்தை, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர் என்றும் கூறும் அந்த ஆய்வின் படி பார்த்தால், ஆட்சியை தீர்மானிப்பதில் பெரும் பங்கினை இளைஞர்கள் வகிக்கின்றனர் என்பதை அறியலாம்.

இன்ஷா அல்லாஹ், நாம் நினைக்கும் மாற்றத்தை சமூக வலைதளங்கள் மூலமே நம்மால் உருவாக்க முடியும் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக