செவ்வாய், 1 ஏப்ரல், 2014

கலைஞரை ஆதரிப்பதில் நியாயமில்லை


மோடி எனது நண்பர் என்று அரசியல் காரணங்களுக்காக சொன்ன, 
சுய இலாபத்திற்காக கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்த, 
வைத்ததோடு ஐந்து வருடங்கள் அதே கூட்டணியில் நீடித்த,
குஜராத் கலவரத்திற்கு எதிரான கண்டனத்தீர்மானத்தில் கூட நரேந்திர மோடிக்கு ஆதரவளித்த‌..

கருணாநிதியை ஆதரிப்பது தவறில்லையென்றால்

இதே போன்ற எண்ணம் கொண்டிருந்த போதிலும், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை காரணமாக வைத்து அதிமுகவை ஆதரிப்பது மட்டும் ஏன் தவறு?

அதிமுகவை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிப்பதாக அறிவித்த போது, ஏதோ கொலைக் குற்றம் செய்ததை போன்று ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் குதித்தவர்கள், திமுக ஆதரவு நிலையை எடுக்கும் கட்சிகள் விஷயத்தில் இதே போன்று குதித்தார்களா?

ஜெயலலிதாவும் மோடிக்கு நெருக்கமானவர் தான் என்பது மறுப்பதற்கில்லை என்ற போதிலும், அந்த நெருக்கத்திற்கும் இந்த நெருக்கத்திற்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன.

என்ன தான் இருவரும் ஆதரிப்பார்கள் என்று நாம் சொல்லிக் கொண்டாலும் கலைஞர் தமது சுய கெளரவத்தையும் விட்டுக் கொடுத்துக் கூட ஆதரிப்பார்.
ஜெயலலிதாவுக்கு தமது சுய கெளரவம் , மோடிக்கு ஆதரவளிப்பதை விட பெரிது என்பதற்கு கடந்த காலங்களில் பாஜகவோடு இவர்கள் கூட்டணி வைத்திருந்த வரலாறுகள் நமக்கு தெளிவுப்படுத்துகின்றன.

தம்மை உதாசீனப்படுத்தினால் 13 மாதங்களில் பாஜக கூட்டணியை கூட கவிழ்க்க தயங்காதவர் ஜெயலலிதா.
தம்மை தரை மட்டத்திற்கு அவமானப்படுத்தினாலும், கட்சியின் சுய இலாபம் என்று வரும் போது கூட்டணியை விட்டு விலகாமல் பாஜகவை காப்பவர் கலைஞர்.
அதற்காக, குஜராத் கலவர விஷயத்தில் கூட மோடியை விட்டுக் கொடுக்காமல் தர்மம் (?) காத்தவர் அவர் !
இந்த நிலை தான் கடந்த 2004 முதல் இவர் தொடர்ந்து வந்த காங்கிரஸுடனான கூட்டணி விஷயத்திலும் பளிச்சிட்டது !

அதிமுகவை ஆதரித்ததற்காக‌ கொய்யோ முய்யோ என்று கத்தியவர்களை பார்த்து நாம் கேட்க விரும்புவது ஒன்றே ஒன்று தான்.

திமுகவுடன் கூட்டணி என்று அறிவிப்பு செய்யும் பெயர்தாங்கிகளை கண்டிக்காமல் உங்கள் நடுநிலை வேஷம் நாறிப் போயிருப்பது ஏன்?

கலைஞரின் சுபாவம் தான் உங்களுக்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக