செவ்வாய், 1 ஏப்ரல், 2014

மகனை பிரிந்து வாடிய நபி


புனித குர்ஆனில் அல்லாஹ் கூறிக் காட்டும் நபிகள் சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகள். சூரா யூசுப் - 12: 70, 76, 83, 84, 85, 86 & 87.

''மகன் யூசுபையும் (அலை) இளைய மகன் புன்யாமீனையும் (பிரிந்து-அல்லது) இழந்து வாடிய தந்தை யா'கூப் (அலை) கூறுகிறார், 

"நான் அழகிய பொறுமையை கடைபிடிக்கிறேன். அவர்களை அல்லாஹ் என்னிடம் சேர்க்கக்கூடும் .............."

''யூசுபுக்கு நிகழ்ந்ததென்னவென்று அறியாதவராய் கவலையால் கண்ணீர் சொரிந்து கண்கள் வெளுத்து போகுமளவுக்கு துக்கப் பட்டார் (தந்தை யா'கூப் ). பின் துக்கத்தை அடக்கிக் கொண்டார்.''

''எனது துக்கத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன்..........''

''எனது மக்களே! நீங்கள் சென்று (உங்கள் சகோதரர்களாகிய) எனது மக்களை (யூசுபையும் புன்யாமீனையும்) தேடுங்கள்.

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள். இறை நிராகரிக்கும் கூட்டத்தாரைத் தவிர யாரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்கமாட்டார்கள் என்று யாகூப் கூறினார்.''

யாகூப் நபி அவர்கள் தமது உயிருக்கிணையான மக்களை (அவர்கள் தொலைந்து விட்டார்களோ என்று கலக்கமுற்றவராய் )பிரிந்து வாடிய நிகழ்வுகளை அருளாளன் அல்லாஹ் நம் கண் முன்னே, நம் சிந்தையின் உணவாய் வழங்கி நம்மை ஆறுதல் படுத்துகிறான்,

நம்மை நேர்வழிப் படுத்துகிறான். அவனது அருட்கொடையான இந்த புனித நூலில் இல்லாத ஆறுதல் எது? இல்லாத நேர்வழி எது? சுபுஹானல்லாஹ் !!

"ஹஸ்புனல்லாஹு வ நி'மல் வக்கீல்'' (3:173).

எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன் !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக