செவ்வாய், 1 ஏப்ரல், 2014

இறுதி நபி : ஹதீஸ் ஆதாரங்கள்


இறுதி நபி : ஹதீஸ் ஆதாரம் 1

ஹாத்தம் நபி குறித்து வரக்கூடிய புஹாரி 3535 ஹதீஸை திரித்தும் மறித்தும் கூறும் அஹமதியா வழிகேடர்கள், இந்த ஹதீஸில் வரக்கூடிய ஹாத்தமு என்பதற்கு "சிறப்புக்குரிய" என்று மொழிப்பெயர்க்கிறார்கள்.

ஹதீஸை முழுமையாக படிக்காத, அரபி தெரியாத பாமரர்களை ஏமாற்றும் நோக்கில் இது போன்று மார்க்கத்தில் விளையாடினாலும் ஹதீஸ் உண்மையில் சொல்வது என்ன என்பது விபரமுள்ளவர்கள் அறிகிறார்கள்.

ஹாத்தமு நபி என்றால் இவர்கள் சொல்வது போன்று சிறப்பு வாய்ந்த அர்த்தம் கொடுக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஹாத்தமு நபி என்பதற்கு இறுதி நபி என்கிற அர்த்தமும் இருக்கத்தான் செய்கிறது.

எந்த அர்த்தம், இந்த context உடன் ஒத்துப்போகுமோ, அந்த அர்த்தத்தை தான் கொடுக்க வேண்டும்!

context என்ன என்பதை அறிந்தால், இவர்கள் ஹதீஸை எந்த அளவிற்கு திரிக்கிறார்கள், தங்கள் வாதத்தை நிறுவுவதற்காக எப்படி எல்லாம் பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவாகும்.

அந்த ஹதீஸில் என்ன வருகிறது தெரியுமா?

இந்த உலகில் தோன்றிய எல்லா நபிமார்கள் குறித்தும், என்னை குறித்தும் ஒரு உதாரணத்துடன் விளக்கவா? என்று கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஒரு உதாரணம் சொல்கிறார்கள் - அது தான் இந்த புஹாரி 3535 ஹதீஸ்.

என்ன உதாரணம்?

அழகான ஒரு கட்டிடம் இருக்கிறது.. பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது. ஆனால், ஒரே ஒரு இடத்தில் ஒரு செங்கல் வைப்பதற்கு மட்டும் சிறு இடம் ஓட்டையாக உள்ளது. அந்த வகையில், அந்த கட்டிடம் முழுமையடந்ததாக எவரும் கருத மாட்டார்கள்.

இப்போது, அந்த அழகான கட்டிடம் தான் எனக்கு முன் சென்ற எல்லா நபிமார்களும்.
ஒரு செங்கல் வைக்க இடமிருக்கிறது என்று சொன்னேனே, அந்த ஒரு செங்கல் தான் நான்!!!!!!!

சுபுஹானல்லாஹ் ! எவ்வளவு தெளிவான வார்த்தைகள்!!!! இதிலேயே நமக்கு புரிகிறது, முஹம்மது நபி தான் இறுதி நபி என்பது.

ஆனால், இதை சொல்லி விட்டு, அதன் தொடர்ச்சியாக அவர்களே சொல்கிறார்கள் (அதே புஹாரி 3535 ஹதீஸ்), நான் தான் ஹாத்தம் நபி!!!!!!

இந்த இடத்தில் சிறப்பான நபி என்று அர்த்தம் வருமா இறுதி நபி என்று வருமா? என்பதை எந்த சிறு பிள்ளையிடம் கேட்டாலும் சொல்லும் !


இறுதி நபி : ஹதீஸ் ஆதாரம் 2
-----------------------------------------------------------------------------------

முஸ்லிம் 812 இல் பதிவான ஹதீஸ்..

பொருள் நிறைந்த பொன் மொழிகள் வழங்கப்பட்டிருக்கிறேன்.

என்னை கண்டால் எதிரிகள் பயப்படுவார்கள்.
யுத்தத்தில் கிடைத்த பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டன.
நிலமெல்லாம் தொழுகை இடமாகவும், தூய்மை படுத்தும் பொருளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. 
மனித குலம் அனைவருக்கும் நான் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
நபிமார்களின் வருகை என்னால் நிறைவு படுத்தப்படுகிறது.

அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (812)

ஆறு விஷயங்களின் காரணமாக நான் மற்ற நபிமார்களில் இருந்து தனித்து விளங்குகிறேன் என்று சொன்ன நபிகள் பெருமானார்,
பல காரணங்களை சொல்லி விட்டு, இறுதியில்,தான்ன் முத்திரையிடப்பட்ட நபி என்கிறார்கள்.

இந்த முத்திரைக்கு கூட, context புரியாததால், சிலர் ""சிறப்பு"" என்று அர்த்தம் கொடுப்பார்கள்.
அது, எந்த அளவிற்கு தவறான அர்த்தம் என்பதை இந்த ஹதீஸை படிக்கும் எவருக்கும் புரிய முடியும்.

இந்த ஹதீஸின் துவக்கமே, இன்னின்ன விஷயங்களினால் அல்லாஹ் என்னை சிறப்பித்திருக்கிறான் என்பது தான்.

அல்லாஹ் தன்னை சிறப்பித்திருக்கிறான் அதற்கு இவையெல்லாம் காரணங்கள் என்று ஆறு காரணங்களை சொல்கிற போது,
அல்லாஹ் என்னை சிறப்பாக்கி உள்ளான், அதுவே எனது சிறப்பு என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
அது பொருளற்றதாகி விடுகிறது.

அல்லாஹ் என்ன இறுதி நபியாக்கி விட்டான், அதுவே எனது சிறப்பு என்று கூறுவது மிகவும் பொருத்தமாகி விடுகின்றது.

தவிர, ஐந்தாம் சிறப்புடன் இதை ஒப்பிட்டு பார்த்தாலும் , இறுதி நபித்துவத்தை தான் சிறப்பு என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் என்பது மிகவும் தெளிவாக விளங்கும் !





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக