செவ்வாய், 5 நவம்பர், 2013

இவர்கள் மண்ணை தின்றார்களா? புல்லை தின்றார்களா??


.நன்றி சகோ. அப்பாஸ் அலி அவர்கள்

بسم الله الرحمن الرحيم

?

சூனியத்தின் பெயரால் பல வகையான மூட நம்பிக்கைகள் மக்களிடம் பரவியுள்ளது. சூனியத்தின் மூலம் யானையை பூனையாக காட்ட முடியும். பூனையை யானையாக காட்ட முடியும். ஒருவருடைய சிந்தனையில் பாதிப்பு ஏற்படுத்த முடியும். ஏன் ஒருவரை அதன் மூலம் கொல்வது கூட சாத்தியம். மொத்தத்தில் சூனியத்தால் எந்த பாதிப்பை வேண்டுமானாலும் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது.

இந்த நம்பிக்கை தவறானது. சூனியத்தை உண்மை என்று நம்பக்கூடாது என்று நாம் கூறிவருகின்றோம். இதற்கு பல குர்ஆன் வசனங்கள் ஆதாரமாக உள்ளது. பின்வரும் ஹதீஸையும் நாம் ஆதாரமாக சுட்க்காட்டியிருந்தோம்.

مسند أحمد - (ج 45 / ص 477)
26212 - حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ السُّوَيْدِيُّ قَالَ حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ سُلَيْمَانُ بْنُ عُتْبَةَ الدِّمَشْقِيُّ قَالَ سَمِعْتُ يُونُسَ بْنَ مَيْسَرَةَ عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللَّهِ عَنْ أَبِي الدَّرْدَاءِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
விதியை மறுப்பவன் நிரந்தரமாக மது அருந்துபவன் சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழையமாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)

சூனியத்திற்கு தாக்கம் உள்ளது. அதன் மூலம் பாதிப்பு ஏற்படும். அது உண்மை தான் என்று இலங்கையச் சார்ந்த அன்சார் என்பவரும் அவரை தக்லீத் செய்யும் சிலரும் மற்றும் பலரும் கூறிவருகின்றனர்.

மேலே நாம் குறிப்பிட்ட செய்தியில் சூனியத்தை உண்மை என்று நம்புபவன் என்ற சொல் ஹதீஸின் சாப்டுவேரில் தவறுதலாக இடம்பெற்றது. மூல நூற்களில் எதிலும் இந்த வார்த்தை இடம்பெறவில்லை. எனவே சாப்டுவேரில் ஏற்பட்ட பிழையை நாம் ஆதாரமாக்கி முழுமையாக ஆய்வு செய்யாமல் நுனிப்புல் மேய்ந்துவிட்டு இந்த ஹதீஸை நாம் ஆதாரம் காட்டியதாக இந்த சூனியக்கும்பல் தற்போது கொக்கரித்துக்கொண்டிருக்கின்றது.

இவர்கள் செய்யும் குழப்பம் போதாதென்று தற்போது புதிதாக ஒரு பெண்ணையும் களத்தில் இறக்கி தங்கள் மத்ஹபை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சரியான ஆய்வும் தேடலும் இல்லாமல் வாய்க்கு வந்ததை உளறிவிட்டு மற்றவர்களைப் பார்த்து நுனிப்புல் மேய்ந்நதாக இவர்கள் குற்றம் சாட்டினால் இந்த அறியாமையை என்னவென்பது?

முஃமினும் பிசிஹ்ர் ((مؤمن بسحر என்ற இந்த வார்த்தை இடம்பெற்ற அஹ்மதின் போட்டோ காப்பியை இணைத்துள்ளேன். பார்க்கவும். இந்த வார்த்தை அஹ்மது கிதாபில் இடம்பெற்றுள்ளது. இந்த பிரதியை சரிபார்த்தவர்களின் பெயர் பட்டியலும் இந்த போட்டோவில் கூறப்பட்டுள்ளது.

அல் முஸ்னதுல் ஜாமிஃ மற்றும் அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் ஆகிய நூற்களிலும் இந்த அறிவிப்பில் இந்த சொல் இடம்பெற்றுள்ளது.

المسند الجامع - (ج 33 / ص 449)
11036- عَنْ أَبِي إِدْرِيسَ عَائِذِ اللهِ ، عَنْ أَبِي الدَّرْدَاءِ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ، قَالَ:
لاَ يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ ، وَلاَ مُؤْمِنٌ بِسِحْرٍ ، وِلاَ مُدْمِنُ خَمْرٍ ، وَلاَ مُكَذِّبٌ بِقَدَرٍ.

الجامع الصحيح للسنن والمسانيد - (ج 2 / ص 619)
(حم) , وَعَنْ أَبِي الدَّرْدَاءِ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -:
" لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ، وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ، وَلَا مُدْمِنُ خَمْرٍ، وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ " (ரி1)

இதே அறிவிப்பாளர் தொடரின் வழியாக இதே செய்தி இப்னு அசாகிர் அவர்களுக்குரிய தாரீகு திமஷ்கு என்ற நூலில் பதிவாகியுள்ளது. அங்கும் முஃமினும் பிசிஹிர் (சூனியத்தை நம்புபவன் சுவனம் செல்லமாட்டான்) என்ற சொல் இடம்பெற்றுள்ளது. தாரீகு திமஷ்க் அறிவிப்பைப் பாருங்கள்.

تاريخ دمشق (56/ 135)
قال وحدثني ابي ( 8 ) نا أبو جعفر السويدي نا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي ( صلى الله عليه وسلم ) قال لا يدخلن الجنة عاق ولا مؤمن بسحر ( 9 ) ولا مدمن خمر ولا مكذب بقدر

தாரீகு திமஷ்கிலும் இந்த சொல் தவறுதலாக இடம்பெற்றுள்ளது என்று இவர்கள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாய்க்கு வந்ததை கூறுபவர்கள் எதை வேண்டுமானாலும் கூறுவார்கள்.

இவர்கள் தாங்கள் கொண்ட கொள்கையை நிலைநாட்ட எப்படிப்பட்ட காரியத்தையும் செய்வார்கள் என்பதை அறிய முடிகின்றது. மண்ணை திண்டுவிட்டு புல்லை திண்டது போல் ஏன் நடிக்க வேண்டும்?. இந்த லட்சணத்தில் மற்றவர்களைப் பார்த்து நுனிப்புல் மேய்ந்தார்கள் என்று தம்பட்டம் எதற்கு? ஆணவம் எதற்கு?
 (2 photos)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக