திங்கள், 13 ஆகஸ்ட், 2012

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதா?



அஸ்ஸலாமு அலைக்கும்

அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!

கடந்த காலங்களில் நாங்கள் எந்த அரசியல்வாதியையும் சந்திக்க மாட்டோம்! நீங்கள் இடஒதுக்கீட்டை அறிவித்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்து(?) வேலை செய்து உங்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம்! வெறும் சந்திப்பு தேவையில்லை "கையில காசு வாயில தோசை'' ஆர்டர் போடுங்க - ஆதரவு தருகிறோம் என்றெல்லாம் கூறியவர், தற்போது எந்த வாக்குறுதியும் தராமல் பிரதமரை ஓடோடிச் சென்று மாநாடு முடிந்த மறுநாளே சந்தித்து இருப்பது அவருக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றத்தையே எடுத்துக் காட்டுகிறது.
மாநாட்டின் தோல்விக்கு மன்மோகன் சிங்கிடம் மருந்து தேடுகிறார் பாவம்! மேலும் பிரதமரைச் சந்தித்தது, பெரிய சாதனை போல் அவர்களால் பரப்பப்படுகிறது.  பிரதமரை இதற்கு முன் தமிழகத்தில் தமுமுக தலைவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்களும், தேசிய லீக் தலைவரும் எந்த மாநாடும் நடத்தாமலேயே ஜே.எம். ஹாரூண் எம்.பி. மூலம் மிக சுலபமாக சந்தித்திருக்கின்றனர். ஆனால் பிரதமரே தங்களை அழைத்தார் என்று "பில்டப்' யாரும் கொடுக்கவில்லை. இது இவர்களது தரத்தையும், நிறத்தையும் எடுத்துக் காட்டுகிறது!

-செங்கிஸ்கான்.








தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதா


யாரையும் மேடையில் ஏற்றுவதில்லை என்று கூறி வந்த தவ்ஹீத் ஜமாஅத்இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டது என்ற வாதம் சிலரால் எடுத்துவைக்கப்படுகிறது. 
இதற்கு உரிய பதிலைச் சொல்வதற்கு முன்னால் இப்படி கேட்பவர்கள் பற்றியும்நாம் சுட்டிக்காட்டும் அவசியம் இருக்கிறது. 
மாநாடு நடப்பதற்கு முன் அனைவரையும் அழைக்க வேண்டும்; எங்களையும்அழைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். பல்வேறு கட்சிகளின்தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்தெளிவுபடுத்தப்பட்டது. அப்போது இந்தக் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை.ஏனெனில் மாநாட்டுக்கு மக்கள் வர மாட்டார்கள்; மாநாட்டுக்குப் போகக் கூடாதுஎன்று நாம் பரப்பிய செய்திகளால் தீவுத்திடலில் சமாதி கட்டப்படும் என்று கனவுகண்டார்கள். அதை வெளிப்படையாகவும் சொன்னார்கள். அவர்களுக்குப் பலநாட்கள் தூக்கம் இல்லாமல் செய்யும் அளவுக்கு மாநாடு முஸ்லிம் சமுதாயத்தின்பேராதரவுடன் வரலாற்றுச் சாதனை படைத்ததைப் பார்த்து திகைத்துப்போனவர்கள் மாநாட்டின் நோக்கத்தைத் திசை திருப்பும் வகையில் எதையாவதுஎழுதாவிட்டால் தங்கள் மண்டை வெடித்து விடும் என்று கருதி ஏற்கனவேசரியாகப் புரிந்து வைத்திருந்ததை இப்போது தவறாகச் சித்தரிக்கமுயற்சிக்கிறார்கள். இதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறோம். 
பிறரை மேடையில் ஏற்றுவது குறித்த தவ்ஹீத் ஜமாஅத் நிலை இவர்களுக்குத்தெரியவில்லை. இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் இது குறித்து எடுத்துள்ளநிலைபாட்டை அறிவதற்கு உரிய முறையில் முயற்சிக்க வேண்டும். இதுவிஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. 
மார்க்கம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் தஹீத் ஜமாஅத் எந்தக் கொள்கையைச் சரிகாண்கிறதோ அந்தக் கொள்கையை ஏற்காத எவரையும் மேடையில்ஏற்றுவதில்லை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு. 
இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 
சமுதாயப் பிரச்சனைக்காக போராடும் போதும் கோரிக்கை வைக்கும் போதும்பிறரை ஏற்றுவது, பிறருக்குப் பேச வாய்ப்பளிப்பது ஆகியவற்றில் கோரிக்கையநிறைவேற்றுபவர்களும் அல்லது அதற்கு உதவியாக இருப்பவர்களும் கடந்தகாலங்களில் தேவைப்பட்டால் மேடையில் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்தக்கோரிக்கை குறித்து மாநாடு பொதுக்கூட்டம் நடக்கிறதோ அந்தக் கூட்டத்தில் நான்கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பேன் என்று உறுதியளிக்க விரும்பினால் அதற்குஅனுமதி அளிக்கப்பட்டதுமுண்டு. 
உதாரணமாக சென்னை மண்ணடியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 தந்ததற்காக இப்போது ஓட்டு போடுகிறோம்.அதை ஏழு சதவிகிதமாக ஆக்கினால் அடுத்த சட்டசபை தேர்தலிலும்வாக்களிப்போம் என்று பிஜே பேசினார். அந்தக் கூட்டத்தில் மேடையில் இருந்ததயாநிதி மாறன் இதற்காக முயற்சி செய்ய வேண்டும். அது பற்றி அவர் உறுதிஅளிப்பதாக இருந்தால் அளிக்கலாம் என்று பீஜே குறிப்பிட்டார். தயாநிதி மாறனும்எழுந்து அது சாத்தியமில்லாமல் உள்ளது இருந்தாலும் நான் தலைவரிடம் இதுகுறித்து எடுத்துச் சொல்வேன் என்று கூறினார். அத்துடன் திமுக செய்த இலவசதிட்டங்களைப் பற்றியும் பேசினார். அவர் பேசி முடித்ததும் எழுந்து இது போன்றஇலவசங்கள் எங்களுக்கு முக்கியம் அல்ல. எங்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்புமே முக்கியம் என்று அவரை மேடையில் வைத்துக் கொண்டே பீஜேகூறினார். 
பார்க்க வீடியோ ஆதாரம் 
 
அது போல் தான் இட ஒதுக்கீட்டுக்கான மாநாடு என்பதால்அழைக்கப்பட்டவர்களில் இதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் வந்தால்அவர்களிடம் உறுதி மொழி கொடுக்கச் சொல்ல வேண்டும் என்று தவ்ஹீத்ஜமாஅத் முடிவில் இருந்தது. ஆனால் அழைப்பு கொடுக்கப்பட்டவர்களில்அதிகமானவர்கள் வரவில்லை. வந்த பிரமுகர்களில் ஹாரூன் அவர்கள்நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பல வகையில் உதவ முடியும்நிலையில் இருந்தார். துறைமுகம் ஹாஜா, தேசிய லீக் பஷீர் ஆகியோர் மத்தியஅரசாங்கத்தில் வாதாடும் இடத்தில் இல்லை. எனவே தான் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் இட ஒதுக்கீடுக்காக நான் எல்லா வகையிலும் குரல்கொடுப்பேன். தர்காவாதியாக நான் இருந்தாலும் இட ஒதுக்கீடு கோரிக்கையைஆதரித்ததால் கலந்து கொண்டேன் எனக் கூறினார். அதன் பின்னர் பீஜே எழுந்துஹாரூன் அவர்கள் சொன்னபடி இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் ஓட்டு என்றநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். 
தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு நுணுக்கமான வேறுபாடுகளைக் கவனத்தில்கொண்டு தான் தவ்ஹீத் ஜமாஅதின் நிலைபாடு அமைந்துள்ளது. இடஒதுக்கீடுக்காக கூடிக் கலைவது இதன் நோக்கம் அல்ல. அந்தக் கோரிக்கையைவென்றெடுப்பதற்காக தொடர் முயற்சிகளை தவ்ஹீத் ஜமாஅத் விட்டு விடாது. 
கருணாநிதியோ ஜெயலலிதாவோ மாநாட்டுக்கு வந்து இட ஒதுக்கீடுக்க்காக நாங்கள் முயற்சிப்போம் என்று வாக்குறுதி அளிக்க விரும்பினால் அதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் மாலை சால்வை உள்ளிட்ட விஷயங்களில் சமரசம் செய்யாது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக