சனி, 17 ஆகஸ்ட், 2013

முகநூல் பதிவுகள் : கேடு கெட்ட சூஃபிசம்




தனது ஷேக் என்ன சொன்னாலும் கண்ணை மூடி நம்ப வேண்டும் என்று, ஷேக்மார்களை இறை தன்மையுடன் பொருத்திப் பார்க்கிற பாழும் இணை வைப்பு கொள்கையை பரப்புகிறவன் தான் சுனஜன நம்புகிற "கல்விக்கடலாம்" கஸ்ஸாலி.

தரீக்கத்தினை அடைவதற்கு கல்வத் (தனித்திருத்தல்) , ஜூஉ (பசித்திருத்தல்), ஸஹர்(விழித்திருத்தல்), ஸூம்து மௌனமாயிருத்தல்) போன்றன அவசியமாகும் . ( இஹ்யா உலூமுத்தீன் 2-243 )

அத்துடன் தனது உடலைத் தானே சிலவேளை வதைத்துக் கொள்ளவும் வேண்டும் .
இதற்காக நீண்ட நேரம் ஒற்றைக் காலில் நிற்றல் ,
தலைகீழாக நிற்றல் ,
முள்ளின் மீது அமர்தல் ,
நெருப்பால் உடலைப் பொசுக்கல் போன்ற பயிற்சிகளையும் ஷைக்கானவர் மேற்கொள்வார் .
இவர் கூறும் அனைத்தையும் முரீது (சீடர்) எவ்வித மறுப்போ , வெறுப்போ இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது ஸூபித் துவத்தின் பொது விதி.
சுருங்கக் கூறின் அவர்கள் கூறுவது போல் ‘ஒரு (முரீது) சீடனானவன் தனது ஷைக்கின் முன்னால் மய்யித்தைக் குளிப்பாட்டுபவன் முன் வைக்கப்பட்ட சடலத்தைப் போல் நடந்து கொள்ள வேண்டும் .
அவனுக்கு எந்தவித விருப்பு வெறுப்போ சுய சிந்தனையோ இருக்கக் கூடாது .
அவரின் முன் நின்றால் இவனுக்குப் பேச்சே வரக் கூடாது,
அவரது அனுமதியின்றி இவன் (தன்மனைவீயுற்பட)எவரிடமும் தொடர்பு கொள்வதோ, குர்ஆன்ஓதல், திக்ர் , அறிவைத்தேடல் போன்ற எவற்றிலுமோ ஈடுபடக் கூடாது .(அல் அன்வாருல் குத்ஸிய்யா 1- 187)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக