சனி, 17 ஆகஸ்ட், 2013

மக்கத்து காஃபிர்கள் - சுன்னத் (?) ஜமாஅத் : ஒரு ஒப்பீடு


""நாங்கள் என்ன அவ்லியாக்களை அழைத்தா பிரார்த்திக்கிறோம்? அவர்கள் எங்களுக்குச் சிபாரிசு செய்வார்கள் என்று தானே கூறுகிறோம்! நாமெல்லாம் பாவிகள்! அதனால் அல்லாஹ்வை நெருங்க முடியாது. அதனால் இவர்கள் மூலம் சீக்கிரம் நெருங்கி விடலாம்"" என்று பரேலவிகள் வாதிடுகின்றனர். 

இது இப்போது இவர்களாக சொல்கிற வாதமல்ல, ஏற்கனவே மக்கத்து முஷ்ரிக்குகள் வைத்த வாதம் தான் !!

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர் களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்).
அவர்கள் முரண் பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். "அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்'' என்றும் கூறுகின்றனர். "வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)

எதை அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் தங்கள் அடிப்படை கொள்கையாக வைதுக்கொண்டிருந்தார்களோ, அதை நியாயப்படுத்தும் பொருட்டு என்ன தர்க்கங்களை எல்லாம் அவர்கள் செய்து வந்தார்களோ, அதே கொள்கையை, அதே வாதத்தை அச்சுபிசகாமல் பின்பற்றி வருபவர்கள் தான் இன்றைய பரேலவிகள்.

அதே சமயம், இந்த பரேலவிகளின் மனைவிமார்கள் பிரசவம், இன்னும் இது போன்ற கடுமையான நேரங்களில் "யா முஹய்யித்தீன்'' என்று தான் பிரார்த்திக்கின்றனர். ஆனால் மக்கத்து முஷ்ரிக்குகளோ "அல்லாஹ்வே'' என்று அழைத்துத் தான் பிரார்த்தித்தார்கள்.

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத்தூய்மையுடன் வணக்கத்தை உரித்தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றித் தரையில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை. (அல்குர்ஆன் 31:32)

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களை காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர். (அல்குர்ஆன் 29:65)

இந்த வகையில் இன்றைய பரேலவிகளை விட அன்றைய மக்கத்து முஷ்ரிக்குகள் மேலானவர்களே !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக