சனி, 17 ஆகஸ்ட், 2013

முகநூல் பதிவுகள் : பிஜே புராணம்




தர்காவிற்கு செல்லுதல் பாவமான காரியம் என்று கப்ர் முட்டிகளிடம் சொன்னால் பிஜே ஒரு முட்டாள் என்று பதில் சொல்கிறார்கள்.

மவ்லூத் ஓதுவதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் உள்ளதா என்று இணைவைப்பாளர்களிடம் கேட்டால் பிஜே ஒரு குழப்பவாதி என்கிறார்கள்.

சஹாபாக்களை பின்பற்றலாம் என்று சொல்வது வழிகேடில்லையா? என்று சலபிகளிடம் கேட்டால் பிஜே முர்தத் ஆகி விட்டார் என்கிறார்கள்.

சூனியத்தை நம்புவது இணை வைப்பு என்று சொன்னால் பிஜே ஒரு காபிர் என்று பதில் அளிக்கிறார்கள்.

முஹம்மது (சல்) தான் இறுதி நபி என்று காதியானிகளிடம் சொன்னால் அவர்களும் பிஜேவை ஏசுகிறார்கள்.

சூபிகளிடம் தரீக்காவிலுள்ள தவறுகளை எடுத்துரைத்தால் அவர்களும் பிஜெவையே வசை பாடுகிறார்கள்.

மத்ஹப் வாதிகளிடம் அதிலுள்ள ஆபாசங்களை விளக்கினால், தப்லீக் ஜமாஅத்தினரிடம் அவர்களது அபத்தமான கொள்கைகளுக்கு சான்று கேட்டால் அனைவருமே பிஜெவையே திட்டுகிறார்கள்.

கிறிஸ்தவர்களிடம் பைபிள் கடவுளின் வார்த்தையில்லை என்று நிரூபித்தாலும், நாத்திகர்களின் பகுத்தறிவு வேஷத்தை கலைத்தாலும், ஹிந்துக்களின் மூட நம்பிகைகளை படம் போட்டு காண்பித்தாலும் அனைவருமே ஓன்று திரள்வது பிஜேவை விமர்சிக்கத்தான்..

என்றால், ஒரு விஷயம் புலனாகிறது..

இஸ்லாத்தில் மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகிலும் கூட இரண்டே சித்தாந்தங்கள் தான் .உள்ளன.

ஒன்று, சான்றுகளுடனும் சிந்தனை செறிவுடனும் பேசும் ஏகத்துவ சித்தாந்தம் !

இன்னொன்று, நம்மை கேலி செய்வதையும் திட்டுவதையுமே குறிக்கோளாக கொண்ட மற்ற சித்தாந்தங்கள் !!

அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்வோர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா? (40:69)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக