சனி, 17 ஆகஸ்ட், 2013

தரமற்று போன "தக்லீத்" வாதம்




ஒருவர் ஒன்றை சொன்னால், அது அறிவுக்கு முரணாக இருப்பினும், தான் ஏற்றுக்கொண்ட சித்தாந்தத்திற்கு மாற்றமாக இருப்பினும், ஒருவர் அதை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வாரானால் அப்போது அந்த நபரை அவர் தக்லீத் செய்கிறார் என்று பொருளாகும். 

இது தான் தக்லீதுக்கான அளவுகோலே தவிர, ஒருவரது பேச்சுக்களை, அறிவுரைகளை இன்னொருவர் தமது வாழ்நாளில் மறுத்ததே இல்லை என்பதால் அவர் மற்றவரை தக்லீத் செய்கிறார் என்று கூறுவது அறிவுக்கு பொருந்தாத வாதம். 
அப்படிபார்த்தால் அமெரிக்காவின் பில் கிளிண்டனை கூட ஒருவர் தக்லீத் செய்வதாக கூறலாம், கேட்டால் அவரது கொள்கை எதையாவது நீ மறுத்து பேசியிருக்கிறாயா ? என்று திருப்பி கேட்டு விடலாம். 

அயனாவரத்தில் டீக்கடை வைத்திருக்கும் சுப்ரமணியனை பற்றி இவர் எந்த குறையையுமே சொன்னது கிடையாது ஆகவே இவர் சுப்ரமணியனை தக்லீத் செய்கிறார் என்று ஃபத்வா கொடுத்து விடலாம் ! 

என்னே இவர்களது அறிவு !!

ஒவ்வொரு நபரின் சொல் செயலை எடுத்து வைத்துக்கொண்டு, இது தவறு, அது தவறு என்று என்று ஒருவர் தமது வாழ்நாளை ஒவ்வொரு மனிதனை பற்றியும் மறுப்பு சொல்வதற்காகவே ஒதுக்கினால் மட்டுமே, அவர் யாரையும் தக்லீத் செய்யவில்லை என்று நிரூபிக்க முடியும். 

அப்படியும் எங்காவது ஒரு சிலரது கருத்துக்களை இவர் மறுத்து பேச தவறி விட்டார் என்றால், அந்த நபரை தக்லீத் செய்கிறார் என்று சொம்பை தூக்கும் இந்த அறிவிலி கூட்டம்.

தாங்கள் கொண்ட கொள்கைக்கு தங்களிடம் உருப்படியான ஆதாரங்கள் இல்லை, அதற்கு பதிலடியாக நாம் வைக்கும் சான்றுகளை தக்க காரணங்களை கூறி மறுப்பதற்கான திராணியும் இல்லை,
மூளையை கழற்றி காயபோட்டு விட்டு மேற்கண்டவாறு சொம்பு தூக்க மட்டும் இவர்கள் தயார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக