செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

முகத்திரை கிழிக்கப்பட்ட காசிமி


முஸ்லிம் பெண்களை , கண்டவன் கூட செல்பவள், கணவன் வெளிநாட்டில் இருக்க, இங்கே அன்னியர்களுடன் ஊர் சுற்ற செல்கிறாள்,

என்று சொல்வது நாலாந்திர பேச்சில்லையா? இதில் உங்கள் குடும்ப பெண்ணும் உட்படுமே, அது பரவாயில்லை உங்களுக்கு, இவ்வாறு சொன்னவனை நாயே என்று அழைத்து விட்டால் மட்டும் கொதிப்பீர்களா?

ஏன் இப்படி பேசுகிறீர்கள்? இது நியாயமா ? என்று அவனிடம் போன் செய்து கேட்ட போது, நான் இப்படி தான் சொல்வேன், இன்னும்ஆயிரம் முறை சொல்வேன், கணவன் ஊரில் இல்லாதிருக்க, இங்குள்ள பெண்கள் கண்டவர்களுடன் சுற்றுகிறார்கள் என்கிற கருத்தை மீண்டும் சொன்னானே, அது பரவாயில்லையா? இவ்வாறு சொன்னவனை அயோக்கியன் என்று ஒருமையில் சொல்வது மட்டும் உங்களுக்கு கசக்கிறதா?

ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராய் இந்த அளவிற்கு மிருகத்தனமான பேச்சை பேசியிருக்கிற அந்த ஷம்சுதீனை உங்களில் எத்தனை பேர் கண்டித்தீர்கள் ?

சரி, இவனை திட்டியது முகனூலில் உள்ள ஆயிரக்கணக்கன சகோதரர்கள் தானே?
இவனை திட்டியது சகோ. செய்யது இப்ராஹிம் தானே?

நியாயமாக பார்த்தால் இவன் செய்யது இப்ராஹீமையும், அது போல் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏனைய உறுப்பினர்களையும் தானே ஏச வேண்டும்?
ஆனால், இவன் செய்தது என்ன?

தொலைபேசியில் பேசுகிற போது, சகோ. பிஜெவை நாய் என்றான்.
பிஜெவை அயோக்கியன் என்றான். பிஜேவை அவன், இவன் என ஏக வசனத்தில் திட்டினான்.
இவனுக்கு கேன்சர் வந்தது மட்டும் பத்தாது, நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு தெரு தெருவாக அலைய வேண்டும்

என்றெல்லாம் ஒரு மார்க்க அறிஞரை திட்டித் தீர்த்தானே,
இது போன்ற வார்த்தைகளுக்காக உங்களில் எத்தனை பேர் கொதித்தீர்கள்?

என்னாங்கடா உங்க நடுநிலை?

மேலும்,
எங்கள் சமுதாய பெண்களையா அவதூறு சொல்கிறாய் என்று கேட்ட போது, அதற்கு ஆதாரம் என்கிற பெயரில், பெண்கள் அனைவரையும் விபச்சாரியுடன் தொடர்புபடுத்தி, வீட்டை விட்டு வெளியில் செல்கிற அனைத்து பெண்களும், குறிப்பாக இது போன்ற போராட்டங்களுக்கு செல்லும் எல்லாருமே விபச்சாரிகள் தான் என்கிற கருத்தை மீண்டுமொரு முறை அழுத்தமாய் பதித்தானே?

இதை விட ஒரு இழி சொல் வேறு வேண்டுமா இந்த உம்மத்துக்கு?

இவனை நாய் என்றும் கிறுக்கன் என்றும் திட்டியது மிகக் கொடூரமான வார்த்தையோ?

பிஜே இவனை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார்,
பிஜே அதிமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டார்,

என்றெல்லாம் அவதூறுகளையும் புளுகுகளையும் சிறு சஞ்சலமுமின்றி சொல்லியிருக்கிறானே, இவனை கடுமையான வார்த்தையுடன் திட்டியது உங்களுக்கு பொறுக்கவில்லை என்றால்,

உங்கள் நடு நிலை சந்தி சிரிக்கிறது , உங்கள் ஈமானிய உறுதி ஆட்டம் கண்டுள்ளது.

எந்த குர்ஆன், பிறரிடம் கண்ணியத்தையும் அமைதியையும் பேண சொல்கிறதோ அதே குர்ஆன், அநியாயம் செய்பவர்களிட்ம் வரம்பு மீறவும் நம்மை அனுமதிக்கிறது.

எந்த இறைவன் நம்மை நளினமாகவும், மென்மையாகவும் மார்க்கத்தை போதிக்க சொல்கிறானோ அதே இறைவன், நமக்கு தீங்கு செய்பவர்களிடம் கண்ணியக்குறைவாய் பேசவும் அனுமதிக்கிறான்

எனும் போது அனைத்தையும் ஒரு சேர பின்பற்றுபவன் தான் முஸ்லிம்.

குர் ஆனின் ஒரு பகுதியை ஏற்று இன்னொரு பகுதியை விட்டு விடுபவன் முஸ்லிமேயல்ல !!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக