செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

நடு சென்டர்களின் சிறு பிள்ளைத்தனம்


பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் சக நண்பர்களுடன் விளையாடுகிற போது, குழந்தைகளுக்கே உரித்தான கர்வங்கள் வெளிப்படும்.

கண்ணாம்மூச்சி ஆடுகையில், தம்மால் ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை என்கிற நிலை ஏற்பட்டு விட்டாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள அவர்கள் மனம் விரும்பாது.
"போடே நா உன்ன அப்பவே பாத்துட்டேன்", 
"இங்க தானேலே ஒளிச்சிருந்தே, ஃபஸ்ட் உன்ன தாம்லே பாத்தேன்.."

என்று தமது தோல்வியை மறைக்க, தங்களுக்கே உரித்தான பாஷையில் சண்டையிட்டுக் கொள்வர்.

அதாவது, இன்னொருவர் தம்மை வீழ்த்தி விட்டார் என்பதையோ, இன்னொருவரிடம் தான் தோற்று விட்டோம் என்பதையோ ஒரு மனிதனால் எளிதில் ஏற்றுக் கொள்ள இயலாது.

குழந்தைப் பருவத்தில் இவை பிறரால் ரசிக்கும் அளவிற்கு இருக்கும். அத்துடன் அத்தகைய குணத்தை அவன் திருத்திக் கொள்ள வேண்டும்.
அதுவே வளர்ந்து பெரியவனாகியும் இத்தகைய குணம் நீடிக்குமானால், அது தன்னளவிலும், தன்னை சார்ந்திருக்கும் மற்றவர்களையும் அழித்து நாசமாக்கும் புற்று நோயாக வளர்ந்து நிற்கும்.

இதை தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் போராட்ட வெற்றியை சகித்துக் கொள்ள இயலாதவர்களின் புற்று நோய் நமக்கு பறைசாற்றுகிறது.

போராட்டம் நடைபெறுவதற்கு முன்னரே இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் முடிவை அம்மா எடுத்து விட்டார்களாம். இது இந்த மன நோயாளிகளின் சமீபத்திய சால்ஜாப்பு.

அதாவது, போராட்டம் மகத்தான வெற்றி பெற்று விட்டது,
நாம் எதிர்ப்பார்த்ததை விடவும்,
நம் எதிரிகள் செய்து வைத்த கணக்கை தாண்டியும்,
உளவுத்துறையின் கணிப்பை விடவுமெல்லாம் எங்கேயோ சென்றிருக்கிறது ஜனவரி 28 போராட்ட வெற்றி !

இவர்களது இந்த சிறு பிள்ளைத்தனமான மடமைகள் நமக்கு இதை தான் தெளிவாக்குகின்றன.

இந்த மகத்தான வெற்றியை துல்லியமாய் அறிந்து கொண்ட ஊடகங்களும் உளவுத்துறையும் சேர்க்க வேண்டிய முறையில் முதல்வர் காதுக்கு சேர்த்துள்ளனர்,
ஆகவே இட ஒதுக்கீடு என்கிற ஒன்று இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படுமேயானால் அதற்கு முழு முதற்காரணம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் தான் என்கிற பேருண்மையை அனைவரும் புரிந்து கொண்டனர் என்பதும் இவர்களது இந்த சிறுபிள்ளைத்தனத்திலிருந்து புரிகிறது.

இதற்கு முன்பே இட ஒது
க்கீடு வழங்கும் முடிவை முதல்வர் எடுத்து விட்டார் என்கிற இவர்களது பொய்களுக்கு இவர்களிடம் எந்த சான்றும் இருக்காது என்பது ஒரு பக்கமிருக்க, ஒரு பேச்சுக்கு அது உண்மை என்று வைத்துக்கொண்டால் கூட, அதுவும் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவை பெறும் பொருட்டு தான் என்கிற சாதாரண உண்மை இந்த அரை வேக்காடுகளுக்கு புரியவில்லை.

ஊருக்கு நான்கு பேரை வைத்துக் கொண்டு தற்போது கலைஞரே கதி என்று அறிவாலய வாசலில் தட்டுடன் நிற்கும் மமகவிற்கு ஒரு தொகுதி கூட தேறாது என்கிற நிலையில், அக்கட்சி தங்களை ஆதரிக்காது, ஆதரித்தும் புண்ணியமில்லை என்று முதல்வருக்கு தெரியும்,

நாங்கள் முஸ்லிம்களுக்கான இயக்கமல்ல, நாங்கள் பொது.. என வெட்கமின்றி உரைத்து வரும் எஸ்டிபிஐயினால் ஆயுத பூஜைகளையும், வினாயகர் சதுர்த்தியையும் தான் சிறப்பாய் கொண்டாட இயலுமே தவிர, அதை தாண்டி எதையும் இந்த நாட்டில் கிழிக்க முடியாது என்றும் முதல்வர் அறிந்து வைத்திருக்கிறார்,

முஸ்லிம் லீக், தேசிய லீகுகளை பொறுத்தவரை அவர்களுகென குறிப்பிட்ட கொள்கை எதுவும் கிடையாது, அரசியல் ரீதியிலான முடிவை தான் எடுப்பார்கள், அவர்களால் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது என்பதும் அவருக்கு தெரியும்.

இன்னிலையில், நாம் செய்யும் ஒரு காரியத்தினால் ஒட்டு மொத்த சமூகமும் நம்மை பாராட்ட வேண்டுமெனில், தான் தேர்வு செய்ய வேண்டிய அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத் தான் என்பதை அவர் அறியாமல் இல்லை.

ஜனவரி 28 க்கு முன்னரே இட ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டு விட்டது என்பது வடிகட்டிய பொய் என்பது ஒரு பக்கமிருக்க, போராட்டத்திற்கு முன்போ பின்போ அத்தகைய எண்ணம், பாஜக ஆதரவு சிந்தனை கொண்ட இந்த முதல்வர் உள்ளத்தில் ஏற்படுவத‌ற்கு கூட இந்த பேரியக்கம் தான் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவான ஒன்று !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக