வெள்ளி, 21 ஜூன், 2013

முகநூல் பதிவுகள் : பாகிஸ்தான் தவ்ஹீத் ஜமாஅத்


பாகிஸ்தானை சேர்ந்த நண்பர் ஒருவர் தற்செயலாக சகோ. பிஜே புகைப்படம் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டு சைனுல் ஆபிதீன் தானே, தவ்ஹீத் தானே என்று என்னிடம் விசாரித்தும் கொண்டார்.

எப்படி இவரை தெரியும் என்று கேட்டதற்கு, நான் சவுதியில் தமிழர்கள் அதிகமாக இருக்கும் இடத்தில தங்கி இருந்தேன், இவரது சிடி அதிகம் ஓடும், என்று சொன்னவர், ரூமில் உள்ளவர்கள் மத்தியில் அது சரியா இது சரியா என அதிகமாக விவாதங்கள் எல்லாம் எல்லாம் வரும், என்றும் கூறினார்.

"அச்சா ஆத்மி பாய்.." என்றும் பிஜே பற்றி சிலாகித்துக்கொண்டார்.

பாகிஸ்தானில் தர்காவாதிகளும் தரீக்காக்களும் அதிகமாக இருந்தாலும், இந்த சகோதரர், அவையெல்லாம் மிகப்பெரிய தவறு என்று நம்மை விடவெல்லாம் மிக ஆவேசமாக பேசுகிறார். நபியின் சுன்னாஹ் இருக்கும் போது இமாம் எதற்கு, சஹாபாக்கள் எதற்கு? என்று தெளிவாக கேள்வி கேட்கிறார்.

அங்கும் ஒரு தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுகிறதாம்.. அதையும் சொன்னார்,.அல்ஹம்துலில்லாஹ் !!

பாகிஸ்தானி ஒருவர் மார்க்கத்தை இவ்வளவு தெளிவாக பேசி இன்றைக்கு தான் நான் கேட்கிறேன் என்பதால் இதை இங்கே பதிகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக