ஞாயிறு, 5 ஜனவரி, 2014

முகனூல் பதிவுகள் : மஹரும் வலிமாவும்


மஹர் கொடுங்கள் என்று சொன்னால் வரதட்சணை வாங்காதீர்கள் என்று பொருள்.

வரதட்சணை வாங்ககூடாது என்று நேரடியாய் ஏதும் தடை இருக்கிறதா? என்று கேட்பது முட்டாள்தனம்.

அப்படி எவராவது கேட்டால் கூட, மஹர் கொடுக்க சொல்லி ஹதீஸ் இருப்பதே வரதட்சணை வாங்காதீர்கள் என்பதற்கு ஆதாரம் தான் என்று சொல்வோம்.

இதை புரியாத மக்கள் ஒரு பக்கம் இருக்க, இதிலெல்லாம் தெளிவு பெற்றவர்கள் இன்று பெண் வீட்டு விருந்து வைத்து விட்டு, பெண் வீட்டு விருந்து வைப்பது குற்றமா? என்று எதிர் கேள்வியும் கேட்கிறார்கள்.

எப்படி மஹர் கொடுங்கள் என்பது வரதட்சணைக்கு எதிரான கட்டளையோ அது போல், வலிமா கொடுங்கள் என்கிற கட்டளையே பெண் வீட்டு விருந்துக்கு எதிரான கட்டளை தான் !

ஒரே மாதிரியான இரு சட்டங்களில் ஒன்றுக்கு ஒரு விதமாகவும் இன்னொன்றுக்கு வேறு விதமாகவும் புரிவது சந்தர்ப்பவாதம் அல்லாமல் வேறு என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக