வெள்ளி, 12 ஜூலை, 2013

தமுமுக நடத்தும் போராட்டத்தை ஆதரிக்கலாமா?



சமூக பிரச்சனைக்காக பிற இயக்கங்களுடன் ஒரே மேடையில் கை கோர்க்க முடியாது என்பது போல, அந்த இயக்கங்கள் என்ன நோக்கத்திற்காக அந்த சமூக பிரச்னையை கையில் எடுத்திருக்கிறார்கள் என்பதை சிந்திக்காமல் கண் மூடித்தனமாக அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவும் முடியாது.

குறிப்பாக, தமுமுக போன்ற அமைப்புகள், இந்த சமூகம் பல வருடங்களாக ஏங்கி தவிக்கும் தனி இட ஒதிக்கீடு என்கிற பிரச்னையை தங்கள் சுய இலாபத்திற்காக பயன்படுத்தி இந்த சமுதாயத்தையே விற்ற சமுதாய துரோகிகள் என்பது பட்டவர்த்தனமாகி விட்ட இந்த காலகட்டத்தில், அவர்கள் இட இதிக்கீடு கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினாலும் நல்ல விஷயம் தானே செய்கிறார்கள் என்று கூறி நாம் ஆதரவு கூட தெரிவிக்க முடியாது.

அப்பாவி முஸ்லிம்களை ஊடகங்கள் முன் விலை பேசி தங்களது இரண்டு தொகுதி செல்வாக்கை (?) நான்காக உயர்த்தும் பொருட்டு, போயஸ் தோட்ட வாசலிலும் கோபாலபுர வாசலிலும் காவல் கிடக்கத்தான் இது போராட்டங்கள் பயன்படும் எனும் போது, இத்தகைய போராட்டங்கள் நடைபெறாமல் போவது தான் சமுதாயத்திற்கு பாதுகாப்பு என்பது எனது உறுதியான கருத்து !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக