திங்கள், 3 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நாஷித் அஹமத் - 2



03/09/2012

அஸ்ஸலாமு அலைக்கும்..


ஒரு வாதத்திற்கு என்று நீங்கள் சொல்வது போல்,
ஈஸா நபி மரணித்து விட்டார் என்று எடுத்து கொண்டு பார்த்தாலும் அல்லா நாடினால் ஈஸா நபி மீண்டும் வருவார் என்று நம்பிக்கை கொண்டால் கூட பரவாஇல்லை என்று சொல்லலாம். 

அது பரவாயில்லையா? என்று நான் கேட்கவில்லை.

ஹதீஸ்கள் பலவற்றில், ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது  . ஆனால், உங்கள் கொள்கையோ ஈசா நபி இறந்து விட்டார்கள் , மீண்டும் வரவே மாட்டார்கள் என்பதாகும். 
குர் ஆனில் ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான், ஆகவே அதற்கு முரணாக இருக்கிற ஹதீஸ்களை ஏற்க முடியாது என்று வாதம் வைத்தீர்கள்.

இதற்கு தான் நான் கேட்டேன், குர் ஆனில் ஈசா நபியின் மரணத்தை பற்றி விலாவாரியாகவே பார்த்து விடலாம், அதற்கு முன், ஒரு வாதத்திற்கு, ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்வதாகவே வைப்போம், அதை நம்ப வேண்டும் என்பதால் ஏன் நான் ஹதீஸை மறுக்க வேண்டும்???? குர் ஆனில், உங்கள் கருத்துப்படி ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று உள்ளது, ஹதீஸில் ஈசா நபி கியாமத் நாளுக்கு சமீபமாக வருவார்கள் என்று உள்ளது. இரண்டையும் சேர்த்தே கூட நம்பலாமே.. மீண்டும் வருவார்கள் என்று வருகிற ஹதீஸ், ஈசா நபி மரணித்து விட்டதாக நீங்கள் புரிகிற இறை வசனத்திற்கு ஒன்றும் முரணில்லையே????
மரணித்து விட்டார்கள் தான், ஆனால் மீண்டும் வருவார்கள் - இப்படி புரியலாமே??

என்பது தான் முதல் வாய்ப்பில் நான் எழுப்பிய கேள்வி.

இதற்கு தெளிவாக பதில் சொல்லாமல், அப்படி வைத்தாலும் பரவாயில்லை, ஆனால் உடலுடன் உயர்த்தப்பட்டார் என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் என்று மேம்போக்காக பதில் சொல்கிறீர்கள்.

குர் ஆனில் ஈசா நபியின் மரணத்தை பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதெல்லாம் விலாவாரியாகவே இன்ஷா அல்லாஹ் அலசுவோம், எதுவும் மிஞ்சமின்றி தெளிவாகவே வாதிக்கலாம், பிரச்சனையில்லை, ஆனால் இப்போது எனது கேள்வி இதுவல்ல.

எனது கேள்வி, இப்போது உங்கள் கொள்கை என்ன? ஈசா நபி மரணித்து விட்டார்கள் என்று குர் ஆன் சொல்வதையும் நம்பி, மீண்டும் வருவார்கள் என்று ஹதீஸ் சொல்வதை நம்புகிறீர்களா இல்லையா? 
நம்பவில்லை என்றால் ஏன் நம்பவில்லை?? இதற்கு தெளிவாக விளக்கம் அளியுங்கள்.


வபாத் - விளக்கம் என்ன?

அடுத்து, வபாத் என்று பொதுவாக வந்தால் நேரடி அர்த்தத்தை கொடுக்கலாம், ஆனால் உயிருடன் தொடர்புப்படுத்தி வந்தால் மரணம் என்கிற பொருளை மட்டும் தான் கொடுக்க முடியும் என்று வாதம் வைத்தீர்கள்.


இங்கே கைப்பற்றுதல் என்பது ஒரு உயிரோடு தொடர்பு கொண்டு வரும் போது அதற்க்கு மரணம் என்பது தான் முதல் பொருள். கூடுதல் விளக்கம் தான் மற்றவை. 


இது அடிப்படையிலேயே தவறு.

இதை சொல்வீர்கள் என்று ஏற்கனவே நான் அறிந்ததால் தான் மவுத் என்பதை சுட்டிக்காட்டினேன். மவுத் என்று அல்லாஹ்வும் ரசூலும் பல இடங்களில் சொல்லியுள்ளனர், (4 :15 ) மரணத்தை குறிக்கும் இடங்களில் அவை, மரணத்தை தவிர வேறு எந்த அர்த்தத்திற்கும் பொருந்தாது. அப்படிப்பட்ட்ட இடங்களில் மவுத் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், வபாத் என்பதையும் அல்லாஹ் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளான்.
வபாத் என்பது ஒரு பொதுவான சொல். மவுத் என்பதன் அகராதி பொருள் மரணம் என்கிற போதும் வபாத் என்பதன் அகராதி பொருள் மரணம் அல்ல ! கைப்பற்றுதல் ஆகும்.

வேறு வேறு வசனங்களில் உயிர் குறித்து சொல்லப்படும் போது அங்கே மரணத்தை தவிர வேறு பொருள் இல்லை என்பது இரு வேறு கருத்துக்கு இடமின்றி புரிவதால் அங்கே கைப்பற்றுதல் என்கிற வபாத் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈசா நபியை பொறுத்தவரை அவர்கள் இறக்கவில்லை. இறக்கவில்லை என்கிற போதும் வபாத் என்று தான் அல்லாஹ் சொல்கிறான். இப்போது பாமரத்தனமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், மற்ற வசனங்களில் எப்படி வபாத் என்பதற்கு மரணம் என்று பொருள் செய்தோமோ அதே பொருளை முதலில் செய்வோம். ஈசா நபி மரணித்தார்கள் என்று வருகிறது.
ஹதீஸை பார்க்கிறோம், மீண்டும் வருவார்கள் என்று உள்ளது.
அப்படியானால் இங்கே சிறிய குழப்பம் வருகிறது, எல்லாரையும் போல மரணித்தார் என்று அல்லாஹ் சொல்கிறான், ஆனால் ஹதீஸில் மீண்டும் வருவார் என்று உள்ளதே, இதை எப்படி புரிவது என்று சிந்திக்கிறோம்.
அந்த வசனத்தில் வருகிற வபாத் என்பதற்கான நேரடி பொருள் என்ன என்று பார்க்கிறோம். முழுமையாக கைப்பற்றுதல் என்று உள்ளது.
இதற்கு மரணம் என்று மட்டும் தான் பொருள் கொடுக்க முடியுமா? என்றால் இல்லை. வெறுமனே அல்லாஹ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டான் என்கிற பொதுவான அர்த்தத்தையும் கொடுக்கலாம். இந்த அர்த்தத்தை வைத்தால் ஹதீஸ் புரிகிறதா? என்றால் புரிகிறது.
இப்போது இந்த அர்த்தத்துடன் நிறுத்திக்கொள்கிறோம். இது தான் சிந்தித்து புரிய வேண்டிய முறை.


வபாத் என்பதன் அகராதி பொருள் மரணம் அல்ல, கைப்பற்றுதல் தான் என்பதற்கு குர் ஆனிலேயே ஏராளமான சான்றுகள் உள்ளன.. உதாரணத்திற்கு 2 :281 , 3 :161 , 16 :111 போன்ற வசனங்களை சொல்லலாம்.

இந்த வசனங்களில் வபாத் என்கிற சொல்லுக்கு கைப்பற்றுதல் என்கிற பொருளை மட்டும் தான் கொடுக்க வேண்டும். மரணம் என்பது பொருந்தாது.
இதை நான் சுட்டிக்காட்டுவதற்கு காரணம், வபாத் என்கிற வார்த்தையின் அர்த்தம் மரணம் அல்ல என்பதை புரிய வைக்கத்தான். 

மரணத்தை தவிர வேறு கருத்தே இல்லை என்கிற நிலை இருந்தால் மட்டும் தான் அதற்கு மரணம் என்று பொருள் செய்ய வேண்டும்.

ஈசா நபி பற்றி வருகிற வசனத்தில் மரணத்தை தவிர வேறு அர்த்தத்தை கொடுக்கவே முடியாது என்கிற நிலை இல்லை. 
ஏன் இல்லை என்றால், ஹதீஸில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று உள்ளது. ஆகவே இந்த வசனத்திற்கு, வெறுமனே கைப்பற்றினான் என்று மட்டும் பொருள் செய்து நிறுத்திக்கொள்வோம்.

இதற்கு பதில் சொல்லும் போது, 


எங்கெல்லாம் தபாவா என்ற சொல் ஒரு உயிரினத்தோடு சொல்லப்பட்டிருக்கிறதோ  அங்கெல்
லாம் மரணத்தை தவிர வேறு அர்த்தம் கிடையாது  

என்று மறுப்பு சொல்கிறீர்கள். இந்த மறுப்பு சரியா? என்றால் அதுவும் தவறு !!!


எங்கெல்லாம் வபாத் என்கிற சொல், ஒரு உயிருடன் தொடர்புப்படுத்தி வருகிறதோ அங்கெல்லாம் மரணத்தை தவிர வேறு அர்த்தம் இல்லை என்று சொல்கிறீர்கள்.
இதற்கு மறுப்பாக, 39 :42 வசனத்தை தருகிறேன்.

உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் கைப்பற்றுகிறான்.

இங்கு வரக்கூடிய வபாத் என்பதற்கு மரணம் என்கிற பொருளை தர முடியுமா? அப்படி பொருள் செய்தால் உயிர்களை மரணிக்கும் போதும், மரணிக்காதவைகளை தூக்கத்தின் போதும் அல்லாஹ் மரணிக்க செய்கிறான் 

என்று சொல்ல வேண்டி வரும். இதில் எந்த அர்த்தமும் இல்லை, இது முதல் விஷயம்.

அப்படி இல்லை என்றாலும், இங்குள்ள கைப்பற்றுதல் என்பது மரணத்தை பற்றி தானே பேசுகிறது என்று நீங்கள் இதற்கு மறுப்பு சொல்வீர்கள். 
அந்த மறுப்பும் எடுபடாது.. 
ஏன் என்றால், இங்கு அல்லாஹ் சொல்லக்கூடிய வபாத் என்பதும், வேறு வேறு வசனங்களில் அல்லாஹ் சொல்லும் வபாத் என்பதும் ஒரே அர்த்தத்திலான மரணமா? இல்லை என்று நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

புரியவில்லை என்றால் இன்னும் கவனமாக படியுங்கள்..

உதாரணமாக, 16 :32 வசனத்தை எடுத்துக்கொள்வோம்.

அதில், நல்லவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றும் போது ஸலாம் சொல்வார்கள் என்று அல்லாஹ் சொல்கிறான்.
இந்த இடத்தில் "கைப்பற்றுதல்" என்பதன் பொருள் - மரணம் தான். மாற்றுக்கருத்தே இல்லை !!

இதில் உயிருடன் தொடர்புப்படுத்தி வருகிறது, ஆகவே இங்கு மரணம் என்று சொல்கிறோம் என்று நீங்கள் வாதம் வைக்கிறீர்கள்.

சரி, 39 :42 வசனமும் இதே போல உயிரை தொடர்புப்படுத்தி வருவதால் இங்குள்ள "கைப்பற்றுதல்" என்பதும் மரணத்தை தான் குறிக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட , இரண்டும் ஒரே அர்த்தத்தில் சொல்லப்பட்ட மரணமா?  இல்லை !!! இது தான் இங்கு கவனிக்க வேண்டியது !!

16 :32 வசனத்தில் உண்மையாகவே நாம் மரணிப்பது பற்றி சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், 39 :42 வசனத்தில் உள்ள கைப்பற்றுதல் என்பது தூக்கத்தை குறிக்கிறது. தூக்கமும் ""ஒரு வகையான"" மரணம் தான் என்பதாலும், தூக்கத்தின் போது உடல் இருக்க, உயிர் மட்டும் அல்லாஹ்விடம் சென்று விட்டு திரும்புகிறது என்பதாலும் இந்த வசனத்தில் வரக்கூடிய கைப்பற்றுதல் என்பதற்கு மரணம் என்று தப்சீர் செய்கிறீர்கள்.

ஆனால், தூங்கிக்கொண்டிருப்பவர் உண்மையில் மற்ற மற்ற மரணித்தவர்களை போல மரணித்தவர்களா? தூங்கிக்கொண்டிருப்பவர்களை கொண்டு போய் அடக்கம் செய்து விடுவோமா? தூங்கி கொண்டிருப்பவர் முன்னால் நின்று அவருக்காக ஜனாஸா தொழுகை தொழுவோமா? இல்லை.
இல்லை என்று நீங்களும் தான் சொல்வீர்கள்.
அப்படியானால் இதற்கு என்ன வேறுபாடு?

16 :32 வசனம், நிஜமாக ஒரு மனிதன் இந்த உலகை விட்டு முழுமையாக பிரிந்து செல்வானே, அவரை கபுரில் கொண்டு போய் வைப்போமே, அந்த மரணத்தை பற்றி சொல்கிறது.
இந்த வசனத்தின் படி, அந்த மனிதரின் இருதயம் நின்று விடும். அதை மரணம் என்று இந்த வசனம் சொல்கிறது.

ஆனால், 39 :42 வசனம், அப்படிப்பட்ட மரணத்தை சொல்லவில்லை - இந்த வசனத்தில் சொல்லப்பட்ட மரணம் என்பது கபுர் அடக்கம் செய்யப்பட வேண்டிய மரணமல்ல. 
இந்த வசனத்தின் படி அந்த மனிதரின் இருதயம் இயங்கிக்கொண்டு தான் இருக்கும். அதையும் மரணம் என்று சொல்கிறோம்.


ஆக, 
இரண்டு வசனத்திலும் வபாத் என்று வருகிறது.
இரண்டு வசனங்களுமே உயிரை பற்றி தான் பேசுகிறது.

ஆகவே உங்கள் கருத்துப்படி இரண்டு வசனங்களுக்கும் மரணம் என்று பொருள் தான் செய்ய வேண்டும் என்கிற போதிலும் ஒரு வசனத்தின் பொருள் படி மண்ணோடு மண்ணாக சென்று விட்ட மரணம், இன்னொரு வசனப்படி இருதயம் இயங்கிக்கொண்டிருக்கிற மரணம்.
முதல் வசனத்தின் படி, அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்கிற பொருளிலான மரணம், இன்னொரு வசனத்தின் படி ஜனாஸா தொழுகை தொழ முடியாதபடி வேறு விதத்திலான மரணம்.

ஆக, உயிர் பற்றி வந்து விட்டாலேயே அது மரணத்தை தான் குறிக்கும் என்று நீங்கள் சொல்வது ஒரு போலி வாதம். 

உயிர் பற்றி வந்து விட்டால் அது உண்மையான மரணத்தையும் குறிக்கும், மரணத்தை போன்ற ஒரு சம்பவத்தையும் குறிக்கும்!!!

இதையே ஈசா நபி விஷயமாகவும் பொருத்துங்கள் .

உங்கள் வாதப்படி, ஈசா நபி பற்றி வருகிற வசனமும் உயிரை பற்றி தான் பேசுகிறது? அங்கும் வபாத் என்கிற வார்த்தை வருகிறது?
 சரி, அங்கும் மரணம் என்றே பொருள் செய்வோம், ஆனால் எப்படிப்பட்ட மரணம்? ஜனாஸா தொழுகை தொழுவோமே, அப்படிப்பட்ட மரணமா அல்லது, தூங்குகிற ஒருவரை மரணித்தார் என்று சொல்கிறோமே அப்படிப்பட்ட மரணமா?

இரண்டில் எதையும் நான் பொருத்தலாம் தானே?

இப்போது நான் ஈன்ன செய்கிறேன்? ஹதீஸில் ஈசா நபி மீண்டும் வருவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளதால், இந்த வசனத்தில் உள்ள "மரணம்" என்பது ஜனாஸா தொழுகை தொழுவோமே அப்படிப்பட்ட மரணமாக இருக்க முடியாது, வேறு வகையான மரணமாக இருக்கலாம் என்று சிந்தித்து, அல்லாஹ் அவரை முழுமையாக கைப்பற்றினான், என்பதை உடலுடன் எடுத்து விட்டான் என்று பொருள் செய்கிறேன். ஏனெனில், உடலுடன் மீண்டும் அவர் இந்த பூமிக்கு வருவதாக ஹதீஸ் சொல்கிறது.
ஆகவே அவரை அல்லாஹ் கைப்பற்றினான் என்பது உடலுடனேயே கைப்பற்றி விட்டான் ,இதுவும் ஒரு வகையில் மரணம் என்றே கூட வைப்போம், தப்பில்லை. ஆனால், நானும் நீங்களும் ஒரு நாள் மரணிப்போமே, அப்படிப்பட்ட மரணமல்ல !!
அப்படிப்பட்ட மரணத்தை மட்டும் தான் வபாத் என்கிற வார்த்தை குறிக்கும் என்றில்லை, வேறு விதங்களிலான மரணத்தையும் குறிக்கும்.

சுருக்கமாக,  

16 :32 வசனத்திலும் வபாத் என்கிற சொல் உள்ளது.
39 :42  வசனத்திலும் வபாத் என்கிற சொல் உள்ளது.
ஈசா நபி பற்றி வரக்கூடிய, நாம் பேசிக்கொண்டிருக்க கூடிய 5 :107  வசனத்திலும் வபாத் என்கிற சொல் உள்ளது.

16 :32 வசனமும் உயிரை பற்றி தான் பேசுகிறது 
39 :42 வசனமும் உயிரை பற்றி தான் பேசுகிறது 
ஈசா நபி பற்றி வரக்கூடிய 5 :107  வசனமும் உயிரை பற்றி தான் பேசுகிறது 



எங்கெல்லாம் தபாவா என்ற சொல் ஒரு உயிரினத்தோடு சொல்லப்பட்டிருக்கிறதோ  அங்கெல்
லாம் மரணத்தை தவிர வேறு அர்த்தம் கிடையாது  
என்கிற உங்கள் வாதம் உண்மை என்றால் என்ன செய்ய வேண்டும்? எல்லா வசனங்களுக்கும் ஒரே மாதிரியான மரணத்தை சொல்ல வேண்டும். 16 :32 வசனத்தில் எப்படிப்பட்ட மரணத்தை பற்றி அல்லாஹ் சொல்கிறானோ, அதே போன்ற மரணத்தை தான் 39 :42 வசனத்திலும் அல்லாஹ் சொல்கிறான் என்று நீங்கள் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் அப்படி சொல்லாமல், ஆந்த வசனம் உண்மையான மரணத்தை பற்றி சொல்கிறது, இந்த வசனம், மரணத்தை மாதிரி வேறொரு சம்பவத்தை சொல்கிறது என்று பிரித்துக்கூறி, வபாத் என்று வரக்கூடிய, அதுவும் உயிரை பற்றியே வரக்கூடிய இரண்டு வசனங்களுக்கு இரண்டு வெவ்வேறு விதமான "மரணத்தை" சொல்கிறீர்கள்.

இப்படி பொருள் செய்ய உங்களுக்கு அனுமதி இருக்கிறது என்றால், 5 :107 வசனத்திற்கு நான் வேறு விதமான ஒரு மரணத்தை பற்றி சொல்கிறேன். அதாவது, உடலுடன் உயர்த்தப்பட்ட ஒரு வகையான மரணம் என்கிறேன், 
இதை ஏன் குறை சொல்கிறீர்கள்?
இப்படி நான் சொல்லும் போது மட்டும் , அதெப்படி? இங்கே வபாத் என்று வந்து விட்டது, இங்கே உயிர் சம்மந்தமாக வந்து விட்டது, ஆகவே சாதாரணமாக நீங்களும் நானும் மரணிப்பது போன்ற மரணம் தான் இது என்று ஏன் வாதம் வைக்கிறீர்கள்?
இப்படி வாதம் வைக்கிற தார்மீக உரிமையை நீங்கள் ஏற்கனவே இழந்து விட்டீர்களே?????

இப்படி கேள்வி கேட்பவர் என்ன செய்ய வேண்டும்? இதோ பாருங்கள், வபாத் என்று வருகிற எல்லா இடங்களிலும், அதுவும் குறிப்பாக உயிரோடு தொடர்புப்படுத்தி வரக்கூடிய எல்லா இடங்களிலும் நான் ஒரே மாதிரியான மரணம் என்கிற அர்த்தத்தை தந்துள்ளேன் என்று காட்ட வேண்டும்.
நீங்களே ஒரு வசனத்திற்கு ஜனாஸா தொழுகை தொழுது கபுரடக்கம் செய்ய வேண்டிய மரணம் என்று பொருள் செய்வீர்களாம், அதுவே இன்னொரு வசனத்திற்கு, கபுர் அடக்கம் எல்லாம் செய்யப்படக்கூடிய மரணமல்ல, இதில் இருதயம் இயங்கும், இரத்த ஓட்டம் இருக்கும், சிறிது நேரம் கழித்து சிரித்து பேசுவார், அப்படிபட்ட வித்தியாசமான மரணம் என்று பொருள் செய்வீர்களாம்,
ஆனால், நான் ஈசா நபி பற்றி வரக்கூடிய வசனத்திற்கு, அது உடலுடன் கைப்பற்றப்பட்ட வேறு வகையான மரணம் , சாதாரணமான மரணமல்ல, என்று சொன்னால் மட்டும் தவறு என்பீர்களோ??? என்ன நியாயம் இது???

என்பதை உங்கள் சிந்தனைக்கும் இதை படிக்கும் மற்றவர்கள் சிந்தனைக்கும் விடுகிறேன்..

ஒரு வாதத்திற்கு, இந்த வசனத்தின் படி ஈசா நபி சாதாரண மக்களை போல இறந்து விட்டார்கள் என்று வைத்துக்கொண்டாலும் ஹதீஸில் உள்ளதன் படி அவர்கள் மீண்டும் வருவார்கள் என்பதையும் நீங்கள் நம்புகிறீர்களா? என்கிற எனது கேள்விக்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும்.

குர்ஆனில் நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டதாகவும், அவர்கள் நிரந்தரமான்வர்கலாக இருக்கவில்லை என்றும், உணவருந்தாதவர்கலாக இருக்கவில்லை என்றும் சொல்கிறது. எங்கும் ஈஸா நபி விதிவிலக்காக சொல்லப்படவில்லை. மாறாக விதி விளக்காக எடுத்து கொள்ளபடுகிறார் .


என்கிறீர்கள்.


நபிமார்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று குர் ஆன் கூறுவது உண்மை தான். ஈசா நபியை பற்றி அங்கே விதிவிலக்கு சொல்லப்படவில்லை என்றாலும், ஈசா நபிக்கு இதில் விதிவிலக்கு உண்டு என்று நம்பலாம்.. ஏன் நம்பலாம் என்றால் ஹதீஸில் இந்த விதிவிலக்கு சொலப்பட்டு விட்டது.

உதாரணமாக, தாமாக செத்தவை அனைத்தும் ஹராம் என்று குர் ஆன் சொல்கிறது.
இதை அடிப்படையாக வைத்துப்பார்த்தால் தாமாக செத்தவை நிலத்தில் இருந்தாலும் நீரில் இருந்தாலும் ஹராம் என்று தான் பொருளாகிறது.
நீரில் உள்ளவை குறித்து இங்கே விதிவிலக்கு உள்ளதா? என்றால் இல்லை தான். ஆனாலும் நாம் நீரில் தாமாக செத்த மீன்களை இன்று உண்ணத்தானே செய்கிறோம்? எந்த அடிப்படையில் என்றால் ஹதீஸில் கடல் பிராணிகளில் தாமாக செத்தவையும் ஹலால் என்று சொல்லப்பட்டு விட்டதால்!
ஆக, குர் ஆனில் ஒன்றுக்கு விதிவிலக்கு சொல்லாமல் பொதுவாக சொன்னாலும் கூட, ஹதீஸில் விதிவிலக்கு சொல்லப்படலாம், இரண்டையும் இணைத்து தான் முடிவுக்கு வர வேண்டும் என்பதற்கு இந்த உதாரணம் சான்றாக உள்ளது.

இந்த அடிப்படையில், எல்லா நபிமார்களும் இறந்து விட்டார்கள் என்று குர் ஆன் சொல்வதோடு, ஈசா நபி இன்னும் இறக்கவில்லை, மீண்டும் வருவார்கள் என்று ஹதீஸ் சொல்வதையும் சேர்த்தே புரிந்தால் விதிவிலக்கு எளிதில் புரியும்.


ஈசா நபியை தன்னளவில் அல்லாஹ் உயர்திகொண்டான் என்று வரக்கூடிய வசனத்தை பற்றியும், மேலும் வேதக்காரர்கள் அவரது மரணத்திற்கு முன் நம்பிக்கை கொள்வதாக வரக்கூடிய வசனத்தை பற்றியும், இன்னும் ஏராளமான வசனங்களை பற்றியும் அடுத்தடுத்த வாய்ப்புகளில் பார்க்கலாம், இன்ஷா அல்லாஹ்..

வஸ்ஸலாம்.

-- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக