வெள்ளி, 31 டிசம்பர், 2010

ஹதீஸ்கள் தேவையா?


ஹதீஸ் தேவை என்றால் நபி ஏன் அதை எழுத சொல்லவில்லை ?
நூறு ஆண்டுகளுக்கு பிறகு சொன்னவர்களின் வாதம் எப்படி உண்மை என்று நம்புவது ?

- முஹம்மது ஃபைசல்

------------------------------------------------------------------------------------------

பிஜே பதில் :

ஹதீஸ்கள் தேவையில்லை என்பதால் தான் அவற்றை எழுத வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற வாதம் தவறானது.

குர்ஆன் வசனங்கள் இறங்கினால் அதை உடனே நபித்தோழர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். இப்பணியை அவர்கள் சிரமத்துடன் செய்து வந்தனர். ஏனென்றால் எழுதுவதற்குரிய இலகுவான சாதனங்கள் அவர்களிடம் இருக்கவில்லை. எலும்புகள் மரப்பட்டைகள் தோல்கள் ஆகியவற்றில் தான் எழுதி வந்தனர்.

இந்நேரத்தில் ஹதீஸ்களை எழுதினால் குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்து விடும் சூழல் ஏற்பட்டுவிடும் என்பதாலும் குர்ஆனை எழுதி பாதுகாப்பதற்கான முயற்சியில் முதலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் ஹதீஸ்களை எழுத வேண்டாம் என்று ஆரம்ப நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

5326حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَكْتُبُوا عَنِّي وَمَنْ كَتَبَ عَنِّي غَيْرَ الْقُرْآنِ فَلْيَمْحُهُ وَحَدِّثُوا عَنِّي وَلَا حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ قَالَ هَمَّامٌ أَحْسِبُهُ قَالَ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ رواه مسلم

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் கூறுவதை எழுதி வைக்காதீர்கள். குர்ஆன் தவிர மற்றதை என்னிடமிருந்து எவரேனும் எழுதி வைத்திருந்தால் அதை அவர் அழித்துவிடட்டும். என்னைப் பற்றி அறிவியுங்கள். தவறில்லை. யார் என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

முஸ்லிம் (5734)

ஆரம்ப நேரத்தில் ஹதீஸ்களை எழுதி வைப்பதை மட்டுமே நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். ஹதீஸ்களை அறிவிக்கக்கூடாது என்று அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறிவியுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.

ஹதீஸ்கள் தேவை என்ற காரணத்துக்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் என்னிடமிருந்து அறிவியுங்கள் என்ற கட்டளையை இட்டார்கள். ஹதீஸ்களை எழுத வேண்டாம் என ஆரம்பத்தில் அவர்கள் தடை விதித்ததற்குக் காரணம் நாம் முன்பு கூறிய விஷயமாகும்.

இதன் பிறகு குர்ஆனுடன் ஹதீஸ்கள் கலந்துவிடாது என்று கருதும் அளவிற்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களை எழுதிக்கொள்ள நபித்தோழர்களுக்கு அனுமதி வழங்கினார்கள்.

ஹதீஸ்கள் மனிதகுலத்துக்கு அவசியம் என்பதால் இதை எழுதிக்கொள்வதற்கு நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள். சில நேரங்களில் எழுதுமாறு உத்தரவும் இட்டுள்ளார்கள். இதை பின்வரும் ஆதாரங்களிலிருந்து அறியலாம்.

3161 حَدَّثَنَا مُسَدَّدٌ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالَا حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ عَنْ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُغِيثٍ عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ كُنْتُ أَكْتُبُ كُلَّ شَيْءٍ أَسْمَعُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدُ حِفْظَهُ فَنَهَتْنِي قُرَيْشٌ وَقَالُوا أَتَكْتُبُ كُلَّ شَيْءٍ تَسْمَعُهُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَرٌ يَتَكَلَّمُ فِي الْغَضَبِ وَالرِّضَا فَأَمْسَكْتُ عَنْ الْكِتَابِ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَوْمَأَ بِأُصْبُعِهِ إِلَى فِيهِ فَقَالَ اكْتُبْ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا يَخْرُجُ مِنْهُ إِلَّا حَقٌّ رواه الترمذي

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறும் அனைத்து விஷயங்களையும் மனனம் செய்துகொள்வதற்காக எழுதிக்கொள்வேன். அப்போது குரைஷியர் நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செவியுறும் அனைத்து விஷயங்களையும் எழுதிக்கொள்கிறாயா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திலும் சந்தோஷமான நேரத்திலும் (தவறுதலாக எதையாவது) பேசிவிடும் மனிதர் தானே? என்று கூறி (எழுதுவதை விட்டும்) என்னைத் தடுத்தனர். எனவே நான் எழுதுவதை நிறுத்தினேன். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தபோது தனது விரலால் தன்னுடைய வாயை சுட்டிக்காட்டி என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீதாணையாக இதிலிருந்து (அதாவது என்னுடைய வாயிலிருந்து) உண்மையைத் தவிர வேறெதுவும் வெளிப்படாது. நீ (நான் கூறுவதை) எழுதிக்கொள் என்று கூறினார்கள்.

திர்மிதி (3161)

2434 حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنِي أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا فَتَحَ اللَّهُ عَلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَامَ فِي النَّاسِ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ إِنَّ اللَّهَ حَبَسَ عَنْ مَكَّةَ الْفِيلَ وَسَلَّطَ عَلَيْهَا رَسُولَهُ وَالْمُؤْمِنِينَ فَإِنَّهَا لَا تَحِلُّ لِأَحَدٍ كَانَ قَبْلِي وَإِنَّهَا أُحِلَّتْ لِي سَاعَةً مِنْ نَهَارٍ وَإِنَّهَا لَا تَحِلُّ لِأَحَدٍ بَعْدِي فَلَا يُنَفَّرُ صَيْدُهَا وَلَا يُخْتَلَى شَوْكُهَا وَلَا تَحِلُّ سَاقِطَتُهَا إِلَّا لِمُنْشِدٍ وَمَنْ قُتِلَ لَهُ قَتِيلٌ فَهُوَ بِخَيْرِ النَّظَرَيْنِ إِمَّا أَنْ يُفْدَى وَإِمَّا أَنْ يُقِيدَ فَقَالَ الْعَبَّاسُ إِلَّا الْإِذْخِرَ فَإِنَّا نَجْعَلُهُ لِقُبُورِنَا وَبُيُوتِنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا الْإِذْخِرَ فَقَامَ أَبُو شَاهٍ رَجُلٌ مِنْ أَهْلِ الْيَمَنِ فَقَالَ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اكْتُبُوا لِأَبِي شَاهٍ قُلْتُ لِلْأَوْزَاعِيِّ مَا قَوْلُهُ اكْتُبُوا لِي يَا رَسُولَ اللَّهِ قَالَ هَذِهِ الْخُطْبَةَ الَّتِي سَمِعَهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه البخاري

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் தன் தூதருக்கு மக்கா நகர வெற்றியை அளித்த போது அவர்கள் மக்கள் மத்தியில் நின்று அல்லாஹ்வைப் புகழ்ந்து விட்டு, “அல்லாஹ் மக்காவை (துவம்சம் செய்வதை) விட்டு யானை(ப் படை)யைத் தடுத்தான். அதன் மீது (தற்போது) தன் தூதருக்கும் (எனக்கும்) மூமின்களுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளான். இந்த மக்கா நகரில் எனக்கு முன்பும் எவருக்கும் போரிடுவதற்கு அனுமதியüக்கப்பட்டதில்லை. எனக்கும் கூட (இதில் போரிடுவதற்கு) பகலின் ஒரு சிறிது நேரத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. எனக்குப் பின்பும் அது எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

இதன் வேட்டைப் பிராணிகள் விரட்டப்படக் கூடாது. இதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. இதில் கீழே விழுந்து கிடக்கும் பொருளை (எடுத்து வைத்துக் கொள்வது) அதை அறிவிப்புச் செய்பவருக்கே தவிர வேறெவருக்கும் அனுமதிக்கப்படாது. எவருக்குக் கொல்லப்பட்ட தன் உறவினர் தொடர்பான உரிமை இருக்கின்றதோ அவர் இரண்டு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒன்று, அவர் நஷ்ட ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது அதற்காகப் பழிவாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள், “இத்கிர் புல்லைத் தவிரவா? ஏனெனில், அதை நாங்கள் எங்கள் கப்ருகளுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்துகிறோம்” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இத்கிர் புல்லைத் தவிரத் தான்” என்று கூறினார்கள். அப்போது யமன்வாசிகளில் ஒருவரான அபூ ஷாஹ் (ரலி) என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (இதை) எனக்கு எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அபூ ஷாஹுக்கு எழுதிக் கொடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.

(அறிவிப்பாளர்கüல் ஒருவரான வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) கூறுகிறார்:) நான் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு எழுதிக் கொடுங்கள்’ என்னும் அபூஷாஹ் (ரலி) அவர்களுடைய சொல் எதைக் குறிக்கின்றது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதரிடமிருந்து அவர் கேட்ட இந்த உரையைத் தான் (எழுதிக் கொடுக்கச் சொன்னார்)” என்று பதிலளித்தார்கள்.

புகாரி (2434)

நூறாண்டுகளுக்கு பிறகு சொன்னவர்களின் வாதம் உண்மை என்று எப்படி நம்புவது என்று கேட்டுள்ளீர்கள்.

இன்றைக்கு உலகில் நடக்கின்ற நிகழ்வுகளையும் முன்பு நடந்த எத்தனையோ விஷயங்களையும் நீங்கள் எப்படி நம்பிக்கொண்டு இருக்கின்றீர்கள்? ஒருவர் ஒரு செய்தியை கொண்டு வந்தால் அவர் நம்பகமானவரா என்று பார்ப்போம். நம்பகமானவராக இருந்தால் ஏற்போம். இல்லையென்றால் அந்த செய்தியை மறுத்துவிடுவோம். நமக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை அறிய வேண்டும் என்றால் அதற்குரிய சரியான வழி இது தான். இதை நிராகரித்துவிட்டால் ஹதீஸ்கள் என்ன? நமக்கு முன்னால் உலகில் நடந்த எந்த வரலாற்றுச் செய்திகளையும் நம்மால் நம்ப முடியாது.

ஹதீஸ்கள் என்பது நூறாண்டுகளுக்கு பிறகு வந்தவர்களின் கூற்று அல்ல. ஒருவரிடமிருந்து ஒருவர் கேட்டு சங்கிலித்தொடராக வருபவை. நபி (ஸல்) அவர்களிடமிருந்து நபித்தோழர் கேட்பார். நபித்தோழரிடமிருந்து தாபிஉ கேட்பார். தாபிஉவிடமிருந்து அடுத்த நூற்றாண்டில் வந்தவர் கேட்பார் இப்படி புத்தக ஆசிரியர் வரைக்கும் தொடர்பு முறிவில்லாத முழுமையான அறிவிப்பாளர் தொடர் கொண்ட செய்திகளையே நாம் ஏற்போம். அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்களாக இருக்க வேண்டும்.

நடைமுறையில் ஒரு செய்தியை ஏற்பதற்கு இது போன்ற அற்புதமான விதிமுறைகளை நாம் கண்டுகொள்வதில்லை. எந்த ஒழுங்கு முறையும் இல்லாமலேயே நாம் தகவல்களை ஏற்றுவருகிறோம்.

ஆனால் ஹதீஸ்களை பொறுத்தவைரை சரியான நிபந்தனைகளுக்கும் முறையான விதிமுறைகளுக்கும் உட்பட்டு இருந்தாலே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே ஹதீஸ்களை ஏற்றுக்கொள்வது தான் அறிவுடமை.

ஹதீஸ்களின் அவசியத்தை நீங்கள் விரிவாக அறிய சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய குர்ஆன் மட்டும் போதுமா? என்ற புத்தகத்தை வாசியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக