வெள்ளி, 25 மார்ச், 2011

தடம் புரண்ட ஜாக்

ஜம்மியத்து அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் என்ற ஜாக் இயக்கம் மௌலவி பி.ஜே அவர்களால் தோற்றுவிக்கப்பட்டதாகும். அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் இயக்கத்திற்கு தலைவராக இருந்த பிஜே, தலைவர் பொருப்பில் இருப்பது தவ்ஹீத் பிரச்சாரத்தை பாதிக்கிறது என்ற நோக்கில் கமாலுதீன் மதனியை தலைவராக ஆக்கிவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்தார். அன்றைய அவ்வளவு எதிர்ப்புகளையும் அடிதடி வெட்டுக்குத்துக்களையும் மீறி வெடித்துக்கிளம்பிய ஒரு இயக்கம் தான் இந்த ஜாக். குர்ஆன் மற்றும் ஹதீஸ் இரண்டை மட்டும் தான் பின்பற்றவேண்டும் என்ற நோக்கில் அன்றைக்கு இருந்த வழிகேடுகளைத் தவிர்த்து விட்டு உண்டாக்கப்பட்ட இந்த‌ இயக்கம், இன்றைக்கு அவர்களின் சுய நலனுக்காகவும் உலக ஆதாயங்களுக்காகவும் மட்டுமே இரத்தம் சிந்தி உண்டாக்கப்பட்ட ஒரு இயக்கம் இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தால் நமக்கு வெறுப்பு தான் மிஞ்சும்.

அதாவது சினிமாவை வெறுத்து அதிலிருந்து வெளியேறி சினிமாவே ஹராம் என்று சொன்னவன் இன்றைக்கு அவனே சொந்தமாக‌ சினிமா தியேட்டர் கட்டி டிக்கெட் கிழித்த கதையாக ஆகிவிட்டது இன்றைய ஜாக்கின் நிலை.

எதையெல்லாம் வழிகேடுகள் என்று சொன்னார்களோ, இன்றைக்கு அதெல்லாம் சரி என்ற ரீதியில் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது தான் சஹாபாக்கள் மற்றும் இமாம்கள் என்ற ரீதியில் இறங்கிவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் தர்ஹா, தரீக்கா என்ற ரீதியில் இறங்கி கழிசடையாகி கடைசியில் 1980 களுக்கு முன் எந்த நிலையில் இருந்தார்களோ அந்த நிலைக்கு விரைவில் வந்து விடுவார்கள் என்று தான் நினைக்கத்தோன்றுகிறது.

பிறை விசயத்தில் பயங்கர பில்டப் கொடுத்து தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே ரீதியில் பிறையைப் பிடித்து தொங்கிக்கொண்டிருந்தார்கள். அமீருக்கு கட்டுப்படுதல் என்பது பிஜே இன்றைக்கு எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர். ஆனால் ஜாக்கின் வழிகெட்ட கொள்கையில் மிக முக்கியமானது அமீருக்கு கட்டுப்படுதல். இந்த அமீருக்கு கட்டுப்படுதலும், பிஜே அவர்கள் எழுதியிருக்கும் அமீருக்கு கட்டுப்படுதலும் ஒன்றுக்கொன்று முரண்படும். காரணம் ஜாக் என்ற வழிகெட்ட இயக்கத்தில் அமீர் என்ன சொன்னாரோ அது தான் ஃபத்வா ஆகும். நாளை முதல் தண்ணீர் ஹராம் என்று சொன்னால் அதை ஏன் எதற்கு என்று கேட்காமல் பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கொண்டே கட்டுப்பட வேண்டியது தான் ஜாக்கில் இருப்பதற்கு தகுதிகள் ஆகும். இந்த வழிகெட்ட கூட்டத்தினர் ஒப்புக்கொண்டு வெளியிட்ட அல் ஜன்னத் பத்திரிக்கையின் ஒரு பகுதி தான் இது. தாமதமாக கிடைத்ததால் செய்தியும் தாமதமாகிறது.

முக்கியக் குறிப்பு:

இவர்கள் எழுதியுள்ள குறிப்பு எண் 9ம் குறிப்பு எண் 11 ம் ஒன்றுக்கொண்டு நேராக மோதுவதை கவனியுங்கள்

நபித்தோழர்களை மதிக்க வேண்டும் என்ற விசயத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்றைக்குமே முரண்பட்டதில்லை. ஆனால் வஹி என்பது ரசூலுல்லாஹ் அவர்களின் காலத்தோடு நின்று போய்விட்டதால் நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவதோடு நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும், அவர்களை பின்பற்ற வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

உமர் ரலி அவர்களின் ஹதீஸ் பலகீனமானது என ஒரு நண்பர் ஆதாரப்பூர்வமாக சுட்டிக்காட்டியதால் அது நீக்கப்படுகிறது. ரசூலுல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் வஹி வராது என்ற நோக்கில் மட்டுமே ஸஹாபாக்களைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணரலாம்

ஆக ஜாக் மற்றும் அதன் விசுவாசிகளே! நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக